search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "support"

    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, 22 எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இவையனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன. #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கியதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்று தளவாய் சுந்தரம் பேசினார். #thalavaisundaram #admk #pongalgift1000

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோட்டார் நாராயணவீதியில் நடந்தது. நகரச் செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். விக்ரமன் வரவேற்று பேசினார். வீராசாமி, ரபீக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், தலைமைக் கழக பேச்சாளர்கள் பாரதி யன், முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.தி.மு.க. இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. இருக்கும். அம்மா மறைவிற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறமையாக ஆட்சியை நடத்தி வருகிறார்கள். ஏழை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார். இதன்மூலம் அ.தி. மு.க. அரசுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடினமாக உழைத்தால் தங்களுக்கு வர வேண்டிய பதவியும், பொறுப்பும் உங்களுக்கு தேடி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அணிச் செயலாளர்கள் சி.என்.ராஜதுரை, ஜெயசீலன், சுகுமாரன், பொன்சுந்தர் நாத், சுந்தரம், ஷாநவாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரெயிலடி மாதவன், கார்மல்நகர் தனீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம் நன்றி கூறினார். #thalavaisundaram #admk #pongalgift1000

    மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தாவில் நாளை நடத்தும் பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்தியில் நடைபெறும் மோடி தலைமையிலான அரசை வீழ்த்தவும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைக்கவும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

    அவ்வகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் நாளை சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இந்த பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் தெரிவித்துள்ளதாவது:-

    மதங்களுக்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அப்பாற்பட்டு, ஒவ்வொரு தனிமனிதனின், பெண்ணின், குழந்தையின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும் நாளைய இந்தியா உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா முழுவதும் சக்திவாய்ந்த அமைப்புகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. மோடி அளித்த போலி வாக்குறுதிகள் மற்றும் அவரது அரசு கூறிவரும் பொய்களால் ஏமார்ந்த பல்லாயிரம் கோடி மக்கள் இந்த சக்திவாய்ந்த அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

    மோடி அரசு அழிக்க நினைக்கும் ஜனநாயகத்தின் தூண்களையும், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க உண்மையான நாட்டுப்பற்று அவசியம் என்ற காங்கிரஸ் கட்சியின் சித்தாந்த நம்பிக்கையின் பக்கம் அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரண்டுள்ளன.

    இந்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல்லாண்டு காலமாக மேற்கு வங்காளம் மாநிலத்து மக்கள் முன்னணியில் இருந்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றிணைந்துள்ளது என்னும் செய்தியை வெளிப்படுத்தும் மம்தா பானர்ஜி தலைமையிலான நாளைய பேரணிக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally
    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆதாயத்துக்காக தற்போது இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அரசு முன்பே எடுத்து இருக்கலாம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இடஒதுக்கீடு சலுகையை பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கோரிக்கை. இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் உயர்சாதியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது கண்டிக்கத்தக்கது என்று மாயாவதி கூறியுள்ளார்.

    பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்காக புதிய இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward 
    சபரிமலைக்கு பெண்கள் வர ஆதரவு தெரிவித்து பலத்த கண்காணிப்பையும் மீறி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் புகுந்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maoist #SabarimalaTemple
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.

    கடந்த 5-ந்தேதி அட்டபாடிபுதூர் என்ற இடத்தில் சுற்றித்திரிந்த கோவை புலியகுளத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் டேனியஸ் (வயது 30) என்பவரை அகழி போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து தமிழக கியூ பிரிவு போலீசார், கேரள தண்டர் போல்டு போலீசார் தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள ஜெல்லிப்பாறை, தென்மலை ஆகிய ஊர்களில் அரசு அலுவலகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

