search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashi Vishwanath temple"

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
    • மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.

    மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
    • கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் அதிக முன்பதிவுகள் செய்து பக்தர்கள் வழிபட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பிரதமர் மோடியின் கனவு திட்டமாக ரூ.630 கோடியில் கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திறந்து வைத்தார்.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் அதிக முன்பதிவுகள் செய்து பக்தர்கள் வழிபட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த 2021 டிசம்பர் 13-ந்தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி வரை கடந்த 2 ஆண்டுகளில் 15,930 வெளிநாட்டு பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 12 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 1000-வது கும்பாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பில் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.

    காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மானாமதுரை அருகே முன்னோர் வழிபாடு நடைபெறும் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
    • காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேபரமக்குடி சாலையில் உள்ள குறிச்சியில் வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு காசியில் இருந்து பூஜித்து காசி விஸ்வநாதர், அன்னபூரணி, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, அனுமன், நந்தி மற்றும் சீரடி சாய் பாபா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம். கோவிலில் உள்ள வில்வம், வன்னி, மாமர இலைகளை வைத்தும் பூஜை செய்யலாம்.

    இக்கோவிலை கட்ட ஏற்பாடு செய்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ஆண்டுக்கு 5 முறை காசி சென்று தங்கி தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்.

    பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் காசியில் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்களோ அதுபோல தமது சொந்த ஊரில் அனைவரும் காசி விஸ்வநாதர் அருளால் முன்னோர்கள் ஆசியை பெற வேண்டும் என காசி விஸ்வநாதர் கோவிலை உருவாக்கி உள்ளார்.

    இங்கு தை, ஆடி, மாஹாளயம் (புரட்டாசி) ஆகிய அமாவாசை தினங்களில் காலை 7 மணி முதல் 11 மணிவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இது தவிர பிரதோஷம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா 10 நாட்கள் மற் றும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, நவகிரக யாகங் களும் நடைபெறுகிறது.

    முன்னோர்கள் ஆசி கிடைக்க பக்தர்களுக்கு தர்ப்பண பொருட்கள் எள், அகத்தி கீரை, பூ ஆகியவைகளை கோவில் நிர்வாகிகள் இலவசமாக வழங்கி வரு கின்றனர். காசி செல்ல முடியாத பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதரை கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்யலாம்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரியங்கா காந்தி. #PriyankaGandhi #KashiVishwanathtemple
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று வாரணாசியை சென்றடைகிறார்.



    பிரியங்கா காந்தி மேற்கொண்டுள்ள படகு பயணத்தின் இறுதி நாளான இன்று வாரணாசிக்கு சென்றார். அங்குள்ள ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  வீட்டுக்கு சென்றார். அங்குள்ள லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு காசி விஸ்வநாதரை வழிபட்டு தரிசனம் செய்தார்.  #PriyankaGandhi #KashiVishwanathtemple
    ×