search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது
    • காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்

    அண்மையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி,"இந்தியாவில் ஆட்சி அமைக்க விரும்பினால், குறைந்தது 272 இடங்கள் தேவை. பாஜகவைத் தவிர, நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சியும் 272 இடங்களில் போட்டியிடவில்லை, பின்னர் அவர்கள் (காங்கிரஸ்) எப்படி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்.

    மோடி அவர்களே... உங்களது கணித திறமை அபாரமானது. நீங்கள் முழு கணிதவியல் பாடத்திற்கான டிகிரி வைத்திருக்கிறீர்களா. உத்தரபிரதேசத்தில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக உங்களை அடுத்த மாதமே நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
    • தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலமாக மாறியுள்ளது. இதை நினைத்து அனைவரும் பெருமைபடுவார்கள். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.

    தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.

    நமது ராஜா, மகாராஜாக்களை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) அவமதிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஆளுமைகளை அவமதித்துள்ளார். நாம் அனைவரும் பெருமைபடும் மைசூர் அரச குடும்பத்தினர் பங்களிப்பு அவருக்கு தெரியாதா?

    ஆனால் நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


    நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரசுக்கு நினைவில்லை. அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசும் கட்சியுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைக்கலாம்.

    நமது புனித தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களை கொன்றவர்கள், பசுக்களை கொன்றவர்கள் பற்றி எல்லாம் அவர்கள் பேசுவதில்லை.

    மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமை அளித்தது. நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு கவலை எல்லாம் அவர்களின் வாக்கு வங்கி மட்டுமே.

    பா.ஜனதா அரசு குற்றவியல் நிதி அமைப்பின் காலனித்துவ சட்டங்களை நீக்கியது. பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து உத்தரகன்னடா, தாவன கெரே, பாகல் கோட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதி களில் 14 இடங்களுக்கு கடந்த 26-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மே மாதம் 7-ந் தேதி நடக்கிறது. 

    • ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது.
    • ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    பா. ஜனதாவின் 400 இடங்களுக்கு மேல் என்ற இலக்கின் காரணம், அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற விரும்புவதற்காகத்தான். அதன் மூலம் அவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், இடஒதுக்கீடு இல்லாம இந்தியாவை உருவாக்கவும் விரும்புகிறார்கள்.

    பிரதமர் மோடி, அமித் ஷா நாட்டின் பூர்வீகக்காரர்களாகிய தலித்கள், எஸ்டி-கள் மற்றும் ஓபிசிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்கிறார்கள். இந்த தேர்தலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கான களமாக மாற்ற அவர்கள் (பாஜக) முடிவு செய்துள்ளனர்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது. ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-க்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்க பாஜக முயற்சிக்கிறது.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:-

    ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மோடி, அமித் ஷா ஆகிய இருவரும விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு வாங்குபவர்கள். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்?.

    அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
    • இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்

    பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,

    16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.

    16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.

    இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.

    10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.

    20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

    மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. "காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோ கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது" என அப்பட்ட மான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.

    நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றமாகும்.

    இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன.
    • வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. மோடியின் உத்தரவாதங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் பி. ஆர்.எஸ் வாக்குகளால் பா.ஜ.க. ஆதாயம் அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் 14 இடங்களையாவது கைப்பற்றும்.

    பா.ஜ.க. தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை.

    தென் மாநிலம் உட்பட அனைவரையும் உள்ளடக்கி உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 130 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.வை அதிகபட்சமாக 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற விடமாட்டோம். அதற்குள் அவர்களை கட்டுப்படுத்துவோம்.

    வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும். ஒவ்வொரு மருந்துக்கும் காலாவதி தேதி உண்டு. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
    • இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "நமது சோகமான வாழ்க்கை, நமது பயம், நமது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை கொண்டாடுவதுதான் மோடிஜியின் நோக்கம். ஏனென்றால், நம் இந்தியா இப்போது அநீதியின் காலத்தை நோக்கி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்தான் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" ஏன்னு ரன்வீர் சிங் பேசுகிறார்.

