search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dhinakaran party"

    டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #SC #EC #TTVDhinakaran
    புதுடெல்லி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாக பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே, திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தினகரன் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். ஆனால் குக்கர் சின்னம் ஒதுக்குவதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் டிடிவி தினகரனின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கீரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

    பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை ஒரு தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது என்றும், பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பட்ட ஒரு கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. #SC #EC #TTVDhinakaran
    முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். #SarithaNair #TTVDhinakaran
    நாகர்கோவில்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் சரிதா நாயர்.

    பெண் தொழில் அதிபரான இவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணையின் போது அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது செக்ஸ் புகார் கூறினார்.

    இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள், முதல்-மந்திரி அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினர்.

    வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் சினிமா மற்றும் டெலிவி‌ஷன் தொடர்களில் நடிக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    ஆனால் அவர் குமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்கினார்.

    குமரி மாவட்டம் வந்து சென்ற சரிதா நாயருக்கு இங்குள்ள சில அரசியல் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று திடீரென நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு சென்றார்.



    அவரை சந்தித்து பேசிய சரிதா நாயர் பச்சைமாலுக்கு சால்வை அணிவித்ததோடு, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் கேட்டார்.

    இதற்கு ஒப்புக்கொண்ட பச்சைமால் இந்த தகவலை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிப்பதாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்பு முடிவை கூறுவதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இதனை முன்னாள் அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.

    கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர், இப்போது தமிழக அரசியலில் கால் பதிக்க நினைப்பது இங்குள்ள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SarithaNair #TTVDhinakaran

    ×