search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமரை"

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
    • நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். 

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    • அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்

    கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.

    அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.

    குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.

    அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.

    • தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.
    • தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.

    விளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூ போல் அகன்று வட்டமானதாக இருப்பதால்

    தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.

    தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.

    தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையை சடையுள் வைத்துள்ள சிவனைக் குறிக்கும்.

    திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும்.

    அகலின் மேல் அமைந்துள்ள கும்பக்கவசம் போன்ற உச்சிப்பகுதி சிவலிங்கம் போலிருப்பதால்

    சதாசிவனை குறிப்பதாக உள்ளது.

    ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு.

    திருவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி திருவைந் தெழுந்து முதலிய மந்திரங்களை ஓதி வழிபட்டு வந்தால்

    "விளக்கிட்டாருக்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி" என்ற சொல்லின் உண்மை புலப்படும்.

    • இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன.
    • பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை.

    மங்களம் தரும் மலர்கள்

    இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ, அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது.

    சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு வித, விதமான மலர்களை சூடி அழகு பார்த்தனர். அர்ச்சனை செய்தனர். இதை பழங்கால பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    இறை மூர்த்தங்கள் மலர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் நம் மூதாதையர்கள் உறுதியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.

    சில குறிப்பிட்ட மலர்கள், அறிவியல் பூர்வமாக மனித குலத்துக்கு நன்மை செய்வதை ஆதி தமிழர்கள் அறிந்து இருந்தனர். தாமரை மலர்த்தண்டு குளோரின் வாயு உற்பத்தி செய்வதை கண்டுபிடித்திருந்தனர்.

    எனவே குறிப்பிட்ட மலர்களை இறை வழிபாடு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்தனர்.

    குவளை மலரை பறித்து பயன்படுத்தக் கூடாது என்ற விதி இப்படித்தான் ஏற்படுத்தப்பட்டது. உலகில் உள்ள இயற்கை படைப்புகள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில், மலர்கள் இறைவனுக்கு உகந்தவைகளாக உள்ளன.

    இயற்கையின் படைப்பில் மலர்களின் இயல்பைப் பார்த்தால் அவற்றின் தியாகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ஓரிரு நாட்களே ஆயுள் கொண்ட மலர்கள் இறைவனுக்காகவே பூத்ததோ என்று எண்ணத் தோன்றும்.

    ஆலயங்களில் நறுமணம் ஏற்படுத்தவும், அலங்காரம் செய்யவும், ஆத்மார்த்தமாக வழிபடவும் மலர்களின் பங்களிப்பு நிகரற்றது. மலர்கள் இல்லாத வழிபாட்டை நினைத்துப் பார்க்க இயலாது.

    மகிமைகள் பல நிறைந்த பூக்களை, இறைவழி பாட்டுக்கு சங்க கால தமிழர்கள் பயன்படுத்தியதற்கும், நாம் பயன்படுத்தியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

    சங்க காலத்தில் 99 வகையான பூக்கள் பயன்பாட்டில் இருந்ததை கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் 261 அடிகள் கொண்ட பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த 99 வகை பூக்களில் பல இன்று காணாமல் போய் விட்டன. பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை. மிக சொற்பமான வகை மலர்களையே நாம் பயன்படுத்துகிறோம்.

    புராணங்கள் புனையப்பட்ட பிறகு ஒவ்வொரு கடவுளுக்கும், இந்தந்த வகை பூக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற நியதி உருவாகி விட்டது.

    எனவே சில வகை மலர்களின் பயன்பாடு குறைந்து போனது.

    என்றாலும் இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் இந்த மலர்கள் இன்று இறைவழிபாட்டை அர்த்தமுள்ளதாக, ஆத்மார்த்தமானதாக மாற்றியுள்ளன.

    காய்ந்து போன மலர்கள், மனிதர்களால் முகர்ந்து பார்க்கப்பட்ட மலர்களை ஒரு போதும் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது. அது போல் சுத்தம் இல்லாத இடத்தில் உள்ள பூக்களை தொடவே கூடாது.

    மலர்களை இறைவனுக்கு படைக்கும்போது கிள்ளி சாத்தக்கூடாது. முழு மலராகவே சாத்தவேண்டும். இலைகளை கிள்ளி சாத்தலாம். வில்வம், துளசி ஆகியவற்றை தளமாகவே படைக்க வேண்டும்.

    இந்த வரிசையில் எந்தெந்த மலர்களை, எந்தெந்த தெய்வத்துக்கு, எந்தெந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சில முறைகளை வகுத்து வைத்துள்ளனர்.

