search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவு"

    • முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
    • அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

    சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.

    அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
    • இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.

    கோவை:

    கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

    உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.

    இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன.
    • மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது

    மங்கலம்,செப்.24-

    திருப்பூர், கோவை மாவட்ட சிறு ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறுகையில்,

    திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.25கோடி மதிப்பிலான நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25-ந்தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கிறது.

    தமிழக முதல்வர் ஓ.இ. மில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஓ.இ.மில் நூற்பாலைகளை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது
    • சமுதாய தலைவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளை சால்வை அணிவித்து வரவேற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டி அங்கு உள்ள விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி போராட்டத்துக்கு அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்காக அவர்கள் கேத்தி பகுதியில் நடைபெற்ற போராட்ட களத்திற்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, முன்னாள் அரசு வக்கீல் பாலநந்தக்குமார், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், தேனாடு லட்சுமணன், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஜெய்ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத், உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்து
    • நஞ்ச நாடு தொதநாடு, இத்தலார் மேக்குநாடு நலசங்கத்தினர் உள்பட திரளானோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சமாக 35 ரூபாய் விலை நிர்ணயிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.இதில்நஞ்ச நாட்டை சேர்ந்த தொதநாடு நலச்சங்கத்தினர், இத்தலாரை சேர்ந்த மேக்குநாடு நல சங்கத்தினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் நீலகிரி தேயிலை விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், உண்ணா விரத பந்தலுக்கு வந்தார்.

    அப்போது அவரு டன் அமைப்பு செய லாளர் கே.ஆர்.அர்ஜூ னன், ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ஸஸ் சந்திரன், கடநாடு குமார் மற்றும்கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர்.நீலகிரி விவசாயிகள் உண்ணா விரத போராட்டத் தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு பேசும் போது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பார். மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் நமக்கு உறுதுணையாக இருப்பார். நீலகிரி விவசாயி களின்உண்ணாவிரத போ ராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    • ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதன் பின்பும் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.வலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 65 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    • கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.
    • அந்த பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரி அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 வருடங்களாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

    இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து.

    நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் கல்லூரிக்கு வேறு ஒரு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த இடத்திற்கு குடவாசலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

    மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து தொடர்ந்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நன்னிலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது நிருபர்க ளிடம் காமராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது, குடவாசலிலே கல்லூரி அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் இந்த மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன்.

    சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய பொழுது, அந்தப் பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

    குடவாசலிலேயே கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் போராடிவரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
    • ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய கட்டிடம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், சிவபெருமாள், இன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்களின் கனவு தகர்ந்து போய்விட்டது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.

    இதற்கிடையே அக்னி பத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு ரெயில்வே புதிய கட்டிடம் அருகே பிட் லைனில் தட்சின ரெயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில்வே துறையின் விதிக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக கூறி அக்னிபத் திட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ராணுவத்தில் தற்போது ஆட்கள் எடுப்பதை போல ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தென் மண்டல துணை பொதுச்செயலாளர் மணி, கோட்ட கூடுதல் செயலாளர் அருண்குமார், கிளை பொறுப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் தனது பயணத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, நாளை பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். #AmitShah
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.

    அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா நேற்று புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.

    இந்நிலையில், நாளை மும்பை வர உள்ள அமித்ஷா, பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். 

    முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்துள்ளது. #Congress #ShivSena
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த பதாங்ராவ் கதாம் கடந்த மாதம் காலமானார். இதனை அடுத்து, வரும் 28-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பதாங்ராவின் மகன் விஷ்வஜீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பாஜகவும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜக - சிவசேனா கூட்டனி ஆட்சி அம்மாநிலத்தில் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.

    மறைந்த பதாங்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என சிவசேனா கட்சி விளக்கம் அளித்துள்ளது. 
    ×