என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இது கிரிக்கெட் போட்டி அல்ல: காங்கிரஸ்- ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ராகவ் சதா பேச்சு
- மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இரண்டு கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.
- ஆம் ஆத்மி ஆளும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் போட்டியிடும் இடங்களை பிரித்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
நேற்று இருகட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் வீட்டில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சதா கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இது கிரிக்கெட் போட்டி போன்றது கிடையாது. கிரிக்கெட்டில் பந்துக்கு பந்து வர்ணனை வழங்கப்படும். இங்கு அப்படி வழங்க முடியாது. காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உங்களிடம் விரிவாக பேசியுள்ளார்.
இவ்வாறு தெரிவித்தார்.
டெல்லியில் 7 மக்களவை இடங்களும், பஞ்சாப் மாநிலத்தில் 13 இடங்களும் உள்ளன. இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜனதா டெல்லியில் ஏழு இடங்களிலும் வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த இரண்டு மாநிலங்களை தவிர்த்து குஜராத், கோவா, ஹரியானா மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்