search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan election"

    • நவாஸ் ஷெரீப்- பிலாவல் இணைந்து கூட்டு வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரியை நிறுத்தியுள்ளனர்.
    • இம்ரான் கான் தற்போது தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நவாஸ் ஷெரீப் கட்சியும், பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடைபெற்ற போதிலும் இதுவரை அரசு அமைக்கப்படவில்லை.

    நவாஸ் ஷெரீப்- பிலாவல் கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான் முகமது கான் அசாக்ஜாய்-ஐ அவரது கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    முகமது கான் அசாக்ஜாய் பஸ்துன்-க்வா மிலி-அவாமி கட்சியின் தலைவர் ஆவார். சன்னி இத்தேஹாட் கவுன்சில் ஆதரவு பெற்றவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், அதிபர் தேர்தலில் முகமது கான் அசாக்ஜாய்க்கு வாக்களிக்கும்படி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தாரி இன்று வேட்புமனு தாக்கல் இருக்கிறார்.

    தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், அரசியல் அசாதார சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.

    பாகிஸ்தான் தேர்தல் விதிப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் மற்றும் நான்கு மாகாண உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானர்கள்.

    • பாராளுமன்றத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • அடுத்த வாரம் நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்று 3 வாரங்கள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் நாட்டின் காபந்து பிரதமராக இருக்கும் அன்வார்-உல்-ஹக் கக்கார் தனது பிரதமர் அலுவலக பணிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளார். தனது ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கோப்புகள் அனைத்திலும் கையழுத்திடவில்லை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்துள்ளார். "புதிய அரசின் தொடக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் புதிய நிர்வாகத்திடம் வழங்குவோம்" என்றார்.

    பாகிஸ்தானின் காபந்து அரசின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், பிப்ரவரி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக இதை நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் ஆரிஃப் அல்விக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை பாகிஸ்தான் அதிபர் நிராகரித்துள்ளார்.

    மேலும், புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாக அனைத்து ஒதுக்கீடு இடங்களும ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    2018-ம் ஆண்டும் ஆரிஃப் அலிவி பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் கட்சியின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்தும் ஆட்சியமைக்க முடியவில்லை.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன. அடுத்த வாரம் ஆட்சி அமைக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி தேர்தலுக்கு இரு கட்சி சார்பிலான வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். அதன்படி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட அமைச்சகம் ஒப்பதல் கேட்டிருந்தது.

    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
    • தேர்தல் முடிவு மாற்றப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்துள்ளன. அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷனரான லியாகத் அலி சத்தா, இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பத்திரிகையாளர்களின் பேசினார். அப்போது "தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

    நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக இதில் ஈடுபட்டார்கள்.

    இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட லியாகத் அலி சத்தா தனது அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றார். நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்கான எந்த தவறான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடையே வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இம்ரான் கானின் தெஹ்ரிக்-ரீ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும், முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

    அதன்பின் சனிக்கிழமை இறுதியாக அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் பொதுத்தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அறிவித்தார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என போட்டியாக அறிவித்தார். அத்துடன் பிலாவல் பூட்டோ உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஷெரீப் முடிவு செய்தார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு.
    • நவாஸ் ஷெரீப் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

    இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

     

    ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.

     இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.

    இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.

    • தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை.
    • தேர்தல் முடிவு காலதாமதம் ஆனதால் இம்ரான் கான் கட்சி இன்று போராட்டம் நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கினாலும் அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு சேதம் அடைந்த வாக்குசாவடிகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறது தேர்தல் ஆணையம். மேலும், தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

    அதன்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவுக்குள் அனைத்து இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இன்று போராட்டம் நடத்தப்படும் என இம்ரான் கான் கட்சி தெரிவித்திருந்தது. இன்று காலை வரை சுமார் 10 தொதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் அறிவித்தபடி அக்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    265 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதாக தெரிவித்தனர். தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று உள்ளதாக அந்த கட்சியினர் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால் தேர்தலில் தனது கட்சி தான் வெற்றி பெற்றதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 27 இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

    ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வில்லை. இதனால் ஆட்சியை அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை அமைக்க நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் அவரது கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப்-பிலாவல் பூட்டோவின் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் அவர்களுக்கு 6 இடங்கள் தேவைப்படுகிறது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் கட்சியுடன் அதிகாரப்பூர்வ மாக இன்னும் பேச்சு வார்த்தை எதுவும் நடத்த வில்லை என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. 3 சுயேட்சை வேட்பா ளர்கள் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். நவாஸ் ஷெரீப் புக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 37 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நவாஸ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி.
    • இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    வாக்கி எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் இம்ரான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், முடிவுகள் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு லட்சத்து 71 அயிரத்து 024 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளல் வெற்றி பெற்றுள்ளது.

