என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணாசி"

    • சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களை 5வது மாடியில் வைத்து துன்புறுத்தினார்.
    • வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலத்தை போக்சோ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி.

    சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த 'சிறுவர்'களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்தன.

    ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மாச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து போலீசில்  இதைப்பற்றி புகார் அளித்தனர்.

    ஆனால் பிரயாக்ராஜ் காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்ய மறுத்ததால், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார்.

    அவரது புகார் மனுவில், வித்யா மடத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியால், அந்த மடத்தின் 5வது மாடியில் வைத்து பாலியல் துன்புறுத்ததலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் இதற்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டியை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களை நீதிமன்றத்தில் அசுதோஷ் ஆஜர்படுத்தினார்.

     மேலும், அவிமுக்தேஸ்வரானந்தர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணியின் போர்வையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றம் இன்று விசாரித்தது. சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி வினோத் குமார், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மீது FIR பதிவு செய்ய காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். 

    • பிருத்விராஜ் சுகுமாரன், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
    • தமிழ் புத்தாண்டு மற்றும் உகாதி பண்டிகை காலத்தை ஒட்டி வெளியாகிறது

    இயக்குநர் ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார்.

    படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் உகாதி பண்டிகை காலத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது. 


    • நோ-பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால் தகராறு.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூட பார்க்காமல் பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கவுன்சிலராக (ஹுகுல்கஞ்ச்) இருப்பவர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவா. இவரது மகன் நேற்று சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் இங்கே வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக் கொண்டிருக்கும்போதே, சற்றென்று சப்-இன்ஸ்பெக்டரை கவுன்சிலர் மகன் பளார் என அறைந்துள்ளார்.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டரும், அங்கிருந்த மக்களும் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி கவுன்சிலர் மகனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

    கவுன்சிலர் மகன் மீது வழக்குப்பதிவு செய்து, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    • மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
    • வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.

    மகேஷ் பாபுவின் 25வது படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

    அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, "எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அதை கேட்டு நினைத்து எனக்கு கோபம் வந்தது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது" என்று தெரிவித்தார். 

    இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக வாரணாசி டீசரில் இந்து தொன்மம் குறித்த காட்சிகள் இடமபெட்ருந்த நிலையில், வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில் அனுமனை வமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக 'ராஷ்ட்ரிய வானரசேனா' என்ற அமைப்பு ராஜமௌலி மீது ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

    வாரணாசி பட விழாவில் ராஜமௌலியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

    • படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
    • இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

    ஐதராபாத்:

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

    இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது

    ஏற்கனவே மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேசுகையில் தனது மறைந்த தந்தை நடிகர் கிருஷ்ணாவை நினைவு கூர்ந்தார்.

    புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார்.

    இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன்.

    இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.

    இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு.

    இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன்.

    வாரணாசி படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும் என தெரிவித்தார்.

    • மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
    • இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

    முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    • பிரதமர் மோடி நாளை இருநாள் பயணமாக வாரணாசி செல்கிறார்.
    • அங்கு 4 வந்தே பாரத் ரெயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 8) 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு செல்லும் ஒரு ரயிலும் அடக்கம். இந்த ரயில் தமிழக நகரங்கள் வழியே செல்கிறது.

    இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை வந்தே பாரத் ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடமாகக் குறையும். இந்த ரெயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்ல உள்ளது.

    உ.பி.யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.யின் கஜூராகோ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலானது வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.

    உ.பி.யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான வந்தே பாரத் ரெயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரெயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.

    பஞ்சாபின் பிரோஸ்பூர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
    • ராகுல் காந்தி இந்து விரோதி என்றும், ராமரை அவமதித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 21 அன்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், ராமரை "புராண கதாபாத்திரம்" என்று அழைத்ததற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புகார்தாரர் வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே இதை வெறுக்கத்தக்க பேச்சு என்றும், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 196 (மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), பிரிவு 356 (அவதூறு) உள்ளிட்டவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று புகார்தாரர் கோரினார்.

    இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட வாரணாசி நீதிமன்றம், விசாரணை தேதியை மே 19-ஆம் தேதி நிர்ணயித்தது. மேலும் இந்த புகார் தொடர்பாக ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுபப்பட உள்ளது.

    ராகுல் காந்தி இந்து விரோதி என்றும், ராமரை அவமதித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

    • 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார்.
    • இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

    மார்ச் 29 தேதியிட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு அவரை நிரந்தர அடிப்படையில் பிரதமரின் தனி செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    யார் இவர்?

    நிதி திவாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக (வணிக வரி) பணியாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    நவம்பர் 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

     

    இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார். அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.

    மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    • வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

    வாரணாசி:

    தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்துக்கும் குறிப்பாக வாரணாசிக்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'காசி-தமிழ் சங்கமம்' என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் வருகிற 16-ந் தேதி தொடங்குகின்றன.

    இந்த சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி-தமிழ் சங்கமத்தின் நோக்கம் ஆகும். இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாக சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்படும். அத்துடன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இந்த நிறுவனங்கள் இயங்கும்.

    இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 2,500 பேர் கலந்து கொள்வார்கள். அவர்கள் காசி விஸ்வநாத் தாம், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.

    பாரதிய பாஷா சமிதி அல்லது இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான உயர் அதிகாரக்குழு, தமிழ் கலாசாரத்துக்கும், வாரணாசிக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டாடுகிறது.

    இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையேயான பரந்த உறவின் நோக்கம் இரு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாக கொண்டு வருவதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியம் பற்றிய புரிதலை உருவாக்குவதும், இரு பகுதி மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குவதும் ஆகும்.

    வாரணாசியில் பல ஆண்டுகளை கழித்த சுப்பிரமணிய பாரதியார் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

    • ‘காசி-தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • மாணவர்களுக்கான ரெயில் கட்டணத்தை அரசே செலுத்தவும் ஏற்பாடாகி வருகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்துக்கும், வாரணாசிக்கும் (காசி) இடையேயான பழங்கால தொடர்பை மீட்டெடுத்து வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக 'காசி-தமிழ் சங்கமம்' என்ற பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த காசி-தமிழ் சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான பாரதிய பாஷா சமிதி, இந்த நிகழ்ச்சிக்கான பரிந்துரையை வழங்கி ஏற்பாடு செய்துள்ளது.

    இரண்டு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாக கொண்டுவருதல், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை பற்றிய புரிதலை உருவாக்குதல் மற்றும் இரு பிராந்தியங்களை சேர்ந்த மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குதலே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழங்களில் பயின்று வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை காசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை இணைக்க ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. மாணவர்களுக்கான ரெயில் கட்டணத்தை அரசே செலுத்தவும் ஏற்பாடாகி வருகிறது.

    இதைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட பல்வேறு குழுக்களை காசிக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • கிரிஸ்னேஸ்வரர் கோவில் அல்லது குஷ்மேஸ்வரர் கோவில் எனப்படும் கோவில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும்.
    • தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    கிரிஸ்னேஸ்வரர் கோவில் அல்லது குஷ்மேஸ்வரர் கோவில் எனப்படும் கோவில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளரங்கபாத்தில் உள்ள தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இக்கோவில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோவிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.

    ×