என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் சேகரிப்பு குளத்தில் இருந்த  ஆகாயத்தாமரைகள் அகற்றம்
    X

     ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்களை அகற்றிய போது எடுத்த படம்.

    மழைநீர் சேகரிப்பு குளத்தில் இருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் ஆகாயத்தாமரைகள் அகற்றினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள வாவிக்கிணறு மற்றும் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகியவற்றில் இருந்த ஏராளமான ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்கள் ஆகியவற்றை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்பணியினை நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்.விஜய்ராகுல் தொடங்கி வைத்தார்

    இதில் துணைத் தலைவர் விஜயசாந்தி, ஊராட்சி செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கவிதா ராஜா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×