search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agayathamarai"

    • தலைஞாயிறு அரிச்சந்திராநதியின் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
    • விவசாயிகள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம், மணக்குடி ஊராட்சியின் வழியாக பாயும் அரிச்சந்திரா நதியின் காடந்தேத்தி முதல் பிரிஞ்சுமூலை வரையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை விவசாயிகள்மூன்று நாட்கள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.

    இக்களப்பணியில் விவசாயிகள்இராசேந்திரன் தலைமையிலும், முருகவேல் ஆதிகேசவன் ஜெயவேல், ஆக்கிரமித்து இருந்த ஆகாயத் தாமரை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    ஆகாயத்தாமரையே தானாகவே முன்வந்து அகற்றிய விவசாயிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • தண்ணீரில் படர்ந்து நிற்பதால் படகுகளை அதிக தூரம் செலுத்த முடியவில்லை
    • படகுகள் மூலம் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் நீண்ட நாள் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    படகு இல்லத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. நகராட்சி ஊழியர்கள் பணி நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு படகு சவாரிக்கு 40 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி விடுமுறை நாள் என்பதால்அ திகமாக பொது மக்கள் வந்து சென்று உள்ளனர்.

    படகு இல்லத்தின் ஒரு பகுதியில் ஆகாயத்தாமரைகள் இருப்பதால் தண்ணீர் மாசு அடைந்து இருப்பதாகவும் படகுகளை அதிக தூரத்திற்கு செலுத்த முடியாமல் உள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று வால்பாறை நகராட்சி பொறியாளர் வெ ங்கடாசலம் தலைமையில் படகு இல்லத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்தது. தாமரை செடிகளை படகுகள் மூலமாக வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது .
    • பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது . இது கிராமத்தையொட்டிய சாலை ஓரத்தில் உலகத்திலே மிகப் பரந்த அளவுக்கு குளம் அமைந்துள்ளது. தற்போது அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த குளத்தில் பாசி, செடி, கொடி ஆகாயத்தாமரை போன்ற வளர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அந்த குளம் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
    • பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் முதல் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசலாறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

    இதனால் மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்–பட்ட அதிகாரிகள் அரசலாற்றை ஆக்கிர–மித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் ஆகாயத்தாமரைகள் அகற்றினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள வாவிக்கிணறு மற்றும் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகியவற்றில் இருந்த ஏராளமான ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்கள் ஆகியவற்றை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்பணியினை நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்.விஜய்ராகுல் தொடங்கி வைத்தார்

    இதில் துணைத் தலைவர் விஜயசாந்தி, ஊராட்சி செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கவிதா ராஜா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×