search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajesh Das"

    • பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை வழக்கு.
    • காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை.

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, அவரது முன்னாள் மனைவியும் தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா வெங்கடேசன், தனக்கு சொந்தமான பங்களாவின் காவலாளியை தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர்களை மிரட்டியதாக ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் காவலர்களை வேலை செய்யாமல் மிரட்டியதாக பிரிவு 353-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    • கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.
    • ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கேளம்பாக்கம்:

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

    பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.

    அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

    பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

    முன்னதாக, பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் விலக்கு அளிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    விசாரணை நீதிமன்றத்தில் சரணமடையுமாறும், அதன்பிறகு தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க கோரலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    • சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
    • சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சிறப்பு டி.ஜி.பி., ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தன் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது. பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

    2 கோர்ட்டுகளும் தண்டனை வழங்கியதால், ராஜேஷ் தாஸ் சிறைக்குள் சென்று விட்டு, அதன் பின்னர் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    ஆனால் சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். அதில் காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தான் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார். இதில், சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அப்போது ராஜேஷ் தாசின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர் கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற பின்னர் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • ராஜேஷ்தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    சென்னை:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜேஸ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    மேலும் முன்னாள் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் தொடங்கியது. பலகட்ட விசாரணைக்கு பிறகு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி, இம்மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.

    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உத்தரவு வரும் வரை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு தேதியை தள்ளிவைக்கும்படி மனுதாக்கல் செய்தனர்.

    இம்மனுவை ஏற்க மறுத்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, அதை தள்ளுபடி செய்தார். மேலும் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, கீழ்கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ராஜேஷ்தாசுக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×