என் மலர்
உள்ளூர் செய்திகள்

சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த 6-ந் தேதி முளைப்பாரி இடும் நிகழ்சியுடன் விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை ஆலயவிமானம், ஸ்ரீசக்தி விநாயகர், சிவபெருமான், அம்பாளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
Next Story