search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதாரம்"

    • கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • 76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை.

    ஈரோடு:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

    இந்தியாவில் 2024-ம் ஆண்டு பாரளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல். பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள்.

    2014-ம் ஆண்டு 283, 2019-ம் ஆண்டு 303 எம்.பி.க்கள் வந்த நிலையில் இந்த முறை 300 எம்.பி.க்கள் தாண்டி வர வேண்டும் என்று பாஜக உழைக்கிறது. நமது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது இந்த தொகுதியின் அடையாளமான ஜமுக்காலத்தை போர்த்திக் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார். 100 வாக்குறுதியை வேட்பாளர் கையேடு உருவாக்கி உள்ளார்.

    உலகத்தில் யாருக்கு புரோஜனம் இல்லாமல் அரசியலில் இருப்பது கம்யூனிஸ்டு கட்சிகாரர்கள் தான்.


    தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் தான் உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பா.ம.க., அ.ம.மு.க. ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கு உழைக்க வேண்டும். வீடு தோறும் சென்று மோடி 3-வது முறையாக வருவார் என்று சொல்ல வேண்டும்.

    வாக்காளர்கள் எது கேட்டாலும் 10 தகவல்களை சொல்ல வேண்டும். அதில் இந்திய பொருளாதார உயர்வு, 2014-ம் ஆண்டில் உலகத்தில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது.

    இந்திய கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும். 76 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள், 12 பட்டியிலினவர்கள், 27 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியோர் அமைச்சராக உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 35 பேரில் 2 பெண்கள். 2 பேர் பட்டியலின பெண்கள். அவர்கள் குடும்ப கோட்டா அடிப்படையில் வந்து இருப்பார்கள். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே சமூக நீதி பின்பற்றப்படுகிறது. ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் தான் மோடி நம்புகிறார்.

    48 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 89,490 விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.

    பவானியில் அரசு கல்லூரி ஏன் இல்லை. ஏனென்றால் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் தனியார் கல்லூரி நடத்துவதால் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

    பொருளாதாரம் சமூக நீதி அனைத்து மக்களின் வளர்ச்சி பெற மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வரும் 25 ஆண்டுகளுக்கு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல்.

    2019-ம் ஆண்டு தேர்தலில் 295 தேர்தல் அறிக்கை பா.ஜ.க. கொடுத்தது. இதில் 295 அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியோடு தி.மு.க. கம்யூனிஸ்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பேச நேருக்கு நேர் தயார்.

    தி.மு.க.வை பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று வளர்ச்சி நினைக்கிறார்கள். அதனால் வளர்ச்சி தேவை வீக்கம் தேவை இல்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

    தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. துபாய், ஸ்பெயின் போன்ற வெளிநாட்டுக்கு முதல்- அமைச்சர் சென்ற நிலையில் முதலீடு வரவில்லை.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு இதனால் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். எல்லா பக்கமும் மின் கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது

    விடியல் தருகிறேன் என்று சுடுகாட்டிற்கு பாதை அமைத்து நம்மை அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்.

    வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை. குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


    ஆனால் தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக நடக்கவில்லை. ஹெல்மெட் போட்டு கொண்டு செல்கிறார். இதன் மூலம் கூலிப்படை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சட்டசபையில் சட்ட ஒழுங்கு சிரிக்கிறது.

    76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை. ஆனால் தமிழகத்தில் வேட்டி வாங்குவதில் முறைகேடு. குண்டூசி கூட விடாமல் தமிழகத்தில் ஊழல் உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29 பைசா என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் உதயநிதி கஞ்சா உதயநிதி என்று சொல்லலாமா, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க சென்றால் அறிவாலயம் வாசலில் வரிசையாக நிற்கிறார்கள். கஞ்சா விற்பனை கிராம தோறும் அதிகரித்து உள்ளது.

    முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு கொடுத்தால் தான் கணக்கில் கொள்வோம் என்றார். ஆனால் மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணம் கணக்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கோபாலபுரம் அனுப்பினால் தான் கணக்கு என்று சொல்கிறார்கள்.

    அரசியலை மோடி மக்கள் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.

    மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார். மேலும் சாமானிய மக்களை கண்டறிந்து கவுரவிப்பதற்காக பத்மா விருது வழங்கப்படுகிறது. மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானிய மக்கள் பற்றி மோடி பேசி வருகிறார். சாமானிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்.

    பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, லல்லு பிரசாத் மகன் ஆகியோர் நான் தான் பிரதமர் என்று சொல்லி வருகிறார்கள்.

    நாட்டை ஆட்டை அறுப்பது போல நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனால் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது.

    ஒவ்வொரு வாக்குகளும் பாரத பிரதமர் மோடியை வலுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்.

    என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை ஆட்டோ ஓட்டுநரில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.

    அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

    உ.பி அரசுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது.

    இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது. பள்ளி, சாலை, மருத்துவமனை உள்பட அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இந்த தேர்தல்.

    மத்தியில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Sivagangai News Tamil Nadu is becoming the 2nd largest economic state - Minister

    சிவகங்கை

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்ட பத்தில் மாவட்ட அளவி லான பெருந்திரள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் நிறுவனங்களின் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து, தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டு களில், 85 சதவீதம் வாக்கு றுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    முதல்-அமைச்சரின் லட்சிய கனவான வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டினை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதி களில் சென்னையில் நடை பெற உள்ளது. அம்மாநாடு தொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் வழிகாட்டு தலின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீ டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, லட்சிய கனவினை நோக்கி, இம்மாநாடு பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு இலக்காக ரூ.300 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 3162 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இவை அடிப்படையாகவும் அமையும். அதன்படி இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 31 நிறுவனங்களின் ரூ.305 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந் தங்களை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், தொழில் முனை வோர்கள் 6 நபர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பீட்டி லான தொழிற்கடனு தவிகளும் வழங்கப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜீத்,, மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் சாந்தா சகாயராணி, உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) காளிதாஸ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சி பாதையில் செயல்படுத்த கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் , எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம் , ராமலிங்கம் , எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் 2315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செயல்படுத்திட கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வம் , மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி , வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா , பூர்ணிமா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பழனீஸ்வரி , இணைப் பதிவாளர் பெரியசாமி , துணைப் பதிவாளர் அப்துல் மஜீத் மற்றும் துணைப் பதிவா ளர்கள், பொது மேலாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தரப்பட்டியலில் உயர்வான இடங்களை அடைவது பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது
    • எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும்

    அமெரிக்காவின் நியூயார்க் மாநில மன்ஹாட்டன் பகுதியில் இயங்கி வரும் பன்னாட்டு பொருளாதார சேவை நிறுவனம் மார்கன் ஸ்டான்லி. பொருளாதார சேவை நிறுவனங்களில் இது ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது.

    இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பல அளவுகோல்களை கொண்டு கணக்கிட்டு ஒரு மதிப்பீட்டை வழங்குகிறது. ரேட்டிங்ஸ் எனப்படும் இந்த தரப்பட்டியலில் உயர்வான இடங்களை அடைவது பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்நிறுவனம், தற்போது தரப்பட்டியலில் இந்தியாவை 'மதிப்பீடு குறியீட்டிற்கு மேல்' எனும் நிலைக்கு புதுப்பித்துள்ளது.

    இந்திய பொருளாதாரம் ஒரு நீண்ட ஏற்றத்தின் தொடக்கத்தில் இருப்பதாகவும், அதே சமயம் சீனாவில் பல வருடங்களாக நீடித்த பொருளாதார ஏற்ற நிலை, ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது.

    இந்தியாவில் சீர்திருத்த மற்றும் ஸ்திரத்தன்மைக்கான திட்டங்கள், வரப்போகும் காலங்களில் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தை தரக்கூடிய கண்ணோட்டத்தில் அமைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

    மதிப்பீடு குறியீட்டிற்கு கீழ் இருந்த இந்தியாவை, மதிப்பீட்டிற்கு சமம் எனும் நிலைக்கு அந்நிறுவனம் உயர்த்திய 4 மாதங்களுக்கு பிறகு இந்த தர உயர்வு தரப்பட்டிருக்கிறது.

    ஃபிட்ச் எனும் நிறுவனம் நேற்று தந்த தர பட்டியலில் பொருளாதாரத்தில், அமெரிக்கா தனது கடன்தகுதிக்கான மதிப்பீட்டில், "ஏஏஏ" (AAA) எனும் நிலையில் இருந்து, "ஏஏ+" என கீழிறங்கியிருக்கிறது. அதே போல் சீனாவின் பொருளாதாரமும் இறங்குமுகத்தில் இருக்கிறது.

