search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குமூலம்"

    • வாக்குமூலம் பெறும் போது வக்கீலுடன் இருப்பதற்கு அனுமதி.
    • ஜாபர் சாதிக் பயன்படுத்திய 2 செல்போன்களை கடலில் வீசி எறிந்துள்ளார்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

    திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் வாக்கு மூலம் வாங்குவதற்காக டெல்லியில் உள்ள பாட்டி யாலா கோர்ட்டில் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடமும் 8, 9, 10 ஆகிய 3 நாட்களும் அமலாக்கத் துறையினர் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் ஜெயிலுக்கு சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

    இன்று 2-வது நாளாக ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கினார்கள். நாளையும் வாக்குமூலம் பெறப்படுகிறது.

    ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும் போது அவரது வக்கீல் உடன் இருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜாபர் சாதிக்கின் வக்கீல் பிரபாகரன் டெல்லியில் உள்ளார்.

    இதற்கிடையே ஜாபர் சாதிக்குக்கு எதிராக பாட்டியாலா கோட்டில் 153 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 42  பேரின் சாட்சியங்கள் இடம் பெற்றுள்ளன.

    போதை பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 97 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

    ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலமும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதும் ஜாபர் சாதிக் தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே கடலில் வீசி எறிந்துள்ளார்.

    போதை பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த வெளிநாட்டு கரன்சிகளை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள நிறுவனத்தில் இந்திய பணமாக மாற்றி உள்ளார். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.

    மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.

    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    • சாக்குப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.
    • காலையில் அருகில் உள்ளவர்கள் இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதே என கேட்டபோது அப்படி ஒன்றுமில்லை என மலுப்பலாக பதில் அளித்தேன்.

    கோவை,

    கோவை மாவட்டம் மெட்டுவாவி அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு கிணற்றுக்குள் இருந்த சாக்குப்பையை மீட்டனர்.

    அப்போது சாக்குப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

    விசாரணையில், கிணற்றில் கிடந்த குழந்தையின் தாய், அதே பகுதியை சேர்ந்த வித்யா கவுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யா கவுரி மற்றும் அவரது தாய் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்கா தலில் பிறந்ததால் குழந்தையை கொன்று விட்டதாக வித்யா கவுரியின் தாய் புவனேஸ்வரி தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு புவனேஸ்வ ரியின் சகோதரி அம்மணியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    போலீசாரிடம் புவனே ஸ்வரி அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது:-

    எனது மகளுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விட்டது. இவர் தற்போது கணவரை பிரிந்து எங்களுடன் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கு எங்கள் பகுதியை சேர்ந்த டிரைவரான ரமேசுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகியதால் அவர் கர்ப்பமானார். ரமேஷிடம் தெரிவித்த போது கருவை கலைக்க கூறினார்.

    அதன்படி நான் எனது மகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அப்போது குழந்தை வளர்ச்சி அடைந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் என்னிடம் எனது மகள் வயிறு பெரிதாக இருப்பதாக கேட்டனர். அதற்கு நான் அவளுக்கு வயிற்றில் கட்டி என தெரிவித்து சமாளித்தேன்.

    சம்பவத்தன்று, எனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நான் எனது சகோதரி அம்மணியை அழைத்தேன். பின்னர் நானும், எனது சகோதரியும் சேர்ந்து பிரசவம் பார்த்தோம். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்ததும் அதிக சத்தத்துடன் அழுதது. திருமணம் ஆகாமலேயே வேறு ஒருவருடன் பழகி குழந்தை பிறந்தது தெரியவந்தால் குடும்ப மானம் போய் விடும் என்பதாலும், குழந்தை அழுது கொண்டே இருந்ததால் சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என பயந்து போன நாங்கள் குழந்தையை கொல்ல முடிவு செய்தோம்.

    எங்கள் மனதை கல்லாக்கி கொண்டு, வீட்டில் இருந்த சாக்குப்பையை எடுத்து அதில் குழந்தையை போட்டோம். பின்னர் எங்கள் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு எதுவும் நடக்காது போல் இருந்து விட்டோம்.

    காலையில் அருகில் உள்ளவர்கள் இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதே என கேட்டபோது அப்படி ஒன்றுமில்லை என மலுப்பலாக பதில் அளித்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் குழந்தையை கொன்ற புவனேஸ்வரி, அவரது சகோதரி அம்மணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக வித்யா கவுரி இருந்ததும் தெரியவந்தது.

    தற்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், போலீஸ் பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மனைவி பிரிய காரணமாக இருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
    • உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் வசித்து வருப வர் கணபதி. இவருக்கு கந்த சாமி என்ற சசிகுமார் (வயது 18), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்ததோடு, தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள் ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கந்தசாமி வீட்டின் அறையில் கத்தியால் குத்தப் பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கந்தசாமியின் தந்தை கணபதி அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில அளித்த புகா ரின் பேரில் போலீசார் கொலையுண்ட கந்தசாமி உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.

