search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகேஓட்டல் தொழிலாளியைகொலை செய்தது ஏன்?நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
    X

    கைதான வாலிபர்கள்.

    பண்ருட்டி அருகேஓட்டல் தொழிலாளியைகொலை செய்தது ஏன்?நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்

    • பண்ருட்டி அருகேஓட்டல் தொழிலாளியைகொலை செய்தது ஏன்? நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்.
    • அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை தீவிர விசாரனை நடத்தியது

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (24). இவர் காடாம்புலியூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 29-ந் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வீட்டில் விட்டனர். சிவக்கொழுந்து விபத்தில் அடிபட்டு சாலையில் கிடந்ததாகவும், அவ்வழியே வந்த நாங்கள் ஏற்றி வந்ததாகவும் கூறிச் சென்றனர் இதையடுத்து சிவக்கொழுந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்துபோனார். ஓட்டல் தொழிலாளியான சிவக்கொழுந்து சாலை விபத்தில் இறக்கவில்லை.

    அதுபோல சாலை விபத்து நடந்ததாக எங்கள் கிராம மக்கள் யாரும் கூறவில்லை. வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற காட்டாண்டிக்குப்பம் 2 வாலிபர்கள்தான் கொலை செய்து இருக்கவேண்டும். அவர்களை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் பண்ருட்டி போலீஸ் துணைசூப்பிர ண்டுசபியுல்லா உத்திரவின் பேரில், காட்டாண்டிக்குப்பம் கிராமத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர் இது தெரிந்த அந்த 2 வாலிபர்களும் தப்பியோட காடாம்புலியூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் அபினேஷ், கார்மேகம் என்பது தெரிய வந்தது.

    மேலும், இந்த 2 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

    நாங்கள் இருவரும் காட்டான்டிக்குப்பத்தை சேர்ந்தவர்கள். ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது சிவக்கொழுந்து எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் இரவு நேரங்களில் சந்தித்து மது குடிப்போம்.

    பரபரப்பு வாக்குமூலம்

    கடந்த 29-ந் தேதி இரவு சிவக்கொழுந்துவுடன் அமர்ந்து நாங்கள் 2 பேரும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் கொண்டு வந்த ஆட்டுக் கறியை சாப்பிடுவதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிவக்கொழுந்து எங்கள் 2 பேரையும் அசிங்கமாக திட்டினான்.

    இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் சிவக்கொழுந்தை தாக்கினோம்.இதில் சிவக்கொழுந்து தப்பியோட முயற்சித்தான். துரத்தி சென்று அடித்து கொலை செய்தோம். இந்த ெகாலையை மறைக்க விபத்தில் அடிபட்டு சிவக்கொழுந்து சாலையில் கிடந்ததாக கூறி அவரது வீட்டில் இறக்கிவிட்டு நாடகம் ஆடினோம்.

    ஆனால் நாங்கள் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். போலீசார் எங்களை தேடுவது தெரிந்து தப்பி ஓட முயன்றோம். ஆனாலும் போலீசார் எங்களை மடக்கி பிடித்துவிட்டனர். மேலும், நாங்கள் சிவக்கொழுந்துவை தாக்கப் பயன்படுத்திய தடியினையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டாம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த 2 பேரையும்

    Next Story
    ×