என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabhishek ceremony"
- ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி பெருமாபாளையத்தில், ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி பெரியசாமி நகர் பழனிமுத்து,– சித்ரா மற்றும் குல தெய்வ பங்காளி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
- திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பேரூர்,
பேரூர் அருகே பச்சாபாளையத்தில், புலிவீரய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, மங்கள இசை, திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது.
தொடர்ந்து, மார்ச் 1-ந் தேதி நிலமகள் வழிபாடு, முதல் நிலை வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து மாலை, முதல் கால வழிபாடும், மார்ச் 2-ந் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு 2ம் கால வழிபாடுகள் துவங்கியது. தொடர்ந்து, மாலை 3ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, இரவு விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 4-ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேல், விநாயகர், குப்புலட்சுமி தாயார், புலிவீரய்யன் ஆகிய கோவில் விமான கலசங்களுக்கும், தெய்வ த்திரு மேனிகளுக்கும், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை, ஓதுவா மூர்த்திகள் ஜெயபிரகாச நாராயணன், பத்மநாபன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதைத்தொடர்ந்து, அலங்கார வழிபாடு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்க ப்பட்டது.இதில், திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் நாகராஜ், செயலாளர் தனபால், பொருளாளர் வேலுச்சாமி, திருப்பணி குழுத்தலைவர் போலீஸ் வேலுச்சாமி மற்றும் உறுப்பினர்கள் குப்புசாமி, கோபால், நாகராஜ் உள்பட ஊமத்தகுல ஆண் மக்களும், பெண் மக்களும் செய்திருந்தனர்.
- கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான கட்டிட வேலைகளை கோவில் நிர்வா கிகள் செய்து வந்தனர்.
- 10ஆயிரம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி, ரெட்டிபாளையத்தில் மாஞ்சோலை கருப்பராயன் கன்னிமார் கோவில் உள்ளது. பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான கட்டிட வேலைகளை கோவில் நிர்வாகிகள் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு சுவாமிகளுக்கும் தனியாக யாக குண்டம் வளர்த்து ஹோமங்கள் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தல் ,நான்காம் கால பூஜை, மகாதீப ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை கருப்பராயன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 10ஆயிரம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வேலவன் கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
- 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரடிவாவி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் கவையகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 22ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, கணபதி ஹோமம், குபேர லட்சுமி யோகம், உள்ளிட்ட யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து கோமாதா பூஜை, முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பிரவேசம், முதல் கால வேள்வி, ஆகியவை நடைபெற்றன. பின்னர் 23ந் தேதி அன்று வேதபாராயணம், மகாபூர்ணாகுதி மற்றும் பிரசாதம் வழங்குதல், விமான கலசம் வைத்தல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
பின்னர் மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் விநாயகர், முருகர், கவைய காளியம்மன், பரிவார மூர்த்திகள்,கோபுர கலசங்கள் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கவைய காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரடிவாவி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த 6-ந் தேதி முளைப்பாரி இடும் நிகழ்சியுடன் விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை ஆலயவிமானம், ஸ்ரீசக்தி விநாயகர், சிவபெருமான், அம்பாளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவரக்கோட்டையில் வில்லுகாபுலி கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் கால பூஜைகளாக லட்சுமி, கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ, தன பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணா குதி தீபாராதனையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக நீர் ஊற்றினர்.
இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழா குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளாக ஊர் அம்பலம் வ.டு. நாச்சியப்பன், நாட்டு கணக்கப்பிள்ளை குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர்.
- கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாயன்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் தொடங்கியது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை :
உடுமலையையடுத்த முக்கூடு ஜல்லிபட்டியில் சக்தி வாய்ந்த உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாயன்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தேவதா அனுக்ஞை, கோ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து நேற்று காலை 4 ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பிம்ப சுத்தி, மஹா பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் காலை 9.30மணிக்கு மேல் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர்,ஸ்ரீ தன்னாட்சியப்பன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
- யாகசாலை பூஜை வழிபாடு , முளைப்பாரி எடுத்து வழிபாடு நடைபெற்றது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்ன வீரன்பட்டி ஊராட்சியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர்,ஸ்ரீ தன்னாட்சியப்பன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பேரூர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற விழாவில், புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. பின்னர் கோபுரங்களுக்கு தீபாராதனை காட்டிய பின் பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் யாக சாலை குண்டம் அமைந்துள்ள இடத்தை பலர் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜை வழிபாடு , முளைப்பாரி எடுத்து வழிபாடு நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் கருப்புசாமி, திவாகரன், தயாநிதி, பாலகிருஷ்ணன், ஜெகநாதன், மாணிக்கவாசகம், சுப்பிரமணி, குழந்தைவேல் உட்பட பலர் செய்திருந்தனர்.
- கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாலிகையிடும் நிகழ்ச்சி நடந்தது.
- சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
திருப்பூர் :
பழமைவாய்ந்த திருப்பூர் நல்லூர் விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் பிப்ரவரி 2ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ராஜகோபுரம், கருவறை விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கருங்கல் பதித்து பணிகள் நடந்துள்ளன. கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாலிகையிடும் நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிேஷக விழா 29ந் தேதி வாஸ்து சாந்தி, கணபதி வழிபாடுடன் தொடங்குகிறது. 30ந் தேதி முதல் வேள்வி பூஜைகள் நடக்கின்றன. நான்காம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, பிப்ரவரி 1ந் தேதி காலை 5:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
பிள்ளையார்பட்டி தலைமை அர்ச்சகர் பிள்ளை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஸ்தானிகம் ராஜாபட்டர் தலைமையிலான குழு, கும்பாபிேஷக பூஜைகளை நடத்த உள்ளது.
இதேநாளில், நல்லூர் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீசெல்லாண்டியம்மன், ஸ்ரீபேச்சியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவும் நடைபெற உள்ளது.
- குலசேகரன் கோட்டை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.
- இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டையில் சிறுமலை ஓடைக்கரையில் 800 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 72 அடி உயர ராஜகோபுரம், விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திர பகவான் ஆகியவற்றிற்கும், மீனாட்சி- சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பா பிஷேகத்திற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.