மீனாட்சி கோவில் கும்பாபிஷேக விழா

குலசேகரன் கோட்டை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.
மீனாட்சி கோவில் கும்பாபிஷேக விழா
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டையில் சிறுமலை ஓடைக்கரையில் 800 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.

இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 72 அடி உயர ராஜகோபுரம், விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திர பகவான் ஆகியவற்றிற்கும், மீனாட்சி- சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பா பிஷேகத்திற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com