search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • காலை முதலே ஆர்வமுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
    • 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை துவங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று (மே 7) உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

    இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 75.26 சதவீதம்

    பீகார் 56.55 சதவீதம்

    சத்தீஸ்கர் 66.99 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 65.23 சதவீதம்

    கோவா 74.27 சதவீதம்

    குஜராத் 56.76 சதவீதம்

    கர்நாடகா 67.76 சதவீதம்

    மத்திய பிரதேசம் 63.09 சதவீதம்

    மகாராஷ்டிரா 54.77 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 73.93 சதவீதம்

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    • அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
    • உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம்: 74.86 சதவீதம்

    பீகார்: 56.01 சதவீதம்

    சத்தீஸ்கர்: 66.87 சதவீதம்

    கோவா: 72.52 சதவீதம்

    குஜராத்: 55.22 சதவீதம்

    கர்நாடகா: 66.05 சதவீதம்

    மத்தியப் பிரதேசம்: 62.28 சதவீதம்

    மகாராஷ்டிரா: 53.40 சதவீதம்

    உத்தரப் பிரதேசம்: 55.13 சதவீதம்

    மேற்கு வங்காளம்: 73.93 சதவீதம் 

    • அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்
    • உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் - 63.08 சதவீதம்

    பீகார் - 46.69 சதவீதம்

    சத்தீஸ்கர் - 58.19 சதவீதம்

    கோவா - 61.39 சதவீதம்

    குஜராத் - 47.03 சதவீதம்

    கர்நாடகா - 54.20 சதவீதம்

    மத்தியப் பிரதேசம் - 54.09 சதவீதம்

    மகாராஷ்டிரா - 42.63 சதவீதம்

    உத்தரப் பிரதேசம் - 46.78 சதவீதம்

    மேற்கு வங்காளம் - 63.11 சதவீதம்

    • பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    திருப்பதி:

    குஜராத், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    கோவாவில் உள்ள 2 தொகுதியில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

    இந்த கருத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ராஜபுத்திர பெண்கள் ஒன்றாக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க போவதாகவும் எச்சரித்தனர்.

    குஜராத் மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் 17 சதவீதம் வரை உள்ளனர். அவர்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வால் சமாளிக்க முடியாது என்பதால் பிரதமர் மோடி நேரடியாக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

    மேலும் பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராகவும் சில வேட்பாளர்களை பா.ஜ.க தலைமை களமிறக்கி உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போது 25 இடங்களில் வெற்றியை எட்டியது. தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

    அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்தும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது.

    கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இங்கு தனித்து போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் வடக்கு கோவாவில் பா.ஜ.க எளிதாக வெற்றி பெற்றது. தெற்கு கோவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் அங்கு வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் கோவா பார்வர்டு கட்சி ஆதரவளித்து உள்ளன.

    கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 3 அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு தொந்தரவாக மாறி உள்ளன. விறுவிறுப்பான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகளால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
    • காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

    ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.

    இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.

    பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

    குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.

    வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


    காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.

    காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

    மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
    • ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் பற்றி வழக்கமாக வெளிநாடுகள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் இந்த தடவை அதில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தலை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அந்த வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. அவர்களால் இந்த விசயத்தில் வெற்றிபெற இயலாது.

    இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஒருபோதும் எடுபடாது. நெருக்கடி நிலைக்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக ஏழைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கி றார்கள். அவர்கள் வெளி நாட்டு சக்திகளின் சதிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.

    இந்த தடவை தேர்தலில் ஜெயித்தால் நான் சர்வாதிகாரி ஆகி விடுவேன் என்று சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியை யும், அவர்களது மூதாதை யர்கள் செய்ததையும் எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்கட்டும். அவருடைய (ராகுல்காந்தி) பாட்டி என்ன செய்தார்? அவருடைய பெரிய தாத்தா என்ன செய்தார்?

    மோடி கட்சியின் ஆட்சியில் என்ன செய்யப்பட்டது? இதை ஒப்பிட்டு பார்த்தால் யார் சர்வாதிகாரி என்பது தெரிந்து விடும். இதுபற்றி யாராவது விவாதிப்பது உண்டா?

    அரசியல் சட்டத்தில் நேரு முதல் முதலில் பெரிய மாற்றங்கள் செய்தார். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது என்னவெல்லாம் நடந்தது? இப்போது எனது ஆட்சியில் 10 ஆண்டுகளில் என்ன நடந்தது?

    காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தை யும் பட்டியலிட முடியும். எனது ஆட்சியில் அத்தகைய தவறுகள் ஒன்றைகூட சுட்டிகாட்ட முடியாது. ஜன நாயகம் என்பது எங்களது ரத்த நாளங்களில் ஓடியது. எனவே சர்வாதிகாரி என்ற பேச்சுக்கே இடமில்லை.

    அதுபோல நான் முஸ் லிம்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கி றார்கள். வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்ட பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்று தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி உள்ளோம்.

    பா.ஜ.க. அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். ஒரு கிராமத்தில் 50 பேருக்கு வீடு தேவை என்றால் 50 பேருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். ஜாதி, மதம் பார்த்து எதுவும் நடக்காது.

    அனைத்து ஜாதி, மத மக்களும் அனைத்துவிதமான திட்ட பயன்களும் பெறுவார்கள். இதுதான் சமூகநீதியின் உத்தரவாதம். 2002-ம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டபோது நாங்கள் திட்டமிட்டு அதை ஒடுக்கினோம். அதன் பிறகு இன்று வரை மத கலவரம் ஏற்படவில்லை.

    முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமது நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு எந்தவிதத்தில் இடையூறு ஏற்பட்டு இருப்பதாக கருத முடியும். முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு இஸ்லாமியன ரும் இந்தியாவின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்தஒரு மதத்தை சார்ந்தவரும் கொத்தடிமை போல் வாழ்வதை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். என்றா லும் சிலர் பயம் காரணமாக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.

    வாரணாசி தொகுதிக்கு 2014-ம் ஆண்டு சென்ற போது நான் அங்கு போட்டியிடுவது என்று கடைசி நிமிடத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அங்கு மனுதாக்கல் செய்து முடித்த பிறகு மக்கள் மத்தியில் பேசினேன். அப்போது நான் எனது பேச்சுக்கான குறிப்புகளை தயார் செய்திருக்கவில்லை.

    வாரணாசி மக்கள் மத்தியில் பேசுகையில், `என்னை யாரும் இங்கு அனுப்பவில்லை. கங்கை தாய் என்னை வரவழைத்து தத்து எடுத்து இருக்கிறாள்' என்று கூறினேன். அதை வாரணாசி மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக நான் வாரணாசியில் தொடர்ந்து இருக்கிறேன். நான் பேசும்போதெல்லாம் எனது வாரணாசி என்று தான் குறிப்பிடுவேன். எனக்கும், வாரணாசி தொகுதிக்கும் இருக்கும் தொடர்பானது ஒரு தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது.

    வாரணாசி போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு நான் குஜராத்தில் உள்ள வீட்டுக்கு சென்றபோது எனது தாய் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் 2 விசயங்களை என்னிடம் குறிப்பிட்டார். ஒன்று-எப்போதும் ஏழைகளுக்காக உழைத்துக் கொண்டே இரு. 2-வது எந்த காரணத்தை கொண்டும் ஊழலுக்கு இடம் கொடுக்காதே என்று கூறினார்.

    இந்த இரண்டையும் நான் இப்போதும் கடை பிடித்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்று வருவதை வழக்கத்தில் வைத்திருந்தேன்.

    எனது தாயாரிடம் ஆசி பெறாமல் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது இப்போதுதான் முதல் தடவை. அதே சமயத்தில் 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்கள் இருந்து என்னை ஆசிர்வதிக்கிறார்கள்.

    அந்த ஆசியுடன் நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

    2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதீய ஜனதா பெற்றது. இந்த தடவை ஆந்திரா, ஒடிசா, வடக்கு கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. எனவே 400 இடங்களை நிச்சயம் எட்டி பிடிப்போம்.

    கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான குற்றச் சாட்டுகள் தொடர்பாக நான் மவுனமாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

    பிரஜ்வால் போன்றவர்க ளின் செயல்களை ஒருபோ தும் பொறுத்துக் கொள்ள இயலாது. என்றாலும் அவர் தொடர்பான ஆயிரக்க ணக்கான வீடியோக்கள் ஒரே நாளில் திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வீடியோக்களை தொகுத்து உள்ளனர். தேர்தல் சமயத்தில் சதிதிட்டத்துடன் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    3-வது முறை பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அதற்கான திட்டமிடலில் நான் ஈடுபட்டுள்ளேன். தேர்தலுக்கு பிறகு நான் மிக முக்கியமான பெரிய முடிவுகளை எடுக்க உள்ளேன். அந்த முடிவு களில் இருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை.

    ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுவிட்டது. ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.

    எனது நாடு எந்த ஒரு சிறிய விசயத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கொள்கை முடிவுகளை செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால்தான் இந்தியாவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இனி அத்தகைய நிலை இருக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.
    • கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    செவெல்லா தொகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க.வினரின் பார்வையில் கடவுள் ஓட்டுக்காகவும் ராமர் இருக்கைக்காகவும் நிற்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.

    பா.ஜ.க. தலைவர்கள் போலியான இந்துக்கள். ஆனால் எங்களுக்கு ராமர் எப்போதும் ராமர் தான். அயோத்தி கோவிலில் சிலை பிரதிஷ்டை முன்பு ராமரை அவமதித்து புனித அரிசி விநியோகம் செய்து பா.ஜ.க. தலைவர்கள் ஏமாற்றினர். ரேசன் கடைகளில் சேகரிக்கப்படும் அரிசியில் மஞ்சள் தூள் கலந்து அதனை புனித அரிசி என ஏமாற்றி வினியோகம் செய்தனர். அரசியல் சட்டத்தை மாற்றவும் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் பா.ஜ.க. சதி செய்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது. அதன் தலைவர்கள் நாட்டையும் மக்களையும் அம்பானி அதானிகளிடம் அடகு வைக்க விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. என்பது பிரிட்டிஷ் ஜனதா கட்சி.யாரை கேள்வி கேட்டாலும் கைது செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும்.
    • கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும்போது ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    அகமதாபாத்:

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிக்கு வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி,

    இந்தியாவின் தேர்தல் செயல்முறை, தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது. சுமார் 64 நாடுகளில் தேர்தல்கள் நடக்கின்றன. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்து ஒப்பிடவேண்டும்.

    இந்த தேர்தல் ஆண்டு ஜனநாயகத்தின் கொண்டாட்டம் போன்றது. திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும்போது ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உங்களுக்கு ஆற்றலையும் தரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

    இதையடுத்து, உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

    முன்னதாக, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு இருந்தார்.


    • மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார்
    • இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்

    இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

    நேற்று கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான். ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்று பேசியுள்ளார்.

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    ×