    குடும்ப பிரச்சினை கார ணமாக உடன்பிறந்த சகோத ரரே இந்த கொலையை செய்தாரா என்ற கோணத் தில் விசாரணை நடத்தப் பட்டது. அதில் சரணக்குமார் தான், சகோதரர் கந்தசா மியை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனது தம்பி கந்த சாமி அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்ததாக வும், அதனால் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதா கவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த தான், நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வும் கூறியுள்ளார்.

    உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • கைதான சிறுவர்கள் வாக்குமூலம்
    • கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் சகாயம் (வயது 45). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும், கன்னியா குமரி சர்ச் சன்னதி தெருவை சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவரை அந்த 3 சிறுவர்களும் சேர்ந்து குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சகாயத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கன்னியாகுமரி சர்ச் சன்னதி தெரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவர் ஒருவரையும், 16 வயது இன்னொரு சிறுவரையும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதா வது:-

    சகாயத்துக்கும் எங்க ளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது சகாயம் பாட்டிலை உடைத்து எங்களை குத்திவிட்டார். இதில் எங்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது இருந்து வந்த முன்விரோதம் காரணமாக நாங்கள் அவரை எப்படியா வது கொலை செய்ய வேண்டும் என்று திட்ட மிட்டோம். இந்த நிலையில் சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு நின்று கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாங்கள் கத்தியுடன் அவரை கொலை செய்வதற்காக அங்கு சென்றோம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சகாயத்தை எங்களது கையில் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் அவரது மார்பில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த 3 சிறுவர்களையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்க ளை சீர்திருத்த பள்ளியில் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். அதன்படி அந்த 3 சிறுவர்களும் நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்த விஜயலட்சுமி, சீமானை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
    • விஜயலட்சுமி, அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு விஜய லட்சுமி அளித்த புகாரில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் சீமான் மீது விஜயலட்சுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் புகார் அளித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்த விஜயலட்சுமி, சீமானை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். அப்போது விஜயலட்சுமி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் விஜயலட்சுமியை இன்று திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தியும் வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

    "விஜயலட்சுமி, அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்காகும். இது தொடர்பாக விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருப்பதை தொடர்ந்து அவரிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புகார் அளித்திருப்பதால் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை நடத்துவோம்.

    விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி முடிக்கபட்ட பிறகு சீமானிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
    • விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரிய சாமி (37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளையில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இதனிடையே பிரேமா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரேமாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். அப்போது கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் பெரியசாமி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தில் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் நான் மோகனூரில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன்.

    அப்போது அங்கு பணியாற்றி வந்த ஒருவருடன் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். மேலும் பேக்கரிக்கு வந்து சத்தம் போட்டார். அப்படி இருந்தும் அவருடன் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை.

    இதனிடையே அந்த பேக்கரியில் இருந்து என்னையும், கள்ளக்காதலனையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். செல்போனில் மட்டுமே கள்ளக்காதலனுடன் பேசி வந்தேன்.

    இருப்பினும் நேரில் சந்திக்க முடியாததால் இருவரும் தவித்து வந்தோம். எனவே பெரியசாமியை கொலை செய்தால் மட்டுமே இருவரும் சந்தோசமாக வாழ முடியும் என 2 பேரும் நினைத்தோம். இது தொடர்பாக நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து பெரியசாமியை கொலை செய்து விபத்து நடந்தது போல் நாடகமாட முடிவு செய்தோம். திட்டமிட்டபடி சம்பவத்தன்று நள்ளிரவு காது வலிக்கிறது என நான் கணவரிடம் கூறினேன். அவர் என்னை மோகனூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.

    இது பற்றி கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்தேன். மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார். அவர், பெரியசாமி மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கள்ளக்காதலன் தப்பி சென்றுவிட்டார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்தேன். இதனால் உறவினர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் நான் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பிரேமாவை கைது செய்த போலீசார் பெரியசாமி கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

    அப்பகுதி மக்கள் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

    அப்போது திடீரென மர்ம கும்பல் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை காரில் கடத்தி சென்றனர்.

    இதனை கண்ட சிலர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் விநாயகர் சிலையை தூக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    காரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது.

    மேலும் விநாயகர் சிலையை திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைத்தால் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று விநாயகர் சிலையை தூக்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம்

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமச்சம்பட்டி ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.

    இவர்களது மகன் மோகன் (24). நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ரவிக்குமார், கவுன்சிலர் சித்ரா, மோகன் ஆகியோரை தலை மற்றும் உடலில் அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலரை வீடு புகுந்து வெட்டிய மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (23), பிச்சைபாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (22), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித் (18) ஆகியோரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    5 பேரிடம் தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகனை வீடு புகுந்து வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 5 பேரும் கவுன்சிலர் வீட்டின் பின் புறத்தில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவோம். அப்போது கஞ்சாவும் பிடிப்போம். இதனை பார்த்த சித்ரா எங்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி வந்தார். மேலும் இங்கு வைத்து கஞ்சா மது அடிக்க கூடாது என எச்சரித்து வந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை வீடு புகுந்து கொலை செய்வது என முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று இரவு நாங்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம். எங்களை பார்த்த கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் சத்தம் போட்டார். அப்போது அவரை நாங்கள் வெட்டினோம். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கவுன்சிலர் சித்ராவையும் வெட்டினோம். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம்.
    • போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு சேரன்மாநகர், பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரி (வயது 40).

    இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த 5 முக்கால் பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

    நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியது. இதில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் ஒரு நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வீட்டிற்குள் சென்று வந்த நபர், ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது33) என்பதும், ரேஸ்கோர்சில் சூப் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெகதீஷ்வரிக்கும், மோகன்ராஜூக்கும் கள்ளக்காதல் இருந்ததும், தகராறில் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நான் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இருந்து ரேஸ்கோர்சில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறேன்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் வசித்தேன். அப்போது எனது வீட்டின் அருகே வசித்த ஜெகதீஷ்வரி என்பவரின் பழக்கம் கிடைத்தது. முதலில் நட்பாக பழகி வந்தோம். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. அவரது மகள் பள்ளிக்கு சென்று விடுவார். கணவரும் வேலைக்கு சென்று விடுவார்.

    அவர்கள் சென்ற பின்னர் நான், ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம். இது அப்படியே தொடர்ந்து வந்தது.

    மேலும் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தேன். நான் அடிக்கடி போனில் பேசுவதால் எனது மனைவிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் என்னிடம் கேட்டபோதெல்லாம் நான் மழுப்பலாக பதில் அளித்து வந்தேன்.

    இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் நான் வீட்டை மாற்றுவது என முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதிக்கு வந்தேன்.

    இங்கு வந்த பின்னரும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. நான் அடிக்கடி அங்கு சென்று அவரை சந்தித்து ஜாலியாக இருந்து வந்தேன்.

    இதற்கிடையே நான் இங்கு வந்த பின்னர், ஜெகதீஷ்வரிக்கு வேறு பல ஆண்களுடனும் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடனும், அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இந்த தகவல் எனக்கு தெரியவந்ததும், நான் இதுகுறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் நான் எதுவும் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து அந்த நபர்களுடன் பழகி வந்தார்.

    இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் என்னிடம் பணமும் கேட்டு வந்தார். நானும் அடிக்கடி கொடுத்து வந்தேன். தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே இருந்தால் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் நான் பணம் தராவிட்டால் உனது மனைவியிடம் கள்ளக்காதலை தெரிவித்து விடுவேன் என்றார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாலும், வேறு பல ஆண்களுடன் பழகியதாலும் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சம்பவத்தன்று காலை ஜெகதீஷ்வரிக்கு போன் செய்து, நான் வீட்டிற்கு வர வா என கேட்டேன். அவரும் வா என அழைத்தார். இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு காலை 11 மணிக்கு சென்றேன். அங்கு அவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன்.

    அப்போது எங்களுக்குள் இதுதொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் சென்றதால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

    பின்னர் 1 மணியளவில் அங்கிருந்து எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். தொடர்ந்து கொலை நடந்ததை வெளியில் காட்டி கொள்ளாமல் எப்போதும் போல சகஜமாக எனது வேலைகளை செய்து வந்தேன். இதனால் என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

    மேலும் வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்றேன். மேலும் போலீசார் என்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக 2 வாகனங்களிலும், நம்பர் பிளேட்டை மாற்றியும் பயணித்தேன். ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து, நான் அணிந்திருந்த சட்டையை வைத்து என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • சீர்காழி போலீசார் விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
    • விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

    இது குறித்த சீர்காழி போலீசார் விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த முருகன்(50) என்பதும், கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார். அவரை கொலை செய்தது யார் என்று சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்ததையடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் ஒரு நபர் இருசக்கரவாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக காவல்நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் மர்மநபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் நாங்கூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 26) என்பது தெரியவந்தது.

    மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த போலீசார்

    தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    முருகனிடம் ரூ.5ஆயிரம் ராஜகோபால் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை கேட்டுவந்த நிலையில் சம்பவத்தன்று முருகனை ராஜகோபால் சீர்காழி வரவழைத்து இரவு நேரத்தில் சாலையோரம் படுத்துறங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

    • சென்னிமலை அருகே கணவனை கொலை செய்த பெண் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதூர் நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தாராபுரம் மற்றும் தர்மபுரி யில் அவர்களது கணவருடன் வசித்து வருகின்றனர்.பாலுவும், ஈஸ்வரியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் சென்னி மலை நாமக்கல்பாளை யத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தனர். பாலு அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போதை யில் வீட்டுக்கு வந்த பாலு ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஈஸ்வரியை கைது செய்தனர். போலீசார் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஈஸ்வரி போலீ சாரிடம் கூறும்போது, எனது கணவர் பாலு தினமும் மது அருந்தி விட்டு இரவில் வீட்டுக்கு வந்து என்னை அடித்து துன்புறு த்துவார். இதனால் நான் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தேன். இந்நிலையில் நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து து ன்புறுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்றார்.இதை அடுத்து ஈஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

    ×