search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவா"

    • நேபாள மேயர் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்
    • கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோரிக்கை

    கோவாவில் தங்கி இருந்த தனது மகளை காணவில்லை என்று நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால் தெரிவித்துள்ளார்.

    36 வயதான ஆர்த்தி ஹமால் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து சில மாதங்களாக தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    இந்நிலையில், மார்ச் 25 இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே இருந்த ஆரத்தி, அதற்கு பின் காணவில்லை என அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

    கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோபால் ஹமால், சமூக வலைத்தளங்களில் உதவி கோரியுள்ளார்.

    இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள கோவா காவல்துறை, ஆர்த்தியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

    • இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுகிறது.
    • ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

    காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக கோபி மஞ்சூரியன் விளங்குகிறது. இந்த நிலையில், கோபி மஞ்சூரியன் உணவிற்கு கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.

     


    முன்னதாக 2022-ம் ஆண்டு கோவாவை சேர்ந்த மபுசா நகரில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் இந்த உணவு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

    மும்பையை சேர்ந்த நெல்சன் வாங் என்பவரே இத்தகைய உணவை கண்டறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கோழி இறைச்சியை கொண்டு மஞ்சூரியன் செய்து 1970-க்களில் பரிமாறியதாக தெரிகிறது. பிறகு, இந்த உணவு காலிஃபிளவர் கொண்டும் சமைக்க துவங்கப்பட்டது. அந்த வகையில் கோபி மஞ்சூரியன், கோழி இறைச்சி வகைக்கு மாற்றான சைவ உணவாக மாறியது. 

    • கோவா பாஜகவில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
    • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது.

    பனாஜி:

    கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில்  8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


    இந்நிலையில், பாஜகவில் இணைந்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளதாவது: காங்கிரசில் தலைமை எங்கே இருக்கிறது? தலைமை இருந்திருந்தால், 2017 ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போது நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்.

    திடீரென என்னிடம் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள்.இது நியாயமா? என்னை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.

    ஒரு முடிவெடுக்கணும்னு நினைச்சப்போ, நான் கோவிலுக்குப் போனேன், என் தொண்டர்கள் கோபமா இருக்காங்க, இனி காங்கிரசுக்கு வேலை செய்ய வேண்டாம்னு எனக்கு சாதகமாக கோவில் பிரசாதம் வந்திருக்கு. நான் அவர்களிடம் (ஆதரவு எம்எல்ஏக்கள்) உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்தேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோவாவில் ஆபரேஷன் கிச்சாட் மூலம் எம்எல்ஏக்களை பாஜக மாற்றியுள்ளாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.

    இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
    • கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.

    கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

    இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

    கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Nipahvirus #Goahospital
    பனாஜி:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கோவாவில் நிபா வைரஸ் பரவியிருப்பதாக வந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து வந்த நபர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பேசிய மாநில சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானே, 'காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. அவருடைய ரத்த மாதிரிகள் புனே தேசிய சோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரும் பயப்பட தேவையில்லை' என கூறினார்.

    கேரள மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் கோவாவில் பரவியதாக வந்த தகவல் அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #Nipahvirus #Goahospital
    கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக கோவா காங்கிரஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. #KarnatakaCMRace #GoaCongress
    பணாஜி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

    இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் செல்ல குமார் மற்ற கட்சி தலைவர்களுடன் நாளை அம்மாநில கவர்னரை சந்திக்க உள்ளார்.

    அப்படி ஆட்சியமைக்க அழைக்காத பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் மாளிகையில் தர்ணா நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    40 இடங்கள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜக 13, மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வென்றது. சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 
    ×