என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தேர்தலில் போட்டியிடாமல் பயந்து ஒடியவர் நாராயணசாமி-அமைச்சர் நமச்சிவாயம் கடும் தாக்கு
- திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நடததது.
- நாராயணசாமி ஆட்சி காலத்தில் எல்லாவற்றை யும் சிறப்பாக செய்திருந் தால் அவர் தேர்தலில் போட்டியிருக்க வேண் டியதுதானே? ஏன் தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடினார்?
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நடததது.
மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் தலைமை ஆசிரியா் சிவகங்கை மற்றும் ஆசி ரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களி டம் கூறியதாவது:-
தேசிய் ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்து கின்ற நலத்திட்டங்களை பார்த்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல் அமைச்சராக இருந்த. காலத்தில் என்ன திட்டங் களை செயல்படுத்தினார்?
இப்போது என்னென்ன திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது என்பது மக் களுக்கு நன்றாக தெரியும்.
நாராயணசாமி அரசிய லில் இருப்பதை காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ கட்சியிலும் கூட்டணி யிலும் இருக்கின்ற பிரச்சினை களை மறைப்பதற்காகவும், ஆளுங்கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டு களை கூறி கொண்டிருக் கிறார்.
அவர்கள் போராட்டம் செய்வதால்தான் வேண் டியது கிடைக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற போராட்டங்களை செய்கி ன்றனர்.மாணவர்க ளுக்கு இலவச பஸ், மதிய உணவோடு 2 முட்டை கொடுக்கப்படுகிறது.அனைத்து பள்ளிகளில்லும் ரெயின் கோட் வழங்கப்படுகிறது.வெகு விரைவாவாக 'குடை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாராயணசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது எத்தனை பேருக்கு சீருடை சைக்கிள் கொடுத்துள்ளார்? என்று சொல்ல சொல்லுங் கள் அனைத்து திட்டத்தை யும் நிறுத்திவிட்டு சென்றவர் அவர்தான்.
நாராயணசாமி ஆட்சி காலத்தில் எல்லாவற்றை யும் சிறப்பாக செய்திருந் தால் அவர் தேர்தலில் போட்டியிருக்க வேண் டியதுதானே? ஏன் தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடினார்.? அவருடைய ஆட்சி காலத்தில் எதையும் செய்யாததால் அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்துதான் தேர்தலில் போட் டியிடவில்லை.
எனவே, அரசின் மீது தேவையற்ற பழியை சுமத்த பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.போராட்டம் செய்வது நாராயண்சாமிக்கு கைவந்த கலை. ஆளும் கட் சியாக இருந்தாலும், எதிர்க கட்சியாக இருந்தாலும் போராட்டம் செய்வார். கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகி றோம். பொதுமக்கள், விவ சாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப ஆலையை வெகு விரைவில் இயக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்