search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர்"

    • நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை
    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எத்தனையோ கட்சிகள் எத்தனையோ இடங்களில் போட்டியிடட்டும். நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை. வேலூர் மக்களுக்கும் என்னை விட்டால் வேறு வழியில்லை. நான் நல்ல வேலைக்காரனாக உழைப்பேன். உங்களுக்காக கழுதை போல பொதி சுமப்பேன்.

    இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    • இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
    • அதிசய காளான் பாறைகள் வேலூர் மாவட்டம்‌ சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சிவநாதபுரத்தில் அதிசய காளான் பாறை கண்டறியப்பட்டுள்ளது.

    இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அதிசய காளான் பாறைகள் தற்போது வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.

    • விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
    • மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.

    மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.

    • சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.
    • இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

    மந்த நிலையை நீக்கும் திருவலம் வில்வநாதீஸ்வரர்

    வேலூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்தில் வில்வநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.

    இதை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மந்த புத்தி நீங்கும், தோல் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சுவாமி, அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    குடும்பத்தில் மந்த நிலையில் இருப்பவர்களை இங்கு அழைத்து வந்து சுவாமியை தரிசனம் செய்ய வைத்து வில்வம் பிரசாதமாக தருகின்றனர்.

    இதனை சாப்பிட்டவர்கள் மந்த நிலையில் இருந்து மீளப்படுவதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

    அதற்கு தகுந்தார் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு.

    தேவாரப்பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் தொண்டை நாட்டுப்பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 10 வது தலமாக வைத்து போற்றப் பெறும் சிறப்புடையது திருவல்லம்.

    இந்த ஊருக்குள் நிலா நதி ஓடுகிறது. நதியின் கரையிலேயே கோவில் உள்ளது.

    திருமாலும், நான்முகனும், விண்ணுலகத்தார், மண்ணுலகத் தார் அனைவரும் இங்கு வந்து வணங்குவதாக கூறப்படுகிறது.

    எனவே இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படும் சிறப்பு வாய்ந்தது.

    சிவானந்த மௌனகுரு சுவாமி இங்குள்ள பலாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார்.

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் மாலை வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 1 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழையும், தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது.

    இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தின் உட்புறம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்சால்பேட்டை சமத் நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

    இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர்- ஆற்காடு சாலையில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து ஓடியது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூர், திருப்பத்தூர், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.வாணியம்பாடியில் அதிகபட்சமாக 50.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்-45.4, ஆம்பூர்- 39.2, வாணியம்பாடி-50.2, திருப்பத்தூர்-20.3.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாத்தனூர் அணை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. மழை வெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஓடியது.

    போளூர், கலசப்பாக்கம், செங்கம், திருவண்ணாமலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணையில் அதிகபட்சமாக 73.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-28, செங்கம்-21.6, சாத்தனூர் அணை-73.6, போளூர்-48.4, கலசப்பாக்கம்-27, கீழ்பென்னத்தூர்-8.8. #tamilnews
    வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை கானாறு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கானாறு தெருவில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையிலும் குடிநீர் வரவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 8 மணியளவில் பி.டி.சி. ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர்.

    அதற்கு போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீசார் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அந்த பகுதியில் குடிநீர் செல்லும் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் அலுவலகம், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். 
    ×