    உலக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இந்த இரு நாடுகளின் தர மதிப்பீடு குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதை இந்த புது மதிப்பீடு குறிக்கிறது.

    மார்கன் ஸ்டான்லியின் இந்த மதிப்பீட்டிற்கு அடிப்படையாக இந்தியாவின் மதசார்பற்ற தலைமையும், இந்தியாவின் ஆற்றல் மிக்க இளம் வயதினரும் கணக்கில் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    • தில்லைவிளாகம் ரெயில் நிலையம் அருகில் 30- க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
    • வேலைக்கு செல்வோருர்கள் பெரும் பொருளாதாரத்தை செலவு வேண்டி உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை செயற்குழு கூட்டம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், தில்லைவிளாகம் இரயில் நிலையம் அருகாமையில் உதயமார்தாண்டபுரம், பின்னத்தூர், எடையூர் , தேவதானம், புத்தகரம் தோலி, தில்லைவிளாகம் இடும்பாவனம் என 8-க்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் 30- க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களும் அமைந்துள்ளது.

    வேலைக்கு செல்வோருக்கும் மேற்படிப்பிற்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கும் விவசாயிகள் வியாபாரிகள் மருத்துவ தேவைக்கு பெருநகரங்களுக்கு செல்லவதற்கும் பேருந்து போக்குவரத்து பயன்படுத்துவதால் பெரும் பொருளாதாரத்தை செலவு வேண்டி உள்ளது.

    இதனால் தில்லைவிளாகம் மார்க்கம் வழியாக செல்லும் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் , செகேந்திரபாத் விரைவு இரயில் உள்பட இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துனைதலைவர் அஸாருதீன், கிளை பொருளாளர் கமருதீன், அமிரக பொறுப்பாளர் மீரான் உசேன், பரக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளத்தில் சிக்கியதால் விவசாயம் தொடர்பான பொருளாதாரம் பாதிப்பு
    • தற்போது உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம்

    கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2020-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை முன்னெச்சரிக்கை காரணமாக மூடியது. முக்கியமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எல்லைகளை மூடுவதில் அதிதீவிரம் காட்டின.

    ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே, உடனடியாக அந்த இடத்தையே தனிமைப்படுத்தியது நியூசிலாந்து. இதனால் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு தொடர்பை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதன்பின் நிலை சீராக பொருளாதாரம் ஓரளவிற்கு நிமிரத்தொடங்கியது.

    இந்த நிலையில் தற்போது 2020-ல் இருந்து முதன்முறையாக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு முடிவில் பொருளாதார வீழ்ச்சி 0.7 சதவீதம் சரிந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது.

    பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலகளாவிய பொருளாதார மந்தநிலை 2023-ல் சவாலாக இருக்கும். பணவீக்கம் அதிகரிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருக்கும். வானிலை தொடர்ந்து இடையூறாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என நிதிமந்திரி கிரான்ட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பிப்ரவரி மாதம் கேப்ரியல் என்ற புயல் காரணமாக ஏற்பட்ட சேதம் ஆகியவை பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மட்டும் நியூசிலாந்து 9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

    பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் 6.7 ஆக உள்ள நிலையில், அக்டோபர் மாதம் அங்கு தேசிய தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த விவகாரம் தலைதூக்கும் எனத் தெரிகிறது.

    நியூசிலாந்தில் விவசாயம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைகள் என அனைத்து துறையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    • பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
    • மாதம் ரூ 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி நாகலெட்சுமி (வயது 38). இவர்களுக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்து ஒன்றில் சரவணன் இறந்து விட்டார். குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக இருந்த கணவர் சரவணன் இறந்தது நாகலெட்சுமியை நிலை குலைய செய்தது.

    எதிர்காலம் என்னவாகும் என்ற துயரத்தில் தவித்தவரை கரை சேர்த்திருக்கிறது தஞ்சாவூர் ஓவியம். முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் செய்வதற்கு கற்றுக் கொண்டவருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது.

    தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறார். வருமானத்திற்கு வழியின்றி தவித்து நின்ற பல பெண்கள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

    இது குறித்து நாகலெட்சுமி கூறியதாவது :-

    பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவர் இருந்த வரை வீட்டு வாசலை கூட நான் தாண்டியதில்லை. திடீரென ஒரு நாள் எங்களை தவிக்க வைத்து மறைந்து விட்டார். ஆதரவாக இருக்க எந்த உறவும் முன்வரவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். அப்போது தான் கும்பகோணத்தில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வரும் சக்கரபாணி ஆர்ட்ஸ் உரிமையாளரான பன்னீர்செல்வம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருகிறார். அவர் கம்பெனியில் என்னை போல் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்தார்.

