என் மலர்

    நீங்கள் தேடியது "Cooker symbol"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மோடியுடன் பேசி குக்கர் சின்னம் கிடைக்காதவாறு முடக்கியுள்ளதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #EPS #OPS
    பொன்னேரி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பது போல ஆவலுடன் எதிர்பார்த்து செய்திகளை பார்த்தனர்.

    குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்து விட்டால் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவோம் என அஞ்சி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மோடியுடன் பேசி சின்னம் கிடைக்காதவாறு முடக்கியுள்ளனர்.

    ஆர்.கே. நகரில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை போல அனைத்து தொகுதியிலும் சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு சின்னம் என்பது முக்கியமல்ல மக்களின் எண்ணம் தான் முக்கியம்.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் பதவி அளித்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர்கள்.

    அ.தி.மு.க. கூட்டணி தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. 1 தொகுதியில் கூட அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதால் தான் கர்நாடகா மாநில நலனில் மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள்.

    இவ்வாறு தினகரன் பேசினார்.  #TTVDhinakaran #EPS #OPS
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    புதுடெல்லி:

    டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

    இந்த  தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி  உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.



    இந்நிலையில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேறு ஒரு பொது சின்னத்தை ஒதுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்தை அமமுக அணுக உள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    புதுடெல்லி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.



    இந்த  தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி  உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.

    எனவே, பொது சின்னம் தொடர்பாக நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் அமமுக தலைமை உள்ளது. அமமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேறு ஒரு பொது சின்னத்தை பரிசீலிக்கும்படி கூறியுள்ளது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

    ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, இடைக்கால சின்னமாக தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதிட்டது.



    குக்கர் சின்னம் வழங்க முடியாததற்கான காரணத்தையும் தெரிவித்தது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி இன்று காலை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், பழைய சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குக்கர் சின்னம் வழங்க முடியாவிட்டால் வேறு ஒரு பொதுவான சின்னத்தை வழங்கும்படி டிடிவி தினகரன் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சியா? பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொது சின்னத்தை கேட்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அமமுகவை கட்சியாக இன்றே பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர், கட்சியை இன்றே பதிவு செய்தாலும், உடனடியாக குக்கர் சின்னம் தர முடியாது. கட்சியை பதிவு செய்த பின்னர், குக்கர் சின்னமோ அல்லது அவர்கள் கேட்கும் பொது சின்னத்தையோ ஒதுக்க 30 நாட்களுக்கு மேல் ஆகும் என வாதிட்டார்.

    அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லையெனில் வேறு ஒரு பொது சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? என்று தலைமை நீதிபதி கூறினார். ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம். ஒரே குழுவில் உள்ளவர்களுக்கு வேறுவேறு சின்னம் வழங்கினால், அவர்களின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். எனவே, வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிந்தபிறகு பொது சின்னம் வழங்க முயற்சிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

    ஆனால், அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு தனித்தனியாகத்தான் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டனர். குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர். அதேசமயம், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொது சின்னம் வழங்குவதற்கு பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

    ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது.


    பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குக்கர் சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நீதிமன்றம் தங்களுக்கு நல்ல உத்தரவை தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #SupremeCourt
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத கட்சி. அதனால் அவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

    ஏற்கனவே ஐகோர்ட்டில் சின்னமும், கட்சியையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி தள்ளி வைத்து வழக்கை ஐகோர்ட்டு நடத்தட்டும் என்று கூறி வழக்கு நடந்து கொண்டிருப்பதால் எங்கள் கட்சியை நாங்கள் பதிவு செய்ய முடியவில்லை.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் எங்களுக்கு நல்ல உத்தரவை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என்று சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து சட்டமாக இயற்றியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வாய்ப்பு இருக்கும்.

    தூத்துக்குடியில் மக்கள் மீண்டும் கொந்தளிக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். இதனை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி கொடுத்ததால் வாரிசு அரசியல் என்று காங்கிரசுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருப்பதாக பா.ஜனதா சொல்கிறது. மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவிற்கு பிறகு தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு கட்சியில் அப்பா இருக்கிறார் என்பதற்காகவே அவரது வாரிசுகள் அந்த கட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. தகுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் அரசியலில் நிலைக்க முடியும். வாரிசு அரசியல் என்று வாதத்திற்கு வேண்டுமானால் சொல்லலாம்.

    போயஸ் கார்டன் வீடு எனக்கு தெரிந்து ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது. அதனை யார் பெயருக்கு எழுதி வைத்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. தெரியாத ஒன்றிக்கு பதில் சொல்ல முடியாது.

    தினகரன்-அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறார். அம்மாவின் மறைவிற்கு பிறகு போயஸ்கார்டனில் என்னையும், சசிகலாவையும் அவர் சந்தித்து விட்டு சென்றார்.

    நீங்கள் கூறுவது போல அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என்று எனக்கோ, சசிகலாவுக்கோ, பா.ஜனதாவோ அல்லது வேறு யாரோ எந்தவித அழுத்தமும் தரவில்லை. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதுதான் உண்மை.

    அ.தி.மு.க.வும், நாங்களும் ஒன்று சேர்வது என்பது நடக்காத வி‌ஷயம். அதனை ஏற்கனவே பலமுறை நான் கூறி விட்டேன். அதனால் இது சம்பந்தமாக திரும்ப திரும்ப கேட்டு மக்களை எரிச்சல் அடைய வைக்காதீர்கள்.

    தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நாங்கள் நியமித்துள்ளோம். தொகுதிக்கு குறைந்தது 3 ஆயிரம் பேரை நிர்வாகிகளாக நியமித்து விட்டு எப்படி அ.தி.மு.க.வுடன் நாங்கள் போய் சேர முடியும். எங்களின் தொண்டர்களை குழப்புவதற்காகத்தான் இணைப்பு என்று கிளப்பி விடுகிறார்கள்.

    வினய்குமார் அறிக்கையில் சசிகலாவுக்கு 4-5 அறைகள் ஒதுக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி சிறை நிர்வாகம் தனி பிளாக்கில் தான் சசிகலாவை தங்க வைத்து இருக்கிறார்கள். அதனால் சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை.

    அதிகபட்சம் 45 நிமிடங்கள் தான் சசிகலாவை சந்திக்க அனுமதிப்பார்கள். அதற்கு மேல் பார்க்க விடுவதில்லை. மற்ற உறவினர்களையும் அதுபோலத்தான் பார்க்க அனுமதிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #SupremeCourt
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #SC #EC #TTVDhinakaran
    புதுடெல்லி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாக பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே, திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தினகரன் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். ஆனால் குக்கர் சின்னம் ஒதுக்குவதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் டிடிவி தினகரனின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கீரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

    பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை ஒரு தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது என்றும், பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பட்ட ஒரு கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. #SC #EC #TTVDhinakaran
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூர் இடைத்தேர்தலில், அ.ம.மு.க.விற்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SupremeCourt #TTVDhinakaran #Cooker
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

    அவரது ஆதரவாளர்கள் குக்கர்களை கையில் ஏந்திய படி பிரசாரம் செய்தது பெரும் வரவேற்பைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

    இந்தநிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் தினகரன் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


    அத்துடன் திருவாரூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தினகரன் விருப்பம் தெரிவித்து உள்ளார். குக்கர் சின்னமானது சுயேட்சை சின்னம் என்பதால் தேர்தலின் போது வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என்றும், தனது கட்சிக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவில் அவர் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.த்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். அது ஏற்கப்படவில்லை. இந்த மனு வருகிற 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? என்பது தெரியவரும். #SupremeCourt #TTVDhinakaran #Cooker
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் பொதுமக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் பேசினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran
    உடுமலை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் 3 நாட்கள் பிரசார பயணம் மேற்கொள்கிறார். நேற்று மாலை அவர் உடுமலை பஸ் நிலையம் முன்பு இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார்.

    அவர் மக்களுடனான பிரசாரம் பயணம் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் டி.டி.வி. தினகரன் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் புதிய பிரசார வாகனத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தேர்தல் பிரசாரம் போல் தனது புதிய பிரசார வாகனத்தில் நின்றபடி அவர் பேசியதாவது:-

    தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு கை கட்டி சேவகம் செய்கின்றனர் . துரோக சிந்தனை உடையவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள்.

    எல்லா துறையிலும் ஊழல் பெருகி விட்டது. டி.ஜி.பி., அமைச்சர் வீடுகளில் சோதனை நடக்கிறது.

    தங்களது முகத்திரை கிழிக்கப்படும் என்ற பயத்தில் உடுமலையில் கூட்டம் நடத்த இடைஞ்சல்கள் செய்தனர். யாருக்கும் பயப்படாத ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் கொடுப்போம்.

    எல்லா பிரச்சனைகளிலும் மத்திய அரசின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருக்கின்றது. மடியில் கணம் இருப்பதால் மத்திய அரசு சொல்வதை இந்த ஆட்சியாளர்கள் கேட்டு வருகின்றனர் .

    ஆனைமலையாறு நல்லாறு திட்டம் அமைக்க கேரளா அரசு தடையில்லா சான்று கொடுக்காமல் இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முயற்சிக்கவில்லை.

    காவிரியில் அதிகமாக வரும் தண்ணீரை சேமிக்கவும் எந்த திட்டமும் இந்த அரசு செய்யவில்லை.

    விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் பொதுமக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை உருவாக்கி தருவோம். உடுமலையில் தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.

    திண்டுக்கல்- பொள்ளாச்சி சாலை பணிக்காக நிலம் வழங்குபவர்களுக்கு 4 மடங்கு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அ.ம.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கொமரலிங்கம் பகுதியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது-

    மக்கள் விரோத, துரோக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு உங்கள் விருப்பமான ஆட்சி விரைவில் அமையும். இந்த அரசின் மீது ஊழல் புகார் குற்றச் சாட்டுகளை அறப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.

    அம்மாவின் ஆட்சி நடைபெறவில்லை. நாம் எதிர்பார்க்கும் மக்கள் ஆட்சி விரைவில் அமையும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். இந்த அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அம்மா ஆட்சி நடைபெறும்.

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் 100 ரூபாயை எட்டி விடும். பாரதிய ஜனதா தலைவர் நீதிமன்றத்தை அவமதித்தால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு அச்சப்படுகிறது.

    கொமரலிங்கம் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய மக்களின் கோரிக்கையான திருமூர்த்தி அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தேவனூர் புதூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தினகரன் பேசினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran
    ×