    இந்நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிகை க்ரிதி சனோனுடன் வாரணாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தார். அதன் பின்பு அந்த ஆன்மீக அனுபவங்களை அவர் ANI செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.

    அந்த அசல் வீடியோவில், "உத்தரபிரதேசத்தின் வாரணாசி, காசி கோவிலில் தனது அனுபவம் மற்றும் அந்த நகரத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த வளர்ச்சி குறித்து ரன்வீர் சிங் பேசுகிறார்.

    அந்த வீடியோ தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக, அமீர் கான் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறும் டீப்பேக் AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோ போலியானது என அமீர் கான் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

    பல வருடங்களுக்கு அவர் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் இருந்து இந்த டீப்பேக் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

    • இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி
    • மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்கள் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அவை,

    1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு

    2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்

    4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்

    5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

    6. கார்ப்பரேட்டுகளின் கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி

    7. GST வரி

    8. கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்

    9. சிறுகுறு தொழில்கள் முடக்கம்

    10. IT, ED, CBI போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டது

    11. CAG- 7.5 லட்சம் கோடி ஊழல்

    12. ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் செயலிழப்பு

    13. PM-Cares ஊழல்

    14. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தோல்வி

    15. இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி

    16. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

    17. சாமானிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து 35,000 கோடி அபேஸ்

    18. CAA

    19. பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்

    20. மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    21. சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் முறைகேடு

    22. அக்னிபாத் திட்டம்

    23. புல்வாமா தாக்குதல்-40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது

    24. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தில் வண்ண புகை குண்டுகளை கொண்டு தாக்குதல்

    25. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    26. ஊடகங்களின் மீதான அடக்குமுறை

    27. வேலையில்லா திண்டாட்டம்

    28. பணவீக்கம்

    29. தனிநபர் வருமானம் குறைப்பு

    30. 5-டிரில்லியன் டாலர் இலக்கு தோல்வி

    31. பட்டினி குறியீட்டில் 111-வது இடம்

    32. சாதிவாரி கணக்கெடுப்பு

    33. இந்திய எல்லையான லடாக்,அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது

    34. இந்தி/சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை

    35. சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை

    36. எட்டு வயது சிறுமி ஆசிபா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

    37. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    38. உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    39. பாஜக எம்.பி.பிரிட்ஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

    40. மணிப்பூரில் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,கொலை செய்யப்பட்டது

    41. உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது

    42. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% ஆக குறைப்பு

    43. பாஜக ஆட்சியில் பட்டியலின / பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் 40% சதவீதம் உயர்வு

    44. பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது

    45. கல்வி சுதந்திர குறியீட்டில் பின்னடைவு

    46. புதிய கல்விக் கொள்கை

    47. சிறுபான்மை மாணவர்களுக்கான ஆதரவு ஊதியத்தை ரத்து செய்தது

    48. 141 நாடாளுமன்ற எம்பிக்கள் பணியிடை நீக்கம்

    49. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கிட்டில் பாகுபாடு

    50. மாநில சுயாட்சியில் ஓன்றிய அரசின் தலையீடு

    51. பழங்குடியின பெண் குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காதது

    52. நாடாளுமன்ற நிலை குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் விகிதம் 71% இருந்து 21% ஆக குறைப்பு

    53. பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது

    54. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

    55. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளவில்லை

    56. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக

    57. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள்

    58. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு

    59. 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ஊழல்

    60. ஸ்பெக்ட்ரம் ஊழல்

    61. ஸ்கில் இந்தியா மோசடி

    62. 9,000 கோடி மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் 22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது

    63. தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ஊழல்

    64. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

    65. ONGC ஊழல்

    66. டெண்டர் முறைகேடு

    67. கேமன் தீவு FDI ஊழல்

    68. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவன ஊழல்

    69. வியாபம் ஊழல்

    70. DMAT ஊழல்

    71. போலி நாணய மோசடியில் பாஜகவினர்

    72. ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்

    73. குஜராத்தில் அதானிக்காக நில மோசடி

    74. அம்பானி, அதானி சொத்து மதிப்பு பாஜக ஆட்சியில் 80% உயர்ந்துள்ளது

    75. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.83.2 ஆக வீழ்ச்சி

    76. மோடி அரசு ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி உள்ளது

    77. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து பிறகு செல்லாது என அறிவித்தது

