search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாயத்தாமரை"

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    • தண்ணீரில் படர்ந்து நிற்பதால் படகுகளை அதிக தூரம் செலுத்த முடியவில்லை
    • படகுகள் மூலம் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் நீண்ட நாள் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    படகு இல்லத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. நகராட்சி ஊழியர்கள் பணி நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு படகு சவாரிக்கு 40 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி விடுமுறை நாள் என்பதால்அ திகமாக பொது மக்கள் வந்து சென்று உள்ளனர்.

    படகு இல்லத்தின் ஒரு பகுதியில் ஆகாயத்தாமரைகள் இருப்பதால் தண்ணீர் மாசு அடைந்து இருப்பதாகவும் படகுகளை அதிக தூரத்திற்கு செலுத்த முடியாமல் உள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று வால்பாறை நகராட்சி பொறியாளர் வெ ங்கடாசலம் தலைமையில் படகு இல்லத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்தது. தாமரை செடிகளை படகுகள் மூலமாக வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
    • வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

    இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.

    எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.

    இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது .
    • பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது . இது கிராமத்தையொட்டிய சாலை ஓரத்தில் உலகத்திலே மிகப் பரந்த அளவுக்கு குளம் அமைந்துள்ளது. தற்போது அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த குளத்தில் பாசி, செடி, கொடி ஆகாயத்தாமரை போன்ற வளர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அந்த குளம் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன
    • விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

    என்.ஜி.ஓ.காலனி :

    அகஸ்தீஸ்வரம் மற்றும் தென்தாமரைகுளம் பேரூராட்சிகளுக்குட்பட்ட தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன. இதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபுமாறச்சன் தலைமை தாங்கினார். பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ் மற்றும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்லூரியின் செயலாளர் ராஜன் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணிக்கண்ணன், ராஜதுரை, அஜந்தன், தங்கசாமி, சந்திரன், மாலைசூடும் பெருமாள் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது.

    மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது.

    கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை.

    தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
    • வாய்க்காலின் வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருநகரி வாடிகால் வாய்க்கால் உள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியின் முக்கிய வடிகாலாக உள்ளது. வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளக்கதெரு, தெற்குவெளி, கலைஞர் காலனி, ரெயில்வே ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    இந்த வாய்க்காலில் ஆகாயத்தமாரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.

    எனவே திருநகரி வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும், வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
    • பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் முதல் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசலாறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

    இதனால் மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்–பட்ட அதிகாரிகள் அரசலாற்றை ஆக்கிர–மித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் ஆகாயத்தாமரைகள் அகற்றினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள வாவிக்கிணறு மற்றும் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகியவற்றில் இருந்த ஏராளமான ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்கள் ஆகியவற்றை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்பணியினை நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்.விஜய்ராகுல் தொடங்கி வைத்தார்

    இதில் துணைத் தலைவர் விஜயசாந்தி, ஊராட்சி செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கவிதா ராஜா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 3.5 கி.மீ தொலைவில் உள்ள சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் செல்கிறது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தேவிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே செந்தேவிபாளையம் தடுப்பணை உள்ளது.செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து ராஜவாய்க்கால் மூலமாக சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ள சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் செல்கிறது.தற்போது நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து சாமளாபுரம் பெரியகுளத்திற்கு நொய்யல்நீர் வரும் நீர்வழிப்பாதையான ராஜவாய்க்காலில் ஆகாயத்தாமரைகள்,செடிகொடிகள் இருந்ததால் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள், செடிகொடிகளை அகற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பின்னர் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து செந்தேவிபாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து சாமளாபுரம் குளம் வரை நொய்யல் நீர் செல்லும் நீர்வழிப்பாதையில் இருந்த ஆகாயத்தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பி.கந்தசாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி ஆகியோர் ராஜவாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டனர்.இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் ,மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகளான கனகசபாபதி, உள்தோட்டம் மணி ,பி.வி.எஸ்.பொன்னுச்சாமி , பொன்னுச்சாமி , திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×