    அதில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். யூ.ஏ.பி.ஏ. சட்டத்தை திருத்த வேண்டும். மாவோயிஸ்டுகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மாவோயிஸ்டுகளை அரசியல்வாதிகளாக கருத வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    பலத்த கண்காணிப்பையும் மீறி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் புகுந்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை அட்டப்பாடியில் மாவோயிஸ்டுகள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சபரிமலைக்கு வர பெண்களை தடுப்பவர்களுக்கு எதிராக போராடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து அட்டப்பாடி மற்றும் அகழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Maoist #SabarimalaTemple

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட கவனாக், எந்தப் பெண்ணுடனும் தான் தவறாக நடந்தது கிடையாது என தெரிவித்துள்ளார். #DonaldTrump #Kavanaugh #SupremeCourt
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ள கவனாக் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் எழுப்பி உள்ளனர். ஆனால் தன் மீதான செக்ஸ் புகார்களை அவர் மறுத்தார். நான் எந்தப்பெண்ணுடனும் தவறாக நடந்தது கிடையாது என அவர் கூறினார்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். 53 வயதான இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன.



    இந்த நிலையில் பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் பிளாசே போர்டு என்ற பெண்ணும், டெபோரா ரமிரெஸ் என்ற பெண்ணும் செக்ஸ் புகார்கள் எழுப்பி உள்ளனர்.

    தன்னிடம் 36 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட் கவனாக் அத்துமீறி நடந்து கொண்டதாக கிறிஸ்டின் பிளாசே போர்டும், 25 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் பிரெட் கவனாக் பாலியல் ரீதியில் தவறாக நடந்ததாக டெபோரா ரமிரெசும் குற்றம் சுமத்துகின்றனர்.டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக எப்படி செக்ஸ் புகார்கள் எழுந்தனவோ, அதே போன்று இப்போது அவரால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பிரெட் கவனாக்குக்கு எதிராகவும் செக்ஸ் புகார் எழுந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த செக்ஸ் புகார்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படையினரின் (எப்.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

    பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் பிளாசே போர்டு எழுப்பிய செக்ஸ் புகார் பற்றி ‘பாக்ஸ் நியூஸ்’ ஒரு கருத்துக்கணிப்பே நடத்தி முடித்து விட்டது. இதில் அவரது புகாரை நம்புவதாக 36 சதவீதம் பேரும், கவனாக் மீது நம்பிக்கை தெரிவித்து 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர். 34 சதவீதம் பேர் இந்த பிரச்சினையில் யார் மீது நம்பிக்கை வைப்பது என தங்களுக்கு தெரிய வில்லை என்றும் கூறினர்.

    இந்த நிலையில் பிரெட் கவனாக் தன் மீதான செக்ஸ் புகார்கள் குறித்து, தன் மனைவியுடன் ‘பாக்ஸ் நியூஸ்’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் யார் மீதும் செக்ஸ் ரீதியில் அத்துமீறி நடந்தது கிடையாது. பள்ளிக்கூடத்திலும் சரி, வேறு எப்போதும் சரி. நான் எப்போதுமே பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வந்து இருக்கிறேன்.

    எனது வாழ்நாளில் என்னோடு வந்து இருப்பவர்களை கேட்டால் தெரியும். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி நியமனத்துக்கான செயல்முறைகள் நியாயமாக நடைபெற வேண்டும். அப்போது நான் என் நேர்மையை தற்காத்துக்கொள்ள முடியும்.

    1982-ம் ஆண்டு கோடை காலத்தின்போது கனெக்டிகட் அவென்யூவில் நடந்த விருந்தின்போது பாலியல் அத்துமீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. நான் அத்தகைய விருந்தில் கலந்து கொள்ளவே இல்லை.