    காலை வழிபாட்டின் போது தாமரை, துளசி, மல்லிகை, நந்தியாவட்டை, முல்லை, மந்தாரை, செண்பகம் ஆகிய மலர்களை கொண்டு வழிபடலாம்.

    மதிய நேரத்தில் துளசி, வில்வம், சங்கு புஷ்பம், அரளி, வெண்தாமரை, ஓரிதழ் தாமரை, மருதாணி ஆகியவற்றை கொண்டு பூஜை செய்வது நல்லது.

    மாலை நேரத்தில் ஜாதிமுல்லை, துளசி, வில்வம், செந்தாமரை, அல்லி, மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற பூக்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும்.

    இத்தனை வகை மலர்களில் தாமரைப்பூதான் மிக, மிக சிறப்பானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால், மகாலட்சுமியின் மனம் கவர்ந்த தாமரை பூவுக்கு "தெய்வ மலர்" என்றும் ஒரு பெயர் உண்டு.

    அதனால்தான் தாமரைப் பூவை பெண்கள் தலையில் சூட அனுமதிக்கப்படுவதில்லை. திருமாலுக்கு தாமரை போல பவளமல்லி, சாமந்தி ஆகிய மலர்களும் மிகவும் பிடித்தமானதாகும்.

    சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது நாகலிங்கப்பூவும், வில்வவுமாகும். முருகப்பெருமானுக்கு கடம்ப மலர், குறிஞ்சிப் பூ, செவ்வலரி பூ ஆகிய பூக்கள் மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விநாயகருக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா மலர்கள் மிகவும் பிடித்தமானது. அம்மனுக்கு செவ்வரளி, மல்லிகை மிகவும் உகந்தது. இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த பூ எது என்பதை அறிந்து கொண்டு படைக்க வேண்டும்.

    அதுதான் இறை அருளை முழுமையாக பெற உதவும்.

    இறைவனுக்கு பிடித்தம் இல்லாத, விருப்பம் இல்லாத பூக்களை ஒரு போதும் படைக்க கூடாது.

    எனவே எந்தெந்த தெய்வத்துக்கு எந்தெந்த பூக்கள் பிடிக்காது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியவை பெருமாளுக்கு பிடிக்காது.

    செம்பரத்தை, தாழம்பு, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவையாகும். மந்தாரம், அறுகு வெள்ளெருக்கு ஆகியவை அம்மனுக்கு படைக்க உகந்தது அல்ல.

    சூரிய வழிபாடு செய்யும் போது மறந்தும் கூட வில்வத்தை படைத்து விடக்கூடாது. அது போல விநாயகருக்கு துளசி ஆகாது. பவளமல்லி சரஸ்வதி தேவிக்கு பிடிக்காத பூவாகும்.

    சில பூக்களை எந்த சாமிக்கும், எப்போதும் பயன்படுத்த கூடாது என்று விதி உள்ளது. உதாரணத்துக்கு துலுக்க சாமந்திப்பூவை சாமிக்கு படைக்கக்கூடாது.

    அது போல வானகமலர், மாதுளை மலர், பூசணிபூ, மலை ஆலமரப்பூ, பொன்னாங்கண்ணி பூ, விளாபுளி பூ, குமிழம் பூ, குருகத்தி பூ ஆகிய பூக்களை பூஜைக்கு ஒரு போதும் பயன்படுத்தவே கூடாது.

    பூஜைக்கு விலக்கப்பட்ட இந்த பூக்களை சில ஊர்களில் ஆலய பிரகார அலங்காரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    கடம்ப மலர், ஊமத்தை பூக்களை இரவு பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாழம்பூவை அர்த்தசாம பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.

    பகலில் தாழம்பூவை பயன்படுத்தக்கூடாது. (உத்தரகோசமங்கை தலத்தில் மட்டும் விதி விலக்காக தாழம்பூ பயன்படுத்துகிறார்கள்)

    பூக்களின் நிறத்துக்கும் வழிபாட்டுக்கும் கூட தொடர்பு உள்ளது.

    வெண்மை நிறம் கொண்ட பூக்களை அர்ச்சித்து வழிபட்டால் முக்தி உண்டாகும். சிவப்பு வர்ண பூக்கள் வழிபாடு இன்பத்தை தரும்.

    மஞ்சள் வண்ண பூக்களை இறைவனுக்கு படைத்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் விருத்தி ஏற்படும்.

    பொதுவாக அன்று பறித்த மலர்களை அன்றே பூஜைக்கு பயன் படுத்தி விட வேண்டும். சிலர் இரவில் பூ வாங்கி மறுநாள் காலை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அதில் எந்த தவறும் இல்லை.