    என் நிலையை அறிந்து கலை உலகிற்குள் அழைத்து சென்றார். எனக்கு முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தந்தார். சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த நான் பின்னர் வீட்டிலேயே தனியாக தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்க தொடங்கினேன். மாதம் ரூ 20,000 வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது மகள் 10-ம் வகுப்பும், மகன் 8-வதும் படிக்கின்றனர்.

    என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடி கொண்டிருப்ப வர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் பயிற்சி கொடுக்க தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் பலரும் இன்றைக்கு கை நிறைய சம்பாதிக்கின்றனர். சொந்தக்காலில் நிற்க நினைக்கும் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம்.
    • விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பூரணி, அருணா இறைவணக்கம் பாடினர்.

    நிகழ்ச்சிக்கு மூலிகை சேகர் தலைமை வகித்தார்.

    மலர் இயற்கை வேளாண் பண்ணை நிறுவனர் ஸ்ரீராம் வரவேற்புரை வழங்கினார்.

    இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளைத் தலைவர் கோவி. திருவேங்கடம் வாழ்த்துரை வழங்கினார்.

    சீனிவாசநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா, இயற்கை விவசாயிகள் மருத்துவக்குடி கும்பலிங்கம், நாச்சியார் கோயில் ராஜேந்திரன் மலையப்பநல்லூர் கேசவன், சீனிவாசநல்லூர் ஹேமா, கால்நடை மருத்துவர்கள் ஆனந்த், ஆனந்தி, நேரு யுவகேந்திரா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:

    இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம். படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்.

    உலகம் பொருளாதார சிக்கல்களில் சிக்கி இருக்கும்போது விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

    சேவைத் துறையை விட தொழில் துறையை விட லாபம் குறைவாக இருந்தாலும் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு விவசாயமே உதவுகிறது.

    விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரம் எப்போதும் சரிந்து விழுவது இல்லை. எனவே படித்த இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி வர முன் வர வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியின் நிறைவில் இளந்துறை இயற்கை விவசாயி சுவாமிநாதன் நன்றி கூறினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் வளரவேண்டும்.
    • இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கமாகும். இந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஒரு நல்ல தொடக்கமாகும்.

    இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் இது வளரவேண்டும்.

    கொங்கு மண்டலத்தில் இருக்கும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி பால் உற்பத்தியிலும் தங்களது உழைப்பின் மூலம் கணிசமான வருவாயை பெருக்கி வருகின்றனர்.

    அவர்களை போன்று தாங்களும் தங்களது உழைப்பில் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தி பால் உற்பத்தியை பெருக்கி தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும்.

    கடந்த மாதம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் பால் குளிரூட்டும் கருவி அமைக்கப்ட்டது.

    எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றது.

    பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில ஆத்மா திட்டக்குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக் குழுத்தலைவர் தமிழரசி, பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நன்னிலம் பகுதியில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
    • விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தை குறித்து பட்டய கல்வி பயில வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரம், விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட பகுதியாகும்.

    நன்னிலம் பகுதியில், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள பகுதியாகும்.

    இங்கு விவசாயத்தை பின்னணியாக கொண்ட பொருளாதாரம் தான் உள்ளது. சிறு தொழில் கூடங்களும் கிடையாது.

    இந்நிலையில், விவசாயிகளின் பிள்ளைகள், தங்கள் குடும்பங்கள் மேற்கொண்டு வரும் விவசாயப் பணியினை, தாங்கள் தொடரும் நிலையில், அது குறித்த கல்விகளை கற்பதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கடினமாக உள்ளது.

    விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தைக் குறித்து பட்டய கல்வி பயில்வதற்கு, வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில், விரிவாக்க கல்வி மையம் நன்னிலம் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, விவசாய பெருமக்களிடம் இருந்து வருகிறது.

    எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், விவசாய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள், விவசாயக் கல்வியை கற்கும் வகையிலும், நன்னிலம் வட்டாரத்தில், வேளாண் கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கூட மக்கள் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகி வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

    இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை கூடியது. அதில், ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ×