search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishek ceremony"

    • கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.
    • கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விண்ணப்பள்ளி ஊராட்சி பனங்காட்டு பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள்.

    இக்கோவிலில் கடந்த ஐப்பசி மாதம் 24-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்ப ட்டது. அதைத்தொடர்ந்து கடந்த கார்த்திகை 5-ந் தேதி யாக சாலையில் கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பா றியினை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    மேலும் 6-ந் தேதி கோபுரத்தில் கலசம் அமைத்தல் மற்றும் இறைவன் திருமேனிக்கு மருந்து சாத்துதல், தீர்த்த குடங்கள் யாகசாலைக்கு எடுத்து சென்று முதல் கால வேள்வி மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்று 2-ம் கால வேள்வியை தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மனுக்கு தெய்வத்திருமேனியில் நிலை பெற செய்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை காட்டப்பட்டது.

    இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடி இருந்து பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
    • எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகை மலை அருகே காவல்காரன் பட்டியில் வடசேரி கிராமத்திற்குட்பட்ட ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர் சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சாமி கும்பிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று மாலை இந்த பிரச்சினையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது, இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்தும், மற்றும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து தோகைமலை போலீசார் இரு தரப்பினரிட மும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. 

    • ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது.
    • கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சின்ன மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது. கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30. மணிக்குள் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சாமி சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் வைத்து பூஜை செய்து பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கலசங்களுக்கு ஊற்றி தீபாராதனை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கோவில் அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    யாக சாைல பூஜை

    இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், வருண தீர்த்தம் புனிதப்படுத்தி வேள்வி சாலையை சுத்தப்படுத்துதல், திருமண் பரிசோதித்து எழுந்தருளல், திருமுலை இடுதல், பாலிகை தெளித்தல், அக்னி பகவானை கடைந்து எடுத்தல், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி தொடங்கப்படுகிறது.

    கும்ப பூஜை (கலசபூஜை) திருமாண்பு ஈர்ப்பு செய்தல், கலசத்தில் இறைவனை அமரச்செய்தல், ஐப்பெரும் பூதங்களின் வேள்வி வளர்த்தல் ஆகியவை நடக்கிறது. பின்னர் அனுதின பெருவேள்வி, வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய ப்ரபந்த சமர்ப்பணம், செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்

    நாளை (31-ந்தேதி) காலை 8 மணி முதல் 12. 30 மணிக்குள் வருண தீர்த்தம் புனித படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின ெபருவிழா மற்றும் அஷ்ட பந்தன மருத்து சாற்றுதல் நடக்கிறது.

    தொடர்ந்து பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல் ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிேஷகம்

    நாளை மறுநாள் (1-ந்தேதி) காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனித படுத்துதல் ஆகியவை நடக்கிறது. பின்னர் காலை 10 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகமே மின்ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் கோவிலில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரமே திருவிழா போல் களை கட்டியுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை செல்வா, சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி ஆணையாளர் இளையராஜா, கண்காணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்து வருகின்றன.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆலோசனை

    அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், எம்.எல்.ஏ. ராமலிங்கம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டி யன் நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை முதல் வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை தொடங்கப்பட்டு நாளை மறுநாள் மாலை வரை நடைபெறும். 1-ந்தேதி அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் தடையின்றி செல்ல மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.

    குடிநீர் வசதி

    பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழா நடைபெறும் 1-ந்தேதி அன்று பக்தர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை ஒன்று கோவில் அருகில் அமைக்க வேண்டும்.

    அரங்கநாதர் கோவில் முன்பு 108 ஆன்புலன்ஸ் சேவை முதலுதவி வசதிகளுடன் அதிகாலை 3 மணி முதல் வைத்திருக்க வேண்டும்.

    கண்காணிப்பு கேமரா

    தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வேண்டும். கோவில் வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் இளையராஜா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா ஸ்ரீநிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நவம்பர் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
    • கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.

    கும்பாபிேஷக விழா

    இந்த கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. நாளை (25-ந் தேதி) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. தற்போது இறுதி கட்ட யாக சாலை பூைஜ பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது-

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் பஞ்சாசன வேதிகை அமைத்து நவ குண்டத்துடன் அரண்மனை யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் கோட்டை மாரியம்மனுக்கு 9 யாக குண்டம், விநாயகருக்கு 5 யாககுண்டம் , வெள்ளையம்மன், பொம்மியம்மாள், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு ஓட்டு மொத்தமாக 1 யாக குண்டம், துர்க்கை அம்மன், வைஷ்ணவி, மகேஸ்வரி உள்பட பரிவார மூர்த்திகளுக்கு ஒட்டு மொத்தமாக 1 யாக குண்டம், கோபுரத்திற்கு 5 யாக குண்டம், தங்கத்தேருக்கு தலா 1 யாக குண்டம் என மொத்தம் 23 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜகோபுரத்திற்கு 7 கலசம், மூலஸ்தான விமானம் 5 , விநாயகர் சன்னதி விமானம் 3, மதுரை வீரன் சன்னதி விமானம் 1 என ெமாத்தம் 16 கலசங்கள் வைக்கப்பட உள்ளது.யாகசாலை பூைஜக்கு சேலம், கோவை, தஞ்சை, கடலூர் உள்பட மாவட்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் என மொத்தம் 45 பேர் பங்கேற்கிறார்கள். யாகத்திற்காக 108 வகையான மூலிகைகள், நெய் பழங்கள் பயன்படுத்தப்படும், கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

    விநாயகர் வழிபாடு

    இன்று கணபதி வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் புனித நீர் கலசம், முளைப்பாலிகையை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.

    முதற்கால யாக பூஜை

    நாளை (25-ந் தேதி) காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

    26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
    • புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.4.67 கோடி செலவில் நடைபெற்ற திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூக்களை தூவி சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி மாரியம்ம னுக்கு இன்று காலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடிமர பிரதிஷ்டை விழாவில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமார், இந்து அறநிலை டி.சத்யா என்ற குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது.

    • விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 1000-வது கும்பாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பில் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.

    காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கீழக்கரை

    மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பூர வலசை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து புனித நீர் குடங்களை கோவில் விழா கமிட்டியினர், கிராம முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட, மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி பட்டணம் காத்தான் ஊராட்சி தலைவர் எம். சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    • கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 24 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்
    • கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணு பிரியா (வயது 24) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, இதேபோல் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்ந ஆசைத்தம்பி மனைவி சொர்ண புஷ்பம் என்பவர் அணிந்திருந்த 13 பவுன் நகை, வேறு ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து மூன்று பெண்களும் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன்படி போலீசார் இந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பொதுமக்கள் முறையாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண்களிடம் நகையை திருடிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி ஏரியூரில் உள்ள மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடந்தது.
    பெரும்பாலை, ‌

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே ஆங்கிலேயர் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மேட்டூர் டேம்  கட்டும் பொழுது  சோழவண்டி  (தற்போது மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியாக உள்ளது) இடம்பெயர்ந்து புதூர் சோளப்பாடியாக உருவாகும்போது அந்த பகுதியில் மாரியம்மன்  கோவில் அமைக்கப்பட்டது.

    இத்திருக்கோயிலில் ஏற்கனவே சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை அடுத்து நேற்று  மஹா கும்பாபிஷேகத்திற்காக விழா ஏற்பாடுகளை ஊர் மக்கள் ஒன்றிணைந்து செய்திருந்தனர். 

    மாரியம்மன் கோவில் முதல் நாள் நிகழ்வாக கடந்த 31-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை பம்பைமேளம், வாண வேடிக்கையுடன் ஊர்வல மாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் வந்தடைந்தது.

     இரு தினங்களாக யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் கலாசர்சனம், கும்ப அலங்காரம், ரட்சாபந்த னம், திக்பாலகர் பூஜை, உள்ளிட்டவை நடைபெற்று நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு முதலில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்டு தீர்த்தம் தெளிக்கபட்டது. 

    பின்னர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோ வில் கலசத்திற்க்கு தெளிக்க ப்பட்ட பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    இந்த கோவில் கும்பாபி ஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் மகாராஜன், முத்து, முருகேசன், கோல்காரர் கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.
    ×