search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agayatmarai"

    • மழைநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
    • வாய்க்காலின் வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருநகரி வாடிகால் வாய்க்கால் உள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியின் முக்கிய வடிகாலாக உள்ளது. வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளக்கதெரு, தெற்குவெளி, கலைஞர் காலனி, ரெயில்வே ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    இந்த வாய்க்காலில் ஆகாயத்தமாரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.

    எனவே திருநகரி வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும், வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×