search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளைய முழு அடைப்புக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு
    X

    நாளைய முழு அடைப்புக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஆதரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel #BharatBandh
    புதுடெல்லி:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 
     
    சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்த நிலையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா இன்று மாலை தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel  #BharatBandh 
    Next Story
    ×