search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PPP"

    • பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது
    • 2 வருடங்கள் என்னை பிரதமராக்க ஆதரவு தருவதாக கூறினார்கள் என்றார் பூட்டோ

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

    இத்தேர்தலில் பிலாவல்-பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி (PTP) மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) ஆகிய கட்சிகள் களமிறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.

    இதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTP) கட்சியை சேர்ந்த பல சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இத்தேர்தல் முடிவுகளில் எவருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    தற்போது வரை பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது.

    தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் ஷரீஃபும் ஆட்சியமைப்பது குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சிந்து மாகாணத்தில், தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.

    ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை.

    எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை.

    நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.

    அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு பிலாவல் கூறினார்.

    தேர்தல் முறையாக நடைபெறவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிப் அலி சர்தாரி 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர்.
    • பிலாவல் பூட்டோ 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

    பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அதிபர் வேட்பாளராக அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்த பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இதில் பிலாவல் பூட்டோ 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

    தற்போது இந்த இரு கட்சிகளும் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அதிபர் பதவிக்கு நடக்க உள்ள தேர்தலில் பிரதமர் இம்ரான் கான் நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து, நவாஸ் ஷரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சி பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் மம்னூன் உசைனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் தனது பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் ஆரிப் அல்வியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. 

    இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் ஆண்ட கட்சிகளான நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து அதிபர் தேர்தலி பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். #Pakistan #Parliament #PMElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.

    116 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, சிறிய கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்க உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதற்கான அழைப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் விடுத்து உள்ளார். இன்று புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.



    அதைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

    நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) 64 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்றொரு முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் கைகோர்த்து உள்ளன. இது ஒரு பக்கம் இம்ரான்கான் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    நடக்க உள்ள சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு இந்தக் கட்சிகள் பலத்த போட்டியை உருவாக்கும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் லாகூர் மாதிரி நகரில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ராஸா கிலானி, முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சையத் குர்ஷீத் ஷா, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) மூத்த தலைவர் கவாஜா ஆசிப், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி, கூட்டு வியூகம் ஒன்றை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியும் வகுத்து உள்ளன.

    பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப் நிறுத்தப்படுகிறார்.இம்ரான் கானுக்கு ஷாபாஸ் ஷெரீப் கடும் போட்டியை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் நிலவுகிறது.  #Pakistan #Parliament #PMElection 
    ×