search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lookout notice"

    • பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • ராஜேஷ்தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    சென்னை:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜேஸ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    மேலும் முன்னாள் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் தொடங்கியது. பலகட்ட விசாரணைக்கு பிறகு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி, இம்மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.

    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உத்தரவு வரும் வரை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு தேதியை தள்ளிவைக்கும்படி மனுதாக்கல் செய்தனர்.

    இம்மனுவை ஏற்க மறுத்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, அதை தள்ளுபடி செய்தார். மேலும் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, கீழ்கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ராஜேஷ்தாசுக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் லுக்அவுட் நோட்டீசை திருத்தி தவறாக கணித்து விட்டோம் என்று சிபிஐ போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. #vijaymallya #cbi #lookoutnotice

    புதுடெல்லி:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் உள்ளது.

    டிசம்பர் மாதம் 10-ந்தேதி இது தொடர்பாக வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. அப்போது தான் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டுக்கு வந்த விஜய் மல்லையா நிருபர்களிடம் பேசுகையில் புதிய பூகம்பம் ஒன்றை கிளப்பினார். அவர் கூறுகையில், “நான் லண்டனுக்கு வருவதற்கு ஒருநாளைக்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்து பேசி விட்டுதான் வந்தேன்” என்று கூறினார்.

    இதையடுத்து மல்லையா தப்பி செல்ல நிதி மந்திரி அருண்ஜெட்லி உடந்தையாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். மல்லையா தப்பி செல்ல உதவியதால் அருண்ஜெட்லி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.


    ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து ராகுல் மீது பரபரப்பு புகார்களை கூறி வருகிறார்கள். மல்லையாவின் விமான நிறுவனத்திற்கு சாதகமான இருந்தது முந்தைய காங்கிரஸ் அரசு தான் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் மல்லையாவின் விமான நிறுவனத்தில் ராகுல் காந்திக்கு பங்கு இருந்த தாகவும் பா.ஜ.க.வினர் குற்றம் சுமத்தி உள்ளனர். இப்படி மல்லையா விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் பட்டியலை வாசித்தப்படி உள்ளனர்.

    இதற்கிடையே விஜய் மல்லையா தப்பி செல்வதற்கு சி.பி.ஐ. மெத்தனமாக இருந்ததும் ஒரு காரணமாகும் என்று பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்லையா கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஒரு முதல் “லுக்அவுட்” நோட்டீசை சி.பி.ஐ. வெளியிட்டது.

    அதில், “மல்லையா வெளி நாட்டுக்கு செல்ல இருந்தால் பிடிக்க வேண்டும்“ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த லுக்அவுட் நோட்டீஸ் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது.

    அந்த திருத்தத்தில் விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு சென்று வரும் தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவித்தால் போதும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் மல்லையாவை வெளிநாட்டுக்கு தப்பி செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நீர்த்து போய் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது:-

    மல்லையாவை கண்காணிக்கவே நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம். எனவே அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.

    விஜய் மல்லையா மீது வங்கி கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு 2015-ம் ஆண்டு தீவிரமான போது அவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி போவதும் வருவமாகவும் இருந்தார். 3 தடவை அவர் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அதன்பிறகும் கூட அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

    விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. மேலும் அவர் பாராளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்ய நாங்கள் யாருக்கும் லுக்அவுட் நோட்டீசை வழங்கவில்லை.

    மல்லையா வி‌ஷயத்தில் நாங்கள் எடுத்த முடிவுகள் தவறானவையாகும். அவர் 2015-ம் ஆண்டு இறுதியில் மிக சகஜமாகவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். மேலும் அவரை கைது செய்யும் எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் எப்படி கைது செய்ய முடியும்?

    இதுதவிர விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி மல்லையாவின் மோசடி குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில் நாங்களாகவே வழக்குப்பதிவு செய்து இருந்தோம்.

    எந்த வங்கியும் எங்களை அணுகவில்லை. இந்த நிலையில் அவர் தப்பி சென்றதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க இயலாது.

    மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன்சாமி சி.பி.ஐ. அமைப்பை கடுமையாக குறை கூறி உள்ளார்.

    சி.பி.ஐ. தனது லுக்அவுட் நோட்டீசை திருத்தியதின் மூலம் அது நீர்த்து போய்விட்டது. இதனால்தான் மல்லையா எளிதில் தப்பி சென்று விட்டார் சுப்பிரமணியன்சாமி குற்றம் சுமத்தி உள்ளார்.


    மேலும் சுப்பிரமணியன்சாமி கூறுகையில், “மல்லையா தப்பி செல்லும் முன்பு அருண்ஜெட்லியிடம் நெருக்கமாக அமர்ந்து பேசியது உண்மைதான். அருண்ஜெட்லியிடம் சொல்லிவிட்டு தான் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றுள்ளார்.

    2016-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அவர்கள் இருவரும் சந்தித்து பேசினார்கள். மார்ச் 2-ந்தேதி மல்லையா தப்பி உள்ளார். இதிலிருந்து அருண்ஜெட்லிக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது” என்று சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். #vijaymallya #cbi #lookoutnotice

    ×