search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். 

    இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது.
    • இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    நான் குஜராத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் நாம் புதிய சாதனை படைப்போம்.

    2014-ல் நீங்கள் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும்போது குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது. நாட்டுக்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 24 மணிநேரமும் (24x7) உழைப்பேன் என்பது எனது உத்தரவாதம். 10 ஆண்டுகளில் 14 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தோம். காங்கிரஸ் கட்சியோ 60 ஆண்டுகளில் வெறும் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே கொடுத்தது.

    இந்தியாவில் இன்று காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கே பாகிஸ்தான் அழுகிறது.

    தற்போது காங்கிரசுக்காக பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது. 

    பாகிஸ்தானை பின்பற்றும் ரசிகனாக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தான் முன்னாள் மந்திரி காங்கிரசை பாராட்டுகிறார். பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான இந்த கூட்டு தற்போது முற்றிலும் அம்பலமாகி உள்ளது.

    2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க பலவீனமான காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

    இந்தியா கூட்டணி அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது.

    ஒருபுறம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா கூட்டணி, மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. அவர்களது எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


    • எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர்
    • இந்தியா கூட்டணியில் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்

    பீகாரின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, "பாஜக 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்" என்று பேசியுள்ளார்.

    இதற்கு முன்னதாக, "எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை
    • முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாக தெரிகிறது

    கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி "பல ராஜாக்கள், மகாராஜாக்கள் நம்மை மீண்டும் ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியதைச் செய்து, விவசாயிகளின் நிலத்தை விருப்பப்படி பறித்தார்கள்.

    காங்கிரசும் அதன் தொண்டர்களும்தான், சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்து, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து இந்திய மக்களுக்கு சுதந்திரம் அளித்து, நாட்டில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீட்டெடுத்தார்கள் என்று பேசியிருந்தார்.

    ராகுல்காந்தியை இந்த பேச்சிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெலகாவியில் இன்று நடைபெற்ற மெகா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் இளவரசன் (ராகுல்காந்தி), அன்றைய நமது ராஜாக்களும், மகாராஜாக்களும் இரக்கமற்றவர்கள் என்றும் அவர்கள் ஏழைகளின் எளிய சொத்துக்களைப் பறித்தனர்.

    சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் கிட்டூர் இராணி சென்னம்மா ஆகியோரின் நல்லாட்சி மற்றும் தேசபக்தி இன்னும் நம்மை தேசப் பெருமையையும் கௌரவத்தையும் நிரப்புகின்றன. அப்படிப்பட்டவர்கர்களை ராகுல்காந்தி அவமதித்துள்ளார்.

    நாம் அனைவரும் மிகவும் உயர்வாகக் கருதும், பெருமைப்படும் மைசூர் அரச குடும்பத்தின் பங்களிப்பு பற்றி அவருக்குத் தெரியாதா?

    நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    முஸ்லிம் பேரரசர்கள் தங்கள் விவசாயிகளுக்கு இழைத்த அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மௌனமாக இருக்கிறார்.

    முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

    ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக அவர் பேசுகிறார். ராகுலுக்கு கவலை அளிப்பது அவரது வாக்கு வங்கி மட்டுமே.

    நமது புனிதத் தலங்களை அழித்த, கொள்ளையடித்த, நம் மக்களைக் கொன்று குவித்த கால்நடைகளையும் படுகொலை செய்த மன்னர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை

    முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்-ஐ புகழ்ந்து பேசுவபர்கள் உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது

    பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அந்நாளில் நகரத்தை ஆண்ட அரசரின் உதவியின்றி நிறுவப்பட்டிருக்க முடியாது.

    பரோடாவின் மகாராஜா கெய்க்வாட், பாபா சாகேப் அம்பேத்கரை வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவியிருக்கிறார்.

    இதெல்லாம் காங்கிரசின் இளவரசனுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
    • இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்

    பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,

    16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.

    16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.

    இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.

    10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.

    20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ராஜஸ்தானில் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது
    • அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,

    "சர்வாதிகாரியின் உண்மையான முகம் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடமிருந்து பறிப்பதும் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை அழிக்கும் வேலைதான்.

    மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் - இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
    • அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், இன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட ஒளிரும் இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்ததுபோல் இம்முறையும் வளர்ந்த இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள்.

    பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
    • பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை - ராகுல்காந்தி

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.

    இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது - அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.

    இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் ராகுல்காந்தி.
    • ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார் ராகுல்காந்தி.

    நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்த்து உள்ள கம்யூனிஸ்டுகள், கேரளாவில் மட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனை பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இதற்கிடையில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் இறங்கியதற்கு இடது சாரி கட்சியும், ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.

    இந்நிலையில் ராகுலுக்கு எதிராக வயநாடு பிரசாரத்தில் இடதுசாரி கூட்டணியினர் பெரும் அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடும் நிலையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வயநாட்டில் பிரசாரத்தை பெரிதுபடுத்தவில்லை. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன் சென், சுபாஷினி அலி ஆகியோர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், அவர்கள் வயநாடு தொகுதிக்கு செல்லும் வகையில் பிரசார நிகழ்வு இல்லை. மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணா மட்டுமே, வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்திய செயலக உறுப்பினரும் ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் ஆகியோரும் வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    ராகுலுக்கு எதிராக இடது சாரி கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.

    அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
    • வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    கேரள மாநிலத்தில் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியே முக்கியமான தொகுதியாகும். அந்த தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியே போட்டியிடுகிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார்.

    காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்று தெரிந்துவிட்டநிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பது இதுவரை தெரியவில்லை.

    பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. வயநாடு தொகுதி மட்டுமின்றி, கேரளாவில் உள்ள கொல்லம், எர்ணா குளம், ஆலத்தூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர் விவரங்களை பாரதிய ஜனதா வெளியிடவில்லை.

    இதனால் இந்த தொகுதிகளில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்? என்ற விவரம் தெரியாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். வேட்பாளர்கள் எப்படியும் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அந்த தொகுதிகளில் பல இடங்க ளில் பாரதிய ஜனதா கட்சியினர், வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.

    அந்த விளம்பரங்கள் தற்போது வரை வேட்பாளர்களின் படம் இன்றியே காணப்படுகின்றன. பாரதிய ஜனதா வெளியிடும் ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாமல் உள்ள தொகுதிகளின் வேட்பாளர் விவரங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது
    • பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு!

    மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு பேரறிஞர் அண்ணா எழுதிய மாபெரும் தமிழ்க்கனவு புத்தகத்தின் ஆங்கில பதிப்பை ராகுல்காந்திக்கு அவர் பரிசளித்தார்.

    அந்த நிகழ்வில் பேசிய மு.க. ஸ்டாலின், "எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும்! இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.

    ராகுல் காந்தி அவர்கள் எங்குச் சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள். இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி அவர்கள் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

    சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார்.

    இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். (Bharat Jodo Nyay Yatra) இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

    பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது. 6000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம் சாட்டுகிறார்.

    நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று! இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.

    தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

    ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்! இந்தியாவே எழுக" என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். 

    ×