search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
    • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

    பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு கட்சிகளும் செலவு செய்வது தேர்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    மேலும், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வேலைகளை செய்யும். வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச் சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட வேலைகளை கவனிக்கும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்.

    மொத்தமாக தேர்தல் தொடர்பாக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலை மீடியா ஆய்வுகளுக்கான மையம் (The Centre for Media Studies) வெளியிட்டுள்ளது.

    லாபம் நோக்கத்தோடு செயல்படாத இந்த அமைப்பின் தலைவர் என். பாஸ்கர ராவ், இந்த தேர்தலுக்காக சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    முதலில் 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டநிலையில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக எதிர்பார்க்கப்படுகிறது என என். பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.

    96.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு வாக்காளருக்கான செலவு சுமார் ரூ.1,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது 2020 அமெரிக்க தேர்தலில் செலவிடப்பட்டதை விட அதிகமானது. அமெரிக்க தேர்தல் செலவுக்கு 1.2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. OpenSecrets.org இணைய தளம் வெளியிட்ட தகவலின்படி இவ்வளவு செலவு என தெரியவந்துள்ளது.

    பல்வேறு தளங்களை கொண்ட மீடியா மூலமாக பிரசாரம் மேற்கொள்ள 30 சதவீதம் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை.
    • ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் பீட்டலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக சில மீடியாக்கள் தெரிவிக்கின்றன. இதன் அர்த்தம் முதல் வருடம் முதல் பிரதமர், 2-வது வருடம் 2-வது பிரதமர், 3-வது வருடம் 3-வது பிரதமர், 4-வது வருடம் 4-வது பிரதமர், ஐந்தாவது வருடம் ஐந்தாவது பிரதமர். அவர்கள் பிரதமர் இருக்கைக்கான ஏலத்தில் மும்முரமாக உள்ளனர்.

    ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும். ஒவ்வொரு வருடத்திற்கும் புதிய பிரதமரை என்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதலில் ஆந்திர மாநிலத்தில் மதம் அடிப்படையிலான ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்கள். அந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. காங்கிரஸ் இன்னும் அந்த விளையாட்டை விளையாட விரும்புகிறது. ஓபிசி-யினர் பெற்று வந்த இடஒதுக்கீட்டை பங்கை காங்கிரஸ் பறித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு மூலம் ஓபிசியினர் கர்நாடகாவில் பெற்று வந்துள்ள நிலையில், ஓபிசியில் முஸ்லிம்களை சேர்த்துள்ளது. காங்கிரசின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஓபிசி சமுதாயத்திற்கான எச்சரிக்கை மணி.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    • கேரளாவில் உள்ள 20 தொதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு.
    • கர்நாடகா மாநிலத்தில் 14 இடங்களில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 102 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    2-ம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (26-ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

    கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனிராஜா, பா.ஜ.க சார்பில் சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பா.ஜ.க சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும், திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுரேஷ்கோபியும் போட்டியிடுகின்றனர்.

    இந்த 3 தொகுதிகளும் நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளன. இதனால் திருவனந்தபுரம், வயநாடு, திருச்சூர் தொகுதிகளின் முடிவை அனைவரும் எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அங்கும் இன்று பிரசாரம் ஓய்ந்தது.

    மேலும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மாநிலங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    இறுதி கட்ட பிரசாரம் முடிந்துள்ள நிலையில் கேரளா உள்பட 12 மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதி என மொத்தம் 89 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள்:

    அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, கர்நாடகா-14, கேரளா-20, மத்திய பிரதேசம்-7, மராட்டியம்-8, ராஜஸ்தான்-13, திரிபுரா-1,

    உத்தர பிரதேசம்-8, மேற்கு வங்காளம்-3, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார்.
    • அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 26-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருப்பதால் நட்சத்திர தலைவர்கள் கேரளாவை முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று கேரளாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பிரதமர் மோடி மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. உண்மையான பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார். அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்த மக்களவை தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை பாதுகாப்பதற்கான வாய்ப்பு. முன்னேற்றம் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். உண்மையான பிரச்சனை குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்தது. அதேபோல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு பிரயங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது.
    • சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.

    காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.

    • அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
    • ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.

    மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • காங்கிரஸ் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது.
    • இதன் அர்த்தம், யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21-ந்தேதி) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றோம். புகார் பரிசீலனையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக பிரதமர் தனது பேச்சியில் கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
    • இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 11 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 19-ந்தேதி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    மேலும், ஒரு சில இடங்களில துப்பாக்கிச்சூடு சம்பவமும், மிரட்டல் தொடர்பான சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று இம்பால் கிழக்கு தொகுதிக்கு உடபட்ட மொய்ராங்காம்பு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

    • பிரதமர் மோடி இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.
    • காங்கிரசின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

    வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்கள் பலன் தராததால், அச்சத்தின் காரணமாக, அவர் இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

    வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    இந்தியா தவறான பாதையில் செல்லாது!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை.
    • எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை.

    பிரதமர் மோடி இன்று கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுராவில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாய்மார்கள், சகோதரரிகள் இங்கே மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளீர்கள். உங்களுடைய குடும்பத்தை வளர்ப்பதற்கு உங்களுடைய போராட்டம் மற்றும் சவால்களை, மோடியாகிய நான் எனது வீட்டில் பார்த்துள்ளேன்.

    இந்த நாட்களில், மோடியை அகற்றுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

    ஆனால் நரிசக்தி, மாற்ரு சக்தி ஆகியவற்றின் ஆசீர்வாதத்தால், பாதுகாப்பு கவசத்தால் (Suraksha kavach), மோடி அவற்றை எதிர்கொள்ளும் திரணை பெற்றுள்ளார்.

    தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை. அவர்களுடைய வரலாறு மோசடி.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. தருமபுரி- 81.48

    2. நாமக்கல்- 78.16

    3. கள்ளக்குறிச்சி- 79.25

    4. ஆரணி- 75.65

    5. கரூர் - 78.61

    6. பெரம்பலூர்- 77.37

    7. சேலம்- 78.13

    8. சிதம்பரம்- 75.32

    9. விழுப்புரம்- 76.47

    10. ஈரோடு- 70.54

    11. அரக்கோணம்- 74.08

    12. திருவண்ணாமலை- 73.88

    13. விருதுநகர்- 70.17

    14. திண்டுக்கல்- 70.99

    15. கிருஷ்ணகிரி- 71.31

    16. வேலூர்- 73.42

    17. பொள்ளாச்சி- 70.70

    18. நாகப்பட்டினம்- 71.55

    19. தேனி- 69.87

    20. நீலகிரி- 70.93

    21. கடலூர்- 72.28

    22. தஞ்சாவூர்- 68.18

    23. மயிலாடுதுறை- 70.06

    24. சிவகங்கை- 63.94

    25. தென்காசி- 67.55

    26. ராமநாதபுரம்- 68.18

    27. கன்னியாகுமரி- 65.46

    28. திருப்பூர்- 70.58

    29. திருச்சி- 67.45

    30. தூத்துக்குடி- 59.96

    31. கோவை- 64.81

    32. காஞ்சிபுரம்- 71.55

    33. திருவள்ளூர்- 68.31

    34. திருநெல்வேலி- 64.10

    35. மதுரை- 61.92

    36. ஸ்ரீபெரும்புதூர்- 60.21

    37. சென்னை வடக்கு- 60.13

    38. சென்னை தெற்கு- 54.27

    39. சென்னை மத்தி- 53.91

    ×