search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு - முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு - முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
     
    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை தாண்டியுள்ளதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் தரும் ஆதரவால் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
    Next Story
    ×