search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nawaz Sharif"

    • நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
    • பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் 9-ந் தேதியன்று பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் அவர் 2-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிப் அலி சர்தாரி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார்.

    • மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார்கள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.

    மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் மரியம் நவாஸ்.

    50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

    • பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது
    • 2 வருடங்கள் என்னை பிரதமராக்க ஆதரவு தருவதாக கூறினார்கள் என்றார் பூட்டோ

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

    இத்தேர்தலில் பிலாவல்-பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி (PTP) மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) ஆகிய கட்சிகள் களமிறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.

    இதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTP) கட்சியை சேர்ந்த பல சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இத்தேர்தல் முடிவுகளில் எவருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    தற்போது வரை பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது.

    தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் ஷரீஃபும் ஆட்சியமைப்பது குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சிந்து மாகாணத்தில், தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.

    ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை.

    எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை.

    நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.

    அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு பிலாவல் கூறினார்.

    தேர்தல் முறையாக நடைபெறவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு.
    • நவாஸ் ஷெரீப் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

    இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

     

    ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.

     இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.

    இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.

    • 266 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 அன்று நடந்தது
    • பூட்டோ, நவாஸ் பேச்சு வார்த்தையை தொடங்கினர்

    பாகிஸ்தான் பாராளுமன்றம், செனட் (Senate) எனும் மேல்சபை மற்றும் தேசிய அசெம்பிளி (National Assembly) எனும் கீழ்சபை ஆகிய இரு அவைகளை கொண்டது.

    தேசிய அசெம்பிளியில் 342 இடங்கள் உள்ளன.

    இவற்றில் 266 இடங்களுக்கான உறுப்பினர்கள் பொதுமக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இவற்றை தவிர 70 இடங்கள் பெண்களுக்கும், மைனாரிட்டி வகுப்பினருக்கும், 6 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 அன்று மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இன்சாஃப் (Pakistan Tehreek-Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வென்றுள்ளனர். இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபி கட்சி, அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களே பெற்றுள்ளது.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Pakistan Muslim League) கட்சி 73 இடங்களில் மட்டுமே வென்றது.

    பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party) வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக பலர் குற்றம் சாட்டினர்.

    இம்ரான் கான், அதிபராவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.

    வரும் நாட்களில் அதிபர் யார் என்பது உறுதியாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    • பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தம்
    • நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெற்றது.வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
    • மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிக்க நாடுமுழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகி யவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், லாகூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரதமராக பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.
    • தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை ராணுவம் கொண்டு வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் நவாஸ் ஷெரீப் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிய காரணம் இந்தியா அல்ல. ஏன் அமெரிக்காவோ, ஆப்கன் கூடஅல்ல.

    நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். 2018-ல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, ராணுவம் கொண்டு வந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அரசியல் சாசனத்தை ராணுவம் மீறியபோது அதனை நீதிபதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் என வரும்போது பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர். பாராளுமன்றத்தைக் கலைக்கும் செயலுக்கு ஒப்புதல் அளித்தனர் என தெரிவித்தார்.

    • பிரதமரான 3 முறையும் நிறைவு காலத்திற்கு முன்பே பதவியை இழந்தார்
    • கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால் பதவியை இழந்தேன் என்றார் நவாஸ்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2024 பிப்ரவரி 8 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் முகமது நவாஸ் ஷரீப் (73). மூன்று முறையும், இவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பல்வேறு காரணங்களால் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷரீப், அடுத்த வருட தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

    இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    1999ல் இந்தியாவிற்கு எதிராக ஜெனரல் முஷாரப் கார்கில் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நான் எதிர்த்தேன். அதனால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவுடன் நேர்மறையான உறவு வேண்டும் என விரும்புபவன் நான். 3 முறை பிரதமராக இருந்த போதும், நியாயமற்ற காரணங்களுக்காக பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்.

    எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய் அவர்களும் (1999), மோடி அவர்களும் (2015) பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எந்த அதிபரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததில்லை.

    தனது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகள் எங்களுடன் வருத்தத்தில் இருந்தால் உலக அளவில் மதிப்புமிக்க நாடாக நாங்கள் எப்படி மாற முடியும்? நாங்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் சுமூக உறவு நிலவுவதையே விரும்புகிறோம்.

    இவ்வாறு ஷரீப் கூறினார்.

    நவாஸ் ஷரீப்பின் இந்த கருத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் நல்ல நோக்கமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    • லண்டன் சென்ற நவாஸ் சுமார் 4 வருடங்கள் அங்கேயே வசித்து வந்தார்
    • அவரை மீண்டும் பிரதமராக்க அவர் கட்சியினர் தீவிரமாக செயலாற்றுகின்றனர்

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

    இவர் கடந்த 2018ல், "அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ்" (Avenfield Properties) எனும் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்நாட்டு பஞ்சாப் நீதிமன்றம், 10 வருட சிறை தண்டனையும், இவ்வழக்கில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்துடன் (National Accountability Bureau) ஒத்துழைக்காதற்காக 1 வருட சிறை தண்டனை என மொத்தம் 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதே வருடம் அல்-அசிசியா எக்கு தொழிற்சாலை ஊழல் வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.

    ஆனால் 2019ல், மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டி அனுமதி கேட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போதிலிருந்து நவாஸ் ஷெரீப் அங்கேயே வசித்து வந்தார்.

    சுமார் 4 வருடங்கள் கழித்து நவாஸ் ஷெரீப், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு திரும்பினார். அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரை முன்னிறுத்த அவரது கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று, அவருக்கான தண்டனையை செயலாக்குவதை அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாகிஸ்தானின் காபந்து அரசாங்க கேபினெட் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார்.

    இது நவாஸ் ஷெரீப்பின் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இதற்கிடையே வாடகை விமானம் மூலம் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் லாகூரில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன், ஆனால் உங்களுடனான எனது அன்பு உறவும் அதேதான். இந்த உறவில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க விரும்பியபோது, வெளிநாட்டு அரசாங்கங்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்தன.

    அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருப்பதற்காக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நமக்கு 5 பில்லியன் டாலர் தருவதாக கூறினார்.

    ஆனால் அவற்றையும் மீறி 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என தெரிவித்தார்.

    • 2019-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற நவாஸ் ஷெரீப் அதன்பின் நாடு திரும்பவில்லை
    • ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சொந்த நாடு திரும்பியுள்ளார்

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இந்த நிலையில் இன்று வாடகை விமானம் மூலம் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    73 வயதாகும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரான ஷெரீப் துபாயில் இருந்து இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள், மூத்த கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உடன் வந்தனர்.

    முன்னதாக, பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கோர்ட்டு ஜாமின் வழங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு சிகிச்சை பெற்றார். ஜாமின் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 2019-ம் ஆண்டு முதல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.

    இதற்கிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார். இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, "நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    ×