    சம்பவத்தின்போது உடன் இருந்ததாக கூறப்படுகிறவர்களும், அப்படி ஒரு விருந்து நடந்ததாக தங்களுக்கு நினைவில் இல்லை என்று கூறி உள்ளனர். அப்போது உடன் இருந்ததாக கூறப்படுகிற 2 பெண்களில் ஒருவர், போர்டின் நீண்ட கால தோழி. அவருக்கு என்னை தெரியாது. அவர் தன் வாழ்நாளில் எந்த விருந்திலும் என்னோடு கலந்து கொண்டது இல்லை என்று கூறி இருக்கிறார். போர்டுடன் நான் எந்த உறவும் பாலியல் ரீதியில் வைத்துக்கொண்டது கிடையாது. எனக்கு தெரிந்ததெல்லாம் உண்மை. எந்தவொரு பெண்ணுடனும், என் பள்ளி நாட்களிலோ அல்லது வேறு எப்போதுமோ நான் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஜனாதிபதி டிரம்ப், தொடர்ந்து கவனாக்கை ஆதரித்து வருகிறார். இந்தப் பிரச்சினையை ஜனநாயக கட்சியினர் எழுப்புவதின் பின்னணி என்ன என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 36 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக பிரச்சினை எழுப்புகிற போர்டு, இது பற்றி அப்போது போலீசில் புகார் செய்யாதது ஏன் என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி நியமனத்துக்கு கவனாக் செனட் சபையின் ஒப்புதலை பெற்று விடுவார் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #DonaldTrump #Kavanaugh #SupremeCourt
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதி கவனாக் மீது தற்போது மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் கூறியுள்ளார். #DonaldTrump #Kavanaugh #SupremeCourt
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக, நியூயார்க் பகுதியை சேர்ந்த பிரட் கவனாக்கின் பெயரை ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய இருந்த நேரத்தில், அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. எனவே இந்த ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    இதில் வெளிப்படையாக அளித்த கிறிஸ்டின் பிளாசி போர்டு என்ற பெண்ணின் புகாரை செனட் நீதிக்கமிட்டி 27-ந்தேதி விசாரிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நீதிபதி கவனாக் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்து முடிவு எடுக்கப்படுகிறது.



    இந்த புகார் ஏற்படுத்திய அதிர்ச்சி மறைவதற்குள் நீதிபதி கவனாக் மீது தற்போது மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் கூறியுள்ளார். அதாவது 1983-ல் ஏல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், நீதிபதி கவனாக் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெபோரா ராமிரெஸ் (53) என்ற பெண் புகார் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை நீதிபதி கவனாக் மறுத்துள்ளார். தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இதுபோன்ற பாலியல் புகார்கள் கடைசி நேரத்தில் கிளம்புவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் பரிந்துரைத்த நபர் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் குவிந்து வருவது அமெரிக்க நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #DonaldTrump #Kavanaugh #SupremeCourt 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஆதரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel #BharatBandh
    புதுடெல்லி:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 
     
    சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்த நிலையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா இன்று மாலை தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel  #BharatBandh 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
     
    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை தாண்டியுள்ளதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் தரும் ஆதரவால் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #DMK #Stalin
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.



    அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு  திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #DMK #Stalin
    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், அனுப்பூர் கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அம்மா பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, இறகு பந்து விளையாடினார். இதனை தொடர்ந்து அங்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சி செய்து பார்த்தார்.

    இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் பல்வேறு கிராமங்களில் அம்மாவின் அரசு அமைத்து கொடுத்துள்ளது.


    நம்முடைய மாவட்டம் இன்றைக்கு ஒரு முன்னோடி மாவட்டமாக திகழக் கூடிய அளவிற்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்றைக்கு தமிழகத்திலேயே 32 மாவட்டங்கள் இருந்தாலும் நம்முடைய மாவட்டங்களை சேர்ந்தவர் தான் தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு இங்கே நிற்கின்றேன்.

    அம்மாவுடைய நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு உங்களுடைய அன்போடு, உங்களுடைய ஆதரவோடு, இன்றைக்கு தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருக்கின்ற பொறுப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.

