என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    • முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார்.

    கேரளாவில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்ததால் 2 இடங்களில் இன்று நடக்க இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள விழிஞ்சம் வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஜஸ்டின் பிரான்சிஸ்(வயது60) நேற்று முன்தினம் இரவு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட விழிஞ்சம் வார்டுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் ஆல்பிரட் அறிவித்தார்.

    இதேபோல் மலப்புரம் மாவட்டம் மூத்தேடம் பஞ்சாயத்து 7-வது வார்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா(49) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட வார்டிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர்.
    • பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர்.

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இன்று மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. 471 கிராம பஞ்சாயத்துகள், 75 தொகுதி பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 39 நகராட்சிகள், 3 மாநகராட்சிகளில் உள்ள 11,168 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர். மொத்தம் 15,432 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதலில் காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு சென்றனர். காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் இரண்டு மணி நேரத்தில் மிகக்குறைவான சதவீதமே வாக்குகள் பதிவாகியிருந்தது.

    பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். மத்திய மந்திரி சுரேஷ்கோபி காலையிலேயே தனது மனைவி ராதிகா நாயருடன் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டார்.

    இதேபோல் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் காலையிலேயே தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஓட்டுப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று தேர்தல் நடைபெற்ற 7 மாவட்டங்களிலும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள்(11-ந்தேதி) உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    • முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.

    இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.

    மீதிமுள்ள 122 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

    121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

    இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.  

    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி வாக்களித்தனர்.
    • அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    பாட்னாவில் வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

    பீகார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார பராமரிப்புக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். பீகார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14-ந் தேதி புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறினார்.

    • இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.
    • இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

    இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 



    • மேற்கு வங்காள மாநிலம் காளிகஞ்ச் எம்.எல்.ஏ. நசிரூதின் அகமது உயிரிழந்தார்.
    • காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தனர்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் காடி தொகுதி எம்.எல்.ஏ கார்சந்த்பாய் சோலங்கி மரணம் அடைந்ததைதொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்.எல்.ஏ பலனி பூபேந்திர சந்து பாய் மற்றும் கேரள மாநிலம் நீலாம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பி.வி. அன்வர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குர்பிரீத் பஸ்சி கோகி மற்றும் மேற்கு வங்காள மாநிலம் காளிகஞ்ச் எம்.எல்.ஏ. நசிரூதின் அகமது ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்த 5 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இத்தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

    • 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    அகமதாபாத் :

    182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.

    19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

    ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது.

    இதன்மூலம் மொத்தம் 63.14 சதவீத வாக்குகள் இறுதியில் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

    இந்த தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 78.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

    பழங்குடியினரின் ஆதிக்கம் மிகுந்த மற்றொரு மாவட்டமான தபி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் முறையே 76.91 மற்றும் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது.

    மாநிலத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பின்னர் 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்கிறது.
    • வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை மற்றும் கமுதி வட்டங்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்க

    ளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    நீரினை பயன்படுத் துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை (காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

    இந்த வேட்புமனுக்கள் 28-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகிகொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார். நீரினை பயன்படுத்துவோர் சங்கங் களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5.2.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் வட்டம் சார்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவ லகத்திலும், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்தில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழக்கரை வட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கமுதி வட்டத்தில் கமுதி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ள லாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
    • மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    அகர்தலா:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

    60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    சர்வதேச எல்லைகள், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

    ஆட்சியை பிடிப்பது யார்? இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக 2 வார காலம் காத்திருக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
    • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

    ராய்பூர்:

    சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

    "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.
    • தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக 15 பேர் கொண்ட சென்னை நகர விற்பனைக் குழு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

    இதில் 6 பேர் தெருவோர வியாபாரிகளில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

    சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் சான்றிதழை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

    திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசினர் உயர்நிலைப்பள்ளி, மணலி மண்டல அலுவலகம், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் உயர் நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல் அரசினர் மேல் நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட் டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைப்பாதை வியாபாரிகள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வாக்கு எண்ணும் மையமான அண்ணாநகர் அம்மா அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில மூடி சீல் வைக்கப்படும்.

    நாளை (28-ந்தேதி) காலை 9 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    ×