search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர் சிறையில் அடைப்பு
    X

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், கோவிந்தன், சின்னதுரை

    ராசிபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர் சிறையில் அடைப்பு

    • ராசிபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் மேற்கு வலசு தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டை பிடித்து கொண்டு சென்றதாக கூறினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் மேற்கு வலசு தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று அத்தனூர் கிராமம் பெரிய ஊத்து ஓடை பகுதியில் அவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் 1 கெடா ஆட்டை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டை பிடித்து கொண்டு சென்றதாக கூறினர். இது பற்றி மணி வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளிக்கூடத் தெரு பகுதியைச் சேர்ந்த மத்த ராயன் மகன் சின்னதுரை (39). அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராஜ்குமார் (36) புதூர் மலையான்பட்டி கிராமம் புதூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தன் (40) ஆகிய 3 பேரும் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. திருடிய ஆட்டை பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரிடம் விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ராசிபுரம் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×