    ஒரு முதல்-அமைச்சர் ஒரு கிராமத்திற்கு வருவார் என்றால் மிக அரிது. நான் ஏற்கனவே பல முறை இந்த பகுதிக்கு வந்து சென்றிருக்கின்றேன். நம்முடைய மாவட்டம் முழுவதும் நான் சென்று வந்திருக்கின்றேன்.

    ஏற்காடு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மலை பகுதியும் சரி, அதன் கீழ் இருக்கின்ற கிராம பகுதியும் சரி, பேரூராட்சியில் இருக்கின்ற பகுதிகளும் சரி எல்லா இடத்திற்கும் நான் வந்து சென்றிருக்கின்றேன்.

    2011-ல் அம்மாவுடைய அமைச்சரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது இந்த பகுதிகளில் சாலைகள் எல்லாம் சிறப்பாக அமைத்து கொடுத்திருக்கின்றேன்.

    நான், இங்கே வருகின்றபோது, விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கையை வைத்தார்கள். அதெல்லாம் அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    கிராம புற மக்களுடைய வாழ்வாதாரம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும். அதுதான் அம்மாவுடைய அரசின் லட்சியம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

    நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன? என்ன? அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதோ, அதுபோல் கடைக்கோடி கிராமத்தில் வாழுகின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பது தான் அம்மாவுடைய ஆட்சியினுடைய திட்டம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்றைக்கும் விவசாய தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

    ஆகவே விவசாய பிரச்சனை எந்த அளவுக்கு கடினமானது என்பது பற்றி நான் உணர்ந்தவன். அதுபோல் விவசாய தொழில் எந்த அளவுக்கு சிரமம் என்பதையும் நன்கு அறிவேன்.

    விவசாய பணியில் ஈடுபடுகின்றது எவ்வளவு துன்பம், கஷ்டம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆகவே எந்த துறையிலும் இவ்வளவு கஷ்டம் கிடையாது. வெயில், மழையிலே நனைந்து பணியாற்றக் கூடியவன் விவசாயி மற்றும் விவசாய தொழிலாளி ஆவார்கள்.

    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்றவன் விவசாயி. அப்படி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும். அவர்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து அளிக்கும். எல்லா பகுதிகளிலும் விவசாயம் முன்னுக்கு வரவேண்டும்.

    விவசாயம் செழிப்பாக இருந்தால் தான் நாடு செழிப்படையும். அந்த செழிப்பான ஆட்சி அம்மாவுடைய ஆட்சியிலேயே கிடைக்கும்.

    கிராமம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் வாழுகின்ற மக்களுக்கு என்ன? என்ன? தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அந்த திட்டத்தின் மூலமாக கிராம பொருளாதாரம் மேம்பாடு அடைய அரசு வழிவகுக்கிறது.

    வேளாண்மை துறை இந்திய அளவில் தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகின்றது. வேளாண் உற்பத்தி, உணவு தானிய உற்பத்தி அதிக அளவு உற்பத்தி செய்து தேசிய விருது பெற்ற அரசு அம்மாவுடைய அரசு. எல்லாதுறையிலும் இன்றைக்கு முன்னணி வகித்து கொண்டிருக்கிறது.

    மக்களுடைய குறைகளை போக்குவதே எங்களுடைய லட்சியம். அதற்காக அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும்.

    வாழ்வாதாரம் முன்னுக்கு வர, அடிப்படை வசதிகள் கிராமத்திற்கு வழங்க அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்து சிறப்பான வரவேற்பு அளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது. #Qatar #KeralaFlood #FinancialAid
    துபாய்:

    மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், வெளிநாடுகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்குவதற்காக அவசர குழு ஒன்றை அமைத்தது. இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இதற்கான உத்தரவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பிறப்பித்தார். இதையடுத்து, கத்தார் அரசின் அறக்கட்டளை பிரதிநிதிகள் மூலம் இந்தத் தொகை இந்தியாவிடம் அளிக்கப்பட்டது. இத்தொகை கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு வழங்கப்படுவதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்து உள்ளது. #Qatar #KeralaFlood #FinancialAid

    ×