என் மலர்
செய்திகள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாயாவதி ஆதரவு
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward
புதுடெல்லி:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆதாயத்துக்காக தற்போது இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அரசு முன்பே எடுத்து இருக்கலாம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இடஒதுக்கீடு சலுகையை பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கோரிக்கை. இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் உயர்சாதியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது கண்டிக்கத்தக்கது என்று மாயாவதி கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்காக புதிய இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆதாயத்துக்காக தற்போது இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அரசு முன்பே எடுத்து இருக்கலாம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இடஒதுக்கீடு சலுகையை பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கோரிக்கை. இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் உயர்சாதியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது கண்டிக்கத்தக்கது என்று மாயாவதி கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்காக புதிய இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward
Next Story