search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி"

    • எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
    • எங்களை நன்றாக நடத்தினால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளத்தில் தலைவருமான குமாரசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டவட்டமாக, நான் உங்களுக்கு சொல்கிறேன். கேள்வியே இல்லை.

    எங்களை நன்றாக நடத்தினால், எல்லாம் சுமூகமாக நடந்தால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம்.

    100 சித்தராமையாக்கள் எங்களுக்கு எதிராக வந்தாலும் அவர்களால் எங்கள் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அதை சேதப்படுத்த முடியாது.

    நான் காங்கிரசுக்கு முற்றிலும் எதிரானவன். எங்களை எப்படி நடத்துவார்கள், முதல் மந்திரியாக இருந்த என்னை எப்படி நடத்தினார்கள் என தெரியும் என்றார்.

    • மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.

    கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.

    ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளார்.

    • பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
    • தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது.

    பெங்களூர்:

    கர்நாடக ஜனதா தளம் (எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என். மஞ்சுநாத் பா.ஜ.க. சின்னத்தில் பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கர்நாடக மாநில காங்கிரஸ் துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் அவரது சகோதர் டி.கே.சுரேஷ் ஆகியோர் அதிக அளவில் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்வதாக ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இங்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் உள்ளார். இந்த தொகுதியில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் பணபலம், ஆயுத பலம், அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலில் வெற்றி பெற உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு குக்கர்களை விநியோகம் செய்தனர்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது. ஹரோஹல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குக்கர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். விசாரணை நடத்த ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வணிக வரித்துறை அதிகாரிகளையும் அனுப்பினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்து மூடிவிட்டனர்.


    குக்கர் தயாரித்து அனுப்புவது இன்னும் தொடர்கிறது. அதற்கான போட்டோக்களை பாருங்கள். புகார் வந்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரமாகியும் இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சிவக்குமார், சுரேஷ் சகோதரர்களின் தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜே.டி.(எஸ்) தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    குக்கர், சேலை ஸ்டாக் கண்டுபிடித்து தொண்டர்கள் தீ வைப்பார்கள். சிவக்குமார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்வார்களா? என்பதை நான் பார்க்கிறேன். சட்ட விரோதம் தொடர்ந்தால் நான் விரைவில் முழு வீச்சில் களம் இறங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்.

    பெங்களூரு:

    தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவருமான குமாரசாமியின் வீட்டிற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டு கூறியிருந்தது.

    இதை ஒப்புக்கொண்ட குமாரசாமி, மின்விளக்கு அங்காரம் செய்த தொழிலாளி இதை செய்துவிட்டதாகவும், இது தனது கவனத்திற்கு வந்ததும், சட்டவிரோத மின்சாரம் எடுக்கப்பட்டதை அகற்றும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இந்த மின்திருட்டு குறித்து பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) கொடுத்த புகாரின்பேரில் குமாரசாமி மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை குமாரசாமி திருடிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலக சுவர்களில் ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருட்டுத்தனமாக 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக குமாரசாமிக்கு ரூ.68 ஆயிரத்து 526 பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், நான் செய்யாத தவறுக்காக என்னை மின்சார திருடன் என்று சொல்கிறார்கள். நான் அபராதம் செலுத்தியுள்ளேன். இப்போதாவது என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். நான் காங்கிரஸ் தலைவர்களை போல் பெரிய திருடன் அல்ல என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்.
    • அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.

    இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெறும் 76 இடங்களில் மட்டுமே வென்றது. அத்துடன், முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றனர்.

    இதற்கிடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.டிஎஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருவதாக தெரிவித்துள்ளனரா? அதுபற்றி கருத்து என கேள்வி எழுப்பியதற்கு, அவர் ஆவேசமாக கூறியதாவது:

    கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் தொடர்பில் 50 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும்.

    தேவகவுடா எங்களுடன் வந்துவிடுங்கள். உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களின் மகனுக்கு நல்ல பதவி வழங்குகிறோம் என காங்கிரஸ் கட்சியினர் தினமும் எங்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றால் எனது கட்சியின் 19 எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு அளித்துவிட்டு போகிறோம். இதை விட்டுவிட்டு 10 பேர் வருகிறார்கள், 5 பேர் வருகிறார்கள், பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தயாராக இருக்கின்றனர் என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டாம்.

    காங்கிரஸ் கட்சியில் தற்போது 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிக்கே வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு எப்படி பணம் கொடுப்பார்கள்? என தெரிவித்தார்.

    • 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்

    2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.

    உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.

    இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

    நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:

    ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உலக கோப்பை போட்டி நடந்தது.
    • இந்தப் போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தனர்.

    பெங்களூரு:

    சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான உலக கோப்பை போட்டி நடந்தது. இதை நேரில் சென்று முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவின் நீரோ என மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக குமாரசாமி கூறுகையில், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அதுபோல், இங்கு மக்கள் சிரமத்தில் உள்ளனர், கர்நாடகாவின் நீரோ கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் என குற்றம்சாட்டினார்.

    கர்நாடக மாநிலம் மின்சாரப் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதல் மந்திரியும், துணை முதல் மந்திரியும் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர் என தெரிவித்தார்.

    செயற்கையான மின் பற்றாக்குறையை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதாக கூறி கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பது என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார்.

    • எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
    • பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த 29-ந் தேதி பிடதி அருகே உள்ள தனது தோட்ட இல்லத்தில் தங்கி இருந்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் அழைத்து வந்து ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    பின்னர் உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் தொடங்கினர். 2 நாட்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு 3 நாட்கள் இருந்த நிலையில் குமாரசாமி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவர் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு அந்த மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கு டாக்டர்கள் எனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததால் நான் குணம் அடைந்துள்ளேன். கடந்த 5 நாட்களாக எனது நண்பர்கள் பயத்தில் இருந்தனர். நான் இன்று (நேற்று) உங்களிடம் பேசுகிறேன் என்றால் நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.

    கடவுள் எனக்கு 3-வது முறையாக மறுபிறவி வழங்கியுள்ளார். ஒருவர் ஒரு முறை தான் பிறவி எடுக்க முடியும். ஆனால் எனது 64 ஆண்டு வாழ்க்கையில் 3-வது முறையாக பிறவி எடுத்துள்ளேன்.

    கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் படுக்கையில் இருந்து எழுந்தேன். எனது உடல்நிலை நன்றாக இல்லை என்பதை உணர்ந்தேன். நான் உடனடியாக டாக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நிலையை கூறினேன். அதன் பிறகு நரம்பியல் டாக்டருடன் பேசினேன். அவர் கூறிய அறிவுரைப்படி நான் மருத்துவமனையில் சேர்ந்தேன்.

    பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். நான் எனக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்பை அலட்சியப்படுத்தி இருந்தால், மறுநாள் காலையில் தான் ஆஸ்பத்திரிக்கு போய் இருப்பேன். அவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால், மீதமுள்ள எனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாக இருந்திருப்பேன்.

    டாக்டர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நோயாளிகள் வந்தால் அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.
    • குமாரசாமி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தகவல்.

    பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் குமாரசாமி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • பா.ஜனதாவுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்
    • கட்சியை ஒழுங்கமைக்க குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்

    எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் எங்களை எதிர்க்கட்சிகளின் ஒரு அங்கமாக நினைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்களும், பா.ஜனதாவும் எதிர்க்கட்சிகள் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். தற்போது நாங்கள் மாநில நலனுக்காக இணைந்து செயல்பட இருக்கிறோம். இன்று காலையில் (நேற்று) கூட எங்களுடைய எம்.எல்.ஏ.-க்கள் இதை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்தோம்'' என்றார்.

    மேலும், தேவகவுடா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைவர்களின் கருத்துகளை கேட்டபிறகு, 31 மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கவும், கட்சியை ஒழுங்கமைக்கவும் அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி பாராளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டீர்களா? என்ற கேள்விக்கு,

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. தேர்தல் வரும்போது பார்க்கலாம். தற்போது கட்சியை ஒழுங்கமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு முடிவும் எடுக்க தேவகவுடா எனக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளார்.

    கர்நாடக மாநில எம்.எல்.ஏ. தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 135 இடங்களிலும், பா.ஜனதா 66 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்றும் ஆலோசனை நடைபெறும் நிலையில் கர்நாடகாவில் 3-வது பெரிய எதிர்க்கட்சியாக திகழும் மதசார்பற்ற ஜனதா தளத்தை இந்த கூட்டணியில் இணைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அதே வேளையில் பா.ஜ.க.வும் தங்கள் கூட்டணியில் ம.ஜ.த. கட்சியை இணைக்க ஆலோசித்து வருகிறது. இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக-ம.ஜ.த. இடையே கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. 2 கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். ம.ஜ.த. எங்களது கூட்டணியில் இணைந்தால் கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார். இது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-

    பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு வரவில்லை. அதனால் அந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். ஒருமித்த கருத்து இல்லாத அந்த கூட்டணியால் எந்த மாற்றமும் ஏற்படாது.

    எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை கணக்கில் வைக்கவில்லை. எங்கள் கட்சி மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியை அவர்கள் அழைக்கவில்லை. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அந்த கூட்டணிக்கு செல்வது குறித்து இன்னும் எங்களது கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவெடுப்பார்.

    இப்போதைக்கு எங்கள் கட்சியை பலப்படுத்துவது தான் எனது முக்கிய பணி. அதை நான் செய்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை
    • பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அழைக்கவில்லை

    காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இதற்காக 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலம் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கூறுகையில் ''எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளத்தை அவர்களின் ஒரு பகுதியாக கருதவே இல்லை. அதனால், மெகா கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்குமா? என்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்றார்.

    பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, ''எங்களை அவர்கள் அழைக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.

    ×