search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saxena"

    நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராடிவரும் சமூக சேவகி மேதா பட்கர் மீது டெல்லி கோர்ட்டில் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MedhaPatkar
    புதுடெல்லி :

    சமூக சேவகி மேதா பட்கர் நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்திவருவதோடு, பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராட்டங்களை நடத்தியவராவார். இவருக்கும், காதி கிராமத் தொழில் ஆணைய தலைவராக இருந்த சக்சேனாவிற்கும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் கோர்ட்டில் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை மேதா பட்கர் அவமதித்து பேசியதாக சக்சேனா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், பிரிவு 499/500-ன் கீழ் மேதா பட்கர் மீது இரண்டு அவமதிப்பு வழக்குகளை பதிவு செய்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி மேதா பட்கருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #MedhaPatkar
    ×