search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் தாக்கியதாக மாநிலங்களவை பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜனதாவை குற்றம்சாட்டியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.

    அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.

    • இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
    • பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2027-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். அண்டை நாட்டை பற்றி ஒரு போதும் சாதகமாக பேசாத பாகிஸ்தான் தற்போது இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாக அந்நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    உலக அளவில் இந்தியா குறித்த கருத்து மாறி விட்டதாகவும், அனைத்து நாடுகளின் தலைவர்களும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் கூறி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது மட்டுமல்ல. 2029-ம் ஆண்டிலும் நரேந்திர மோடியே பிரதமராக இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
    • பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

    கடந்த இரு பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை எதிர்த்து அஜய் ராய் களம் இறங்கினார். தற்போது மோடியை எதிர்த்து தொடர்ந்து 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    54 வயதான அவர் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபித் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கினார். பின்னர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

    1996-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் கோலஸ்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-ம் ஆண்டிலும், பின்னர் 2007- ம் ஆண்டிலும் தேர்தலில் வென்றார். 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதால் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

    அந்த தேர்தலில் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றார்.

    2009-ம் ஆண்டு கோலஸ்லா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அஜய் ராய் 2012- ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 -ம் ஆண்டு தேர்தல்களில் அஜய்ராய் 3-வது இடத்தை பிடித்தார். 2014-ம் ஆண்டு 7.34 சதவீத வாக்குகளும், 2019-ம் ஆண்டு 14.38 சதவீத வாக்குகளும் பெற்றார்.

    • வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்.
    • பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரெயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரெயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்தாள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

    பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரெயில் வர உள்ளது.

    நடைபெற்று முடிந்த 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.

    எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.

    தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்.

    டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் தி.மு.க.வின் சாதனை. தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

    கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை தி.மு.க. அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.

    கருணாநிதி பற்றிய பாடம் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.தற்போது 8-ம் வகுப்பிலும் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

    பா.ஜ.க. கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.

    எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.

    57 வருடமாக காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தவறிவிட்டதாக இப்போது செல்வ பெருந்தகை கூறுகிறார். தி.மு.க.வின் தோளில் அமர்ந்து கொண்டு காங்கிரசை எப்படி வளர்க்க முடியும்.

    நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நிற்கிறோம். தி.மு.க.வை விட்டு ஒருபோதும் காங்கிரசால் வெளியே வர முடியாது.

    அரசியலுக்காக தற்போது செல்வ பெருந்தகை இப்படி பேசியுள்ளார். இது ஒரு புறமிருக்க தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என ஈ . வி. கே. எஸ். இளங்கோவன் சொல்கிறார்.

    இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
    • ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 5-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் குருஷேத்திரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக பிஜூ ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா ரூ.482 கோடி சொத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆம்ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ரூ.169 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்தது.

    வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டத் தேர்தலில் மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 338 பேர் (39 சதவீதம்) கோடீஸ்வரர்களாவர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடியாக உள்ளது.

    இத்தேர்தலில் 6 பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 48 பேரும் காங்கிரசை சேர்ந்த 25 வேட்பாளர்களில் 20 பேரும், சமாஜ்வாடியைச் சேர்ந்த 12 வேட்பாளர்களில் 11 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 வேட்பாளர்களில் 7 பேரும், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த 6 பேரும், ஆம்ஆத்மியைச் சேர்ந்த 5 பேரில் 4 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 141 பேர் மீது அதி தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில் ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.

    இதுவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். பணமாக 1 ரூபாயும் வங்கியில் சேமிப்பாக 1 ரூபாயும் வைத்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரபாபு நாயுடு மகாலட்சுமி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.
    • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிரா மாநிலம் கோலாம்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அவருடைய குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    நாட்டையும் நாட்டு மக்களையும் ஆசீர்வதிக்கும் சக்தி வாய்ந்த தெய்வமான மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற நீண்ட காலமாக முடிவு செய்திருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் மக்களுடைய மனநிலை நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ளது.

    இதனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    • வாக்கு வங்கியை திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.
    • மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்றுவேன்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலத் தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:-

    பாராளுமன்ற தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பா கும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியா வின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

    கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

    சமாஜ்வாடியின் 'இளவரசா்' (அகிலேஷை குறிப்பிடு கிறாா்), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

    மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமை களைப் பறிக்கவும் திட்ட மிட்டுள்ளனா். நான் உயி ரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறை வேற அனுமதிக்க மாட்டேன்.

    வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, '5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்' என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது 'இந்தியா' கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

    'இந்தியா' கூட்டணி சித றுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலை வா். எதிா்க்கட்சிகள் விலகி யோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்க ளுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்று வேன்.

    சமாஜ்வாடி, காங்கிரசின் 'இளவரசா்கள்' (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜா னாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்து உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பு கின்றன. அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது.

    பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணாமுல் காங்கி ரஸ் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அர சியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

    இந்துக்கள், தலித் சமூ கத்தினா் மற்றும் பெண் களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும்.

    ராமா் கோவிலை புனித மற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனா்.

    தற்போதைய தேர்தலில் நீங்கள் 2 விதமான மாடல் களை பார்க்கிறீர்கள். ஒன்று மோடி மாடல், மற்றொன்று எதிர்க்கட்சிக ளின் ஆணவ மாடல். காங்கிரஸ், சமாஜ் வாடி இரண்டும் இங்கு கூட்டணி அமைத்து அந்த ஆணவத்தில் ஈடுபட்டு உள்ளன.

    அவர்களது கூட்டணியில் உள்ள தென்மாநில கட்சி ஒன்று சனாதன தர்மத்தை இழிப்படுத்தி பேசியது. அப்போது காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியினரும் மவுனமாக இருந்தது ஏன்?

    கூட்டணிக்காக அவர்கள் கொள்கைகளை தியாகம் செய்து விட்டனர். இத்தகைய அரசியலை விதைக்க முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தனி நாடு என யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்

    பிளான் ஏ வெற்றி பெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே திட்டம் பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
    • எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் இன்று (மே 16) போலீசாளர் அவரது இல்லத்துக்கு சென்று 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதனிடையே நாளை தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராக கோரி பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே டெல்லி பாஜக தீவிரமாக விமர்சனங்களை முனைவைத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின் ஸ்வாதிக்கு மலிவால் தனது X தள பக்கத்தில் "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.

    எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தலே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். குறிப்பாக பாஜக இதை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.
    • சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகளவில் பதிவானது. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாக தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.

    அந்த வகையில், தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பொழிகிறது. இதனிடையே சென்னையில் பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறக்கும் விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

    இதையடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன், பொது மக்களுக்கு குளிர்பானம், பழ வகைகளுடன் சுடச்சுட உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைத்தோம், என்றாலும் மழை பெய்து வானமே தண்ணீரை கொடுத்துவிட்டது. ஆனாலும், நாங்கள் சூடான சாப்பாடு கொடுக்கிறோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருந்தோம்."

    "நாம தண்ணீர் கொடுக்கும் முன், வானமே தண்ணீர் கொடுத்ததில் மகிழ்ச்சி. சூடு தணிப்பதில் அக்கறையுடன் இருக்கிறோம். சூரியன் மறைந்திருக்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. மழை பொழிகிறது. மழை பொழிந்தால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும்," என்று தெரிவித்தார்.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 ஆம் தேதி பிகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அதனையடுத்து மே 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம், ஹரியானா, பிகார், மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மங்களவைத் தொகுதிகளில் 6 ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 57 தொகுதிகளில் பலவேறு காட்சிகளை சார்ந்தும், சுயேட்சையாகவும் சுமார் 869 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் ஜனநாயக சீர்திருந்த சங்கம் இன்று (மே 16) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைப் படி 6 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் பெரிய காட்சிகளை சேர்த்த 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 141 வேட்பாளர்கள் மீது கடுமையாக குற்ற வழக்குகள் உள்ளன.

     

    இதில் மொத்தமாக 56 பாஜக வேட்பாளர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் 25 காங்கிரஸ் வேட்பாளர்களில் 8 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜவாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சி வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் 869 பேரில் 366 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. பாஜகவில் 48 பேரும், காங்கிரஸில் 20 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 

    ×