search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்,
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

      தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ரகசிய தகவலின் பேரில் தருமபுரி காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் பாலக்கோட்டில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது எலுமிச்சன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இருவரும் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அணில் ரகுமான் (28), முக்குளத்தைச் சேர்ந்த கணேசன் (30) என்பதும் தெரியவந்தது. இருவரும் தருமபுரியில் இருந்து காவேரிப்பட்டி னத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியையும் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.

    ரேஷன் அரிசி முட்டை கள் தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • விவசாயியை கொலை செய்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • தாயுடன் உறவில் இருந்ததால் மகன் ஆத்திரம்.

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50) என்பவர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தார் நாகராஜனை தேடி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து அதே பகுதியை சதிஷ்குமார் (20) என்பவரை போலீசார் கைது விசாரணை செய்தனர். அதில் சதிஷ்குமார் தாயுடன் நாகராஜன் தவறான உறவில் இருந்துள்ளார். இதனை பல முறை சதிஷ்குமார் கண்டித்துள்ளார். இதனை கேட்காமல் நாகராஜன் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நாகராஜனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சதிஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • அதிக பணம் தருவதாக கூறி பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.
    • தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கோகுல் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அண்ணா நகர் பகுதியில் சந்தேக படும்படியாக நின்று கொண்டி ருந்த வட மாநில பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தான் கொல்கத்தா மாநிலம் மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலி வேலை தேடி வந்த தன்னை குப்பு என்பவரின் மகள் ராஜாமணி (வயது 65) கோவையை சேர்ந்த வீராசாமி (43) மற்றும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

    • தருமபுரி அருகே வன விலங்களை வேட்டையாடியவர் சிறையில் அடைப்பு
    • வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கணவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(50). விவசாயி. இவர் தேங்கல்மேடு, கரடு, எருது கூட அள்ளி, கணவன அள்ளியை ஒட்டியுள்ள வன பகுதிகளில் இரவு நேரங்களில் முயல் ,காட்டு பன்றி, காடை, கெளதாரி, கீரிபிள்ளை உள்ளிட்ட வன விலங்குகளை நாட்டு வெடி, கூண்டு, கம்பி வலை போன்றவற்றின் மூலம் வேட்டையாடி வந்துள்ளார்.

    நேற்று கணவனஅள்ளி அருகே உள்ள வனப் பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி மற்றும் வலையுடன் நின்றிருந்தவர் வன காவலர்களை கண்டதும் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் வன விலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.

    அவரை பிடித்து சென்று அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி, நாட்டு வெடி, மற்றும் உப்புக்கறி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த வன துறையினர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன்
    • பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்

    பல்லடம் : 

    மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவர் கடந்த செப்.18-ந்தேதி பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் பிரபாகரன் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீது மதுரை, அவிநாசி, சேலம், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்மொழிவின் பேரில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் குற்றவாளி இளங்கோவனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு அளிக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை பல்லடம் ேபாலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த லாரி ஒரு வழிப்பாதையில் திரும்பியது.

    இதனை கவனித்த அவர் அதில் இருந்த 2 டிரைவர்களையும் திரும்பி போகும்படி கூறினார். அப்போது அவர்களுக்கி டையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த 2 பேரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பியை தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40), தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.   

    • ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (45), இவர் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • காரில் சேர்மன் ஆப் இந்தியாக எம்.எஸ்.எம்.இ. நேசனல் புரமோசன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (45), இவர் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60 )என்பவர் பழக்கமானார். அவர் சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் அனைத்து இந்திய தலைவர் எனக்கூறி வ்ந்தார். அவர் பயன்படுத்திய காரில் சேர்மன் ஆப் இந்தியாக எம்.எஸ்.எம்.இ. நேசனல் புரமோசன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அவரிடம் கோபால்சாமி பேசிய போது அந்த அமைப்பின் தமிழக கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறினார். அதற்கு 3.50 கோடி கேட்டார். கடந்த 10-ந் தேதி 50 லட்சம் ரூபாயுடன் சேலம், திருவாக்க வுண்டனூர் பைபாஸ் வர அறிவு றுத்தினார். அங்கு சென்ற கோபால் சாமி ரூ.31 லட்சம் ரூபாயை கொடுத்தார்.

    அதனை வாங்கிய முத்துராமன் உடன் இருந்த பஞ்சாப் மாநிலத்ைத சேர்ந்த துஷ்யந்த் (34 )என்பவரிடம் கொடுத்தார். தொடர்ந்து முத்துராமன் வங்கி கணக்கில் 19 லட்சத்தை கோபால் சாமி அனுப்பினார். பணத்தை பெற்ற அவர் பதவியை பெற்று தரவில்லை.

