search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medha Patkar"

    நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராடிவரும் சமூக சேவகி மேதா பட்கர் மீது டெல்லி கோர்ட்டில் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MedhaPatkar
    புதுடெல்லி :

    சமூக சேவகி மேதா பட்கர் நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்திவருவதோடு, பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராட்டங்களை நடத்தியவராவார். இவருக்கும், காதி கிராமத் தொழில் ஆணைய தலைவராக இருந்த சக்சேனாவிற்கும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் கோர்ட்டில் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை மேதா பட்கர் அவமதித்து பேசியதாக சக்சேனா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், பிரிவு 499/500-ன் கீழ் மேதா பட்கர் மீது இரண்டு அவமதிப்பு வழக்குகளை பதிவு செய்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி மேதா பட்கருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #MedhaPatkar
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார். #sterliteprotest #ThoothukudiFiring #MedhaPatkar
    தூத்துக்குடி:

    சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது. 1998-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது.



    எத்தனை தீர்ப்புகள் வழங்கினாலும் கார்ப்பரேட் ஆலைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றுச் சூழல் விதிகளை குறைத்து கொண்டே வந்தனர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியாவது கிடைத்தது.

    தற்போது நடக்கும் ஆட்சிக்கு மக்கள் பிரச்சனை கூட தெரியவில்லை. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய நிறுவனம் இல்லாத வேதாந்தா குழுமம் நம்பிக்கை தன்மையை இழந்துவிட்டது.

    நர்மதா அணை கட்டும் பணியின் போது மக்களின் பிரச்சனையை புரியாமல் மோடி நடந்தது போல் இங்கு இப்போது நடந்துள்ளது. நடந்த வன்முறையை காரணம் காட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteprotest #ThoothukudiFiring #MedhaPatkar

    துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சமூக ஆர்வலர் மேதாபட்கர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் இன்று தூத்துக்குடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம், அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அருணாஜெகதீசன் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் சமூக ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடி வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது.

    இதையடுத்து தூத்துக்குடியில் பேரணி, பொதுக்கூட்டம் நட‌த்த அனுமதி அளிக்கவேண்டும் என்று அந்த கட்சி சார்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும் கூட்டத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து இன்று நடைபெறும் பொதுகூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இதற்காக பிருந்தாகாரத் இன்று தூத்துக்குடி வருகிறார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்கள் குடும்பத்தினரை அவர் சந்தித்து பேசுகிறார்.

    ×