search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடரும் குழப்பம்
    X

    பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடரும் குழப்பம்

    • பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
    • தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி, இதனை அறிவித்தார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

    புதுச்சேரி பா.ஜனதா நிர்வாகிகள், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    அதேநேரத்தில் புதுச்சேரி அரசியலில் இருந்து தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    அதோடு புதுச்சேரி அரசியலில் தொடரவும் அவர் விரும்புகிறார். இதனை கட்சித்தலைமையிடமும் தெரிவித்து, தான்போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெறச்செய்வது தனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ., மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை அறிவிப்பது என பா.ஜனதா கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

    இதற்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பரிசீலனையில் உள்ள 4 பேரும் புதுச்சேரியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் வெளிமாநில வேட்பாளரை நிறுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்க சாமியும், புதுச்சேரி பா.ஜனதாவினரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×