என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் வழிபறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு
- ஆலங்குடியில் வழிபறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்
- இது குறித்து புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலம் கச்சிராம்பட்டியை சேர்ந் த கருப்பையா மகன் பழனிவேல்( வயது 48). இவர் மீன் வியாபாரத்துக்கு அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருவரங்குளம் தனியார் கல்லூரி எதிரில் அவரை மறித்த ஒருவர் அவரிடம் இருந்து பொருட்களை பறித்து சென்றுள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இலுப்பூர் தாலுகா கீழக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் விஜய் (எ) விஜய்பிரசாத் (வயது 17) என்பது தெரிய வந்தது. தலைறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கீழக்குறிச்சியில் வைத்து கைது செய்தனர். பின்னர் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர்கள் காப்பகத்தில் அடைத்தனர்.
Next Story