    265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே முடிவுகள் தாமதம் ஆவதற்கு தகவல்தொடர்பு குறைபாடுதான் காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்ரான கான் கட்சியின் கோஹர் அலி கான் என்.ஏ.10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    நவாஸ் ஷெரீப் கட்சியின் ஹம்சா ஷெபாஸ் லாகூரில் உள்ள என்.எ.118 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

    • தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
    • தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இம்ரான் கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதாக தெரிகிறது. நவாஸ் ஷெரீப் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

    இதனால் இம்ரான் கான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செயலாளர் ஜபர இப்பால் முதல் முடிவை வெளியிட்டார்.

    அதன்படி இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். கைபர் பக்துன்கா மாகாணத்தில் உள்ள பிகே-76 தொகுதியில் சமியுலலா கான் 18 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளர் பஜல ஹக்கீம் கான் பிகே-6 தொகுதியில் 25330 வாக்குகள் பெற்று பெற்று பெற்றுள்ளார். அதேபோல் அலிகான் பிகே-4 தொகுதியில் 30022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் அளவிற்கு போதுமான இடங்களை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்துகிறது. தேர்தல் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    நவாஸ் ஷெரீப் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

    இம்ரான் கான் கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுத்தேர்தலின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என அச்சம்.
    • மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகம் கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என மந்திரி அறிவித்திருந்தார்.

    பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தற்போது நடைபெற்று வரும் காபந்து அரசு நினைக்கிறது.

    இதனால் உள்துறை மந்திரி கோஹர் இஜாஸ், அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய அளவில் செல்போன் சேவையை தடைசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு அச்சுறத்தல் தொடர்பாக வேண்டுகோள் வந்தால், அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

    ஆனால், அரசு சாரா பல்வேறு அமைப்புகள் தேர்தலின்போது தடையில்லா இணைய சேவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம், பொதுத்தேர்தலில் மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தொடர்ந்து இணைய தள சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்து வைக்க வேண்டும் என அரசிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.

    நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் கட்சி, பெனாசீர் பூட்டோ மகன் கட்சி ஆகியவை பொதுத்தேர்தலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

    இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • தேர்தலில் போட்டியிடும் நவாஸ் ஷெரீப் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவரின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமான நடைபெற்று வருகிறது.

    நவாஸ் ஷெரீப் தேசிய தேர்தலுக்கான 130-வது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கட்சியின் சின்னத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் சிங்கம் மற்றும் புலியுடன் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொண்டு வந்தது  காகித சிங்கம், புலி அல்ல. நிஜ சிங்கம், புலி.

    கூண்டில் அடைத்தவாறு கொண்டு வந்திருந்தனர். இதைப்பார்த்து மற்ற தொண்டர்கள் அதிர்ச்சி  அடைந்த போதிலும், மறுபக்கம் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்ததால் அவற்றுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நிஜ சிங்கம், புலியுடன் பேரணியில் கலந்து கொண்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மரியும் அவுரங்ஜப், நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலின்படி அந்த சிங்கம், புலி திருப்பி கொண்டு செல்லப்பட்டன.

    பாகிஸ்தானில் உயிருள்ள சிங்கம் மற்றும் மற்ற விலங்கினங்களை பேரணிக்கு கொண்டு வரக்கூடாது என நாவஸ் ஷெரீப் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
    • தற்போது கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது.

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாய் கட்சி தலைவரான இம்ரான் கான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த 2 மனுக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    இந்த நிலையில் இம்ரான் கான் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி அக்கட்சி சின்னமான கிரிக்கெட் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தெக்ரிக்-இ-இன்சாப்பின் உட்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறியதாக சின்னத்தை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து பெஷாவர் ஐகோர்ட்டில் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வழக்கு தொடர்ந்து உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

    கோர்ட்டின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. அதில் தீர்ப்பளித்த கோர்ட்டு, கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது. தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவு பிராந்திய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

    பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாக் கட்சிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. தேர்தல் ஆைணயம் அதன் அரசியல் அமைப்பு தேர்தல் செயல்முறையை தொடங்கு மாறு அறிவுறுத்தப்படுகிறது என்று கோர்ட்டு தீர்ப்ப ளித்தது.

    இதுகுறித்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் தலைவர் கோஹர்கான் கூறும்போது,

    தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.

    பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை கட்சி புறக்கணிக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. எங்களுக்கு கிரிக்கெட் மட்டையை ஒதுக்க முடியாவிட்டால், எங்களுக்கு வேறு சின்னம் தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கேட்போம் என்றார்.

    ×