    78. பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் 161 வது இடம்

    79. உலக ஊழல் குறியீட்டில் 93-வது இடம்

    80. கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலை ஒரு லட்சத்திற்கும் மேல்

    81. இந்தியாவில் படித்த இளைஞர்கள் 83% பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

    82. வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை

    83. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரில் மோடி ஆட்டிறைச்சி சாப்பிடும் மக்களை இழிவு படுத்தி இருக்கிறார்

    84. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் சார்ந்தே உள்ளது

    85. மோடி சொன்ன அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வராதது

    86. 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டுள்ளன

    87. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்து தப்பித்துள்ளனர்

    88. இந்திய குடும்பங்களின் கடன் அளவு உயர்வு

    89. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி

    90. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அடக்குமுறை அதிகரிப்பு

    91. இன்டர்நெட் இணைப்பை முடக்குவதில் இந்தியா முதலிடம்

    92. ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் மூலம் 1230 கோடி வசூல்

    93. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

    94. EVM தயாரிப்பில் பாஜகவினர்

    95. இந்தியாவில் 19.3% குழந்தைகள் 24 மணிநேர இடைவெளியில் பட்டினியால் தவிக்கின்றனர்

    96. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது

    97. மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    98. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கிறது

    99. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது

    100. மோடி ஆட்சியில் வாராக்கடன் 55.5 லட்சம் கோடி

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவில் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
    • இந்தியாவில் விடியல் ஏற்படுத்த தான், இந்தியா கட்டணியை அமைத்துள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மஞ்சம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    வடசென்னை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, வாக்கு சேகரித்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    கலாநிதி வீராசாமியின் குரல், தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இந்த தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தல், மிக மிக முக்கியமான தேர்தல்.

    இந்தியாவில் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், பல நாட்கள் மக்கள் ஏடிஎம் வாசலில் நின்றனர். பாஜகவும், மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.

    மக்களின் பிரச்சினைகளை முழுதாக அறிந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

    பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும். சென்னையில் 3வது ரெயில் முனையம் கொண்டு வரப்படும்.

    வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள், விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை.

    பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்.

    இந்தியாவில் விடியல் ஏற்படுத்த தான், இந்தியா கட்டணியை அமைத்துள்ளோம்.

    பாஜக தேர்தல் அறிக்கை, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன்.

    மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகின்றனர்.

    சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது தான் பாஜக அரசு. ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் என 2019ல் சொன்னதை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்துள்ளனர்.

    சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது தான் பாஜக அரசு. செய்த சாதனைகள் என சொல்ல பாஜகவிடம் எதுவும் இல்லை.

    சாதி, மதம் என மக்களவை பிளவுப்படுத்தி பிரதமர் மோடி பேசுகிறார். மற்றவர்கள் உண்ணும் உணவை பிரதமர் மோடி விமர்சிக்கிறார். உணவு என்பது தனி மனிதரின் விருப்பம்.

    அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய முடியாது.

    தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு திட்டத்தையாவது பிரதமர் மோடி செய்தாரா ? வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை.

    வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள்.

    சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் மெதுவாக நடப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காததே காரணம். எத்தனை பொய்களை தான் காதுகள் தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா ?

    தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்களை கொடுக்கும் பிரதமர் தான் நமக்கு வேண்டும். மக்களுக்காக பார்த்து பார்த்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    செல்ஃபி எடுக்க கூட ஜிஎஸ்டி போட்டாலும் போடுவார்கள். ஜிஎஸ்டி வரியில் 3 சதவீதம் மட்டுமே பணக்காரர்களிடம் இருந்து வசூல் செய்யப்படுகிறது.

    சிஏஏ சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது. மோடியின் நண்பர்களுக்கு தான் ஜிஎஸ்டி வரியான் பயன்.

    விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆருக்கு பாஜக காவி சாயம் பூசுவதையே கண்டு கொள்ளாமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    • கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
    • சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.

    இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.


    திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.

    2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.

    முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×