என் மலர்tooltip icon

    இந்தியா

    மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்
    X

    மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

    • காலை முதலே ஆர்வமுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
    • 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை துவங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று (மே 7) உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

    இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 75.26 சதவீதம்

    பீகார் 56.55 சதவீதம்

    சத்தீஸ்கர் 66.99 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 65.23 சதவீதம்

    கோவா 74.27 சதவீதம்

    குஜராத் 56.76 சதவீதம்

    கர்நாடகா 67.76 சதவீதம்

    மத்திய பிரதேசம் 63.09 சதவீதம்

    மகாராஷ்டிரா 54.77 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 73.93 சதவீதம்

    Next Story
    ×