    இதனால் கோபால்சாமி கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது 9 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி 41 லட்சத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

    இதற்கிைடயே சேலத்தில் உள்ள ஓரு ஓட்டலில் எம்.எஸ்.எம்.இ. ப்ரோமோசன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கூட்டம் நடந்தது. இதில் முத்துராமன், துஷ்யந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது முத்துராமன் 3-ம் வகுப்பு வரை படித்திருப்பதும், பொதுப்பணித்துறை காண்டிராக்டரான அவர் டெல்லி சென்ற போது துஷ்யந்துடன் பழக்கம் ஏற்பட்டதும் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த அமைப்பை தொடங்கி மதுரையில் ஏற்கனவே கூட்டத்தை நடத்தி உள்ள நிலையில், தற்போது சேலத்தில் 2-வது கூட்டத்தை நடத்தி கடன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது.

    கைது

    இதையடுத்து முத்துராமன் , துஷ்யந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது தேசிய கொடியை பயன்படுத்தியது, அரசு எம்பளத்தை பயன்படுத்தியது, கடன் வாங்கி தருவதாக ஏமாற்ற முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் பயன்படுத்திய தேசிய கொடி கட்டிய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே கைதான முத்துராமன் மற்றம் துஷ்யந்த் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரம் இது போல வேறு யாரையும் ஏமாற்றினார்களா ? என்பது குறித்தும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
    • ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    ஓவிய ஆசிரியர்

    இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

    இதுபற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போலீசுக்கு தகவல்

    இதுபற்றி தெரிய வந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி சுமன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனராசு, முத்து கிருஷ்ணன், மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    வாக்குவாதம்

    பொதுமக்கள் சமசரம் அடையாமல் ஆசிரியர் ராமமூர்த்தியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தனர். இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை ஒரு அறையில் இருந்து வெளியே கொண்டு வர முயன்றனர்.

    கைது

    இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னர். பின்னர் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர். பின்னர் வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சிறையில் அடைப்பு

    பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை சஸ்பெண்டு செய்யவும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் கோபி சாலை ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த வர் சகுந்தலா (65). இவர் வீட்டு அருகே தேங்காய் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் சகுந்தலா கடைக்கு வந்தார். இதை யடுத்து அன்று இரவு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த அந்த வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி சகுந்தலாவை தாக்கினார்.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் கானைகோனூர் புதுக்காலனியை சேர்ந்த கிறிஸ்தாஸ் (25) என்பதும், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் சகுந்தலாவை தாக்கி செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து செல்போனை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சந்திரனை கைது செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கொமரன். இவரது மகன் கருப்புசாமி (32). அதே பகுதியை சேர்ந்த வர் முருகன். இவரது மகன் சந்திரன் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்கள் பனியன் கம்பெனி யில் தொழிலாளிகளாக வேலை செய்து வரு கிறார்கள்.

    இந்நிலையில் கருப்புசாமி செல்போனை சந்திரன் எடுத்து சென்றதாக கூறப் படுகிறது. இது குறித்து கருப்புசாமி, சந்திரனிடம் கேட்டார். அப்போது கருப்புசாமியை சந்திரன் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி விட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து கருப்புசாமி வீட்டுக்கு சென்று தூங்கி னார். இதை தொடர்ந்து காலை அவரது பெற்றோர் அவரை எழுப்பினர். அப்போது கருப்புசாமி இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கருப்புசாமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கருப்புசாமியும் சந்திரனும் மது குடித்ததாகவும், போதையில் செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்புசாமியை சந்திரன் ரோட்டில் கீழே தள்ளி விட்டார்.

    இதில் கருப்புசாமி தலையில் அடிபட்டு இருக்கலாம். அது தெரியாமல் அவர் தூங்கியதால் இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வரப்பாளையம் போலீசார் சந்திரனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • தருமபுரியில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • கடத்தலில் தலைமறைவான ராமன்கு மாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜய குமார் தனிப்படை தருமபுரி - பாலக்கோடு சாலையில் மேற்கொண்ட வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தே கப்படும்படி அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் வேனில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேசன் அரிசி இருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த வேட்டராயன் மகன் சிங்காரவேலன் என்பவரை கைது செய்த போலீசார் அவருக்கு நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைத்தனர்.

    இந்த கடத்தலில் தலைமறைவான ராமன்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலில் கைப்பற்றப்பட்ட 550 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்

    • கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
    • இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அந்தப் பகுதியில் சேகோ பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்.

    வயதான பெற்றோர்

    கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கனிமொழி அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன் நாமகிரிப்பேட்டை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    கள்ளக்காதலன்

    இதில் கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர்.

    தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    ×