    தாமரை பூவை 5 நாட்கள் வரை வைத்து கூட பூஜிக்கலாம். அரளிப்பூக்களை 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். அது போல விஷ்ணு கிரந்தி பூவையும் மூன்று நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    செண்பகம், சாமந்தி, மல்லி பூக்களை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். இறைவனுக்கு படைக்கும் மலர், இலைகளில் துளசி, வில்வம் இரண்டு மட்டும் விதிவிலக்கு பெற்றவை. விஷ்ணுவுக்கு மிக, மிக பிடித்தமான துளசியை மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    சிவனுக்கு மிகவும் பிடித்தமான வில்வத்தை 6 மாதம் வரை கூட பயன்படுத்தலாம். வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.

    சிவன் அதை ஏற்று அருள் புரிவார். வில்வத்துக்கு மட்டும் அந்த சிறப்பை சிவபெருமான் கொடுத்துள்ளார்.

    • அருகம்புல்லும், தாமரையும்மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.
    • ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர்.

    மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல்லும், தாமரை மலருமாகும். இவற்றை விற்பனை செய்ய கோவில் முன்பு பல கடைகள் உள்ளன. மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் பற்றி ஒரு கதை உள்ளது.

    இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன்.

    தேவர்கள் பயந்து அலறியபடி ஸ்ரீவிநாயகப் பெருமானிடம் ஓடி வந்து முறையிட்டார்கள்.

    விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் ஜோதியே வடிவான அவருடய திருமேனி பெரும் வெப்பத்தால் தகித்தது.

    ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு எழுந்த அந்த உஷ்ணத்தை போக்க சந்திரன் தம் ஒளிக்கதிர்களால் குளிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    சித்தியும், புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சித்தார்.

    வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பலவிதமாக பணிவிடைகள் செய்தனர். ஆனாலும் விநாயகர் உடலில் ஏற்பட்ட வெப்பம் அகலவில்லை.

    கடைசியாக மகிரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக படல் படலாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.

    பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சித்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு பிரியமானது. அவர் அணியும் மலர்களில் முதலிடமும் பெற்றது.

    பல பிறவிகளை கடந்த ஆத்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசுவயிற்றுக்குள் சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இதற்கு அருகம்புல் காரணமாக இருப்பதால் அது விநாயகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    குண்டலின் யோகத்தில் அருகு

    ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது `அருகு' இந்த தன்மையால்தான் அது `அருகு' என்றே அழைக்கப்பட்டது.

    அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து, ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சஹஸ்ராம் என்ற இடத்தில் சென்று முழு நிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி.

    ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் களைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது.

    விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேறச் செய்வார் என்பது யோக நூல்களின் கருத்து. எனவே மணக்குள விநாயகரை தரிசிக்க செல்லும்போது மறக்காமல் அருகம்புல் வாங்கிச் செல்லுங்கள்.

    கஜபூஜை

    மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானையை வைத்து பக்தர்கள் அடிக்கடி கஜபூஜை நடத்துக்கிறார்கள். கஜபூஜை செய்வதால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

    இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது. லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்லக்கூடிய ஒரு நிலை இன்று உள்ளது. மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயலில் முன் லட்சுமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும். பல குழந்தைகள் லட்சுமியை காண்பதற்காக இங்கு வருகின்றனர்.

    • லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.
    • காங்கிரஸ் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார்.

    புதுடெல்லி:

    ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த லோகோவில், தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.

    பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையை ஜி20 லோகோவில் பயன்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார். தற்போது பாஜக ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ லோகோவில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் இழக்கமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்' என தெரிவித்துள்ளார்.

    • சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள்.
    • விஜயதசமியன்று இக்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர்மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூ ரில் கல்விக்கடவுளான சரஸ்வதி கோவில் உள்ளது.

    இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோ வில் அமைந்துள்ளது கூத்தனூரில் தான்.

    இக்கோவிலில் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான 9-வது நாளில் சரஸ்வதி பூஜையன்று அம்மனுக்கு பாத தரிசனம் நடைபெறும்.

    அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

    மேலும், 5-ம் தேதி விஜயதசமியன்று இக்கோவி லில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

    பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறக்க குழந்தையின் விரல் பிடித்து தானியத்தில் 'அ' எனும் எழுத்தை எழுதி கல்வியை தொடங்குவர்.

    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றனர்.

    விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிபடுவர்.

    ×