search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Propaganda"

    • நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.
    • தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பதி:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மாநிலம் விட்டு மாநிலங்கள் செல்வதற்காக வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு நாளைக்கு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்வதால் ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஹெலிகாப்டர்களுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஹெலிகாப்டர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இது கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகளவில் வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தென் மாநிலங்களை பொருத்தவரை தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிக அளவில் பிரசாரத்திற்கு வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மற்ற தென் மாநிலங்களில் இந்த அளவு ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

    பிரசாரத்தின் கடைசி நாள் வரை ஹெலிகாப்டர்கள் வாடகைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • பிரசாரம் செய்வது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் நடிகர் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது தவறாக பரவ விட்டுள்ளனர்.

    இந்த போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    • அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.
    • கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    செவெல்லா தொகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க.வினரின் பார்வையில் கடவுள் ஓட்டுக்காகவும் ராமர் இருக்கைக்காகவும் நிற்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.

    பா.ஜ.க. தலைவர்கள் போலியான இந்துக்கள். ஆனால் எங்களுக்கு ராமர் எப்போதும் ராமர் தான். அயோத்தி கோவிலில் சிலை பிரதிஷ்டை முன்பு ராமரை அவமதித்து புனித அரிசி விநியோகம் செய்து பா.ஜ.க. தலைவர்கள் ஏமாற்றினர். ரேசன் கடைகளில் சேகரிக்கப்படும் அரிசியில் மஞ்சள் தூள் கலந்து அதனை புனித அரிசி என ஏமாற்றி வினியோகம் செய்தனர். அரசியல் சட்டத்தை மாற்றவும் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் பா.ஜ.க. சதி செய்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது. அதன் தலைவர்கள் நாட்டையும் மக்களையும் அம்பானி அதானிகளிடம் அடகு வைக்க விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. என்பது பிரிட்டிஷ் ஜனதா கட்சி.யாரை கேள்வி கேட்டாலும் கைது செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
    • இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ராஞ்சி, மே. 4-

    பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.

    எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.

    உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.

    துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.

    ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.

    காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.

    கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.

    ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.

    வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.

    நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.

    மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.

    நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

    மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. "காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோ கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது" என அப்பட்ட மான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.

    நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றமாகும்.

    இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார்.

    இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் காந்தி ராணா கூறியதாவது:-

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக இருந்தது. 1480 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகள், வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் படி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லை வலுக்கட்டமாக வீசியதை கண்டறிந்துள்ளோம்.

    முதல் மந்திரி மீது கல் வீசியவர்களை போலீசார் கைது செய்ய உதவும் வகையில் தகவல் அளிப்ப வர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும்

    அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
    • கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று முன்தினம் பஸ் யாத்திரை பிரசாரம் செய்தார். அப்போது அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் வாகனங்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

    அடுத்தடுத்த கல் வீச்சு சம்பவங்களால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சந்திரபாபு நாயுடு பிரசாரக் கூட்டத்தில் விளக்கமளித்து பேசினார்.

    ஜெகன்மோகன் ரெட்டி கல் வீச்சில் காயம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் மீது கல்வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் ஒரு நாடகம் போல் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் பவன் கல்யாண் மீது கற்களை வீசப்பட்டது. இந்த சம்பவத்தை ஜெகன்மோகன் ரெட்டி கண்டிக்கவில்லை. பொது மக்கள் வாக்களிக்கும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரசாரம் வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பிரசாரத்துக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    இப்படி தேர்தல் பிரசாரம் 'களை' கட்டி உள்ள நிலையில் பிரதமர் மோடி சென்னையில் நேற்று ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்துக்கு 7-வது முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள பிரதமர்மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தியும் காங்கிரசிற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இப்படி தேசிய தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

    தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் சோதனைகளும் தீவிரமாகி உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகளும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.
    • தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு வீடு உத்தரவாதம் என்கிற அடிப்படையில் புதுவிதமான பிரசாரத்தை கையில் எடுக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் 8 கோடி வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு கேட்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

    இந்த பிரசார பயணம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பு தங்களது ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை பட்டியல் போட்டு எடுத்துச் செல்ல காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.

    இது தவிர சமூக ஊடகங்களை பயன்படுத்தியும் பிரசாரம் செய்ய காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர்.

    ஏப்ரல் 6-ந் தேதியில் இருந்து பிரசார பயணத்தின் போது வீடு வீடாக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் தமிழகத்துக்கு விரைவில் வர உள்ளனர்.

    இதையடுத்து தமிழக காங்கிரசார் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் புகளூர் காகித ஆலையில் நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்,

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து வரும் 25-ந்தேதி சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களி லும் நடைபெறும் சிறப்பு முகாம் குறித்து விளக்குவ தற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்க நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது.இதில் கரூர் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், புகழூர் நகராட்சி அதிகாரி, புகளூர் தாசில்தார் முருகன், செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் சீனிவாசன், பொது மேலாளர் கலைச்செல்வன், துணைப் பொது மேலாளர் இராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    • குளித்தலை அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது குளித்தலை ஆர்.டி.ஓ. ரவி தலைமையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் குடும்பத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வோட் 18 + என்ற அமைப்பில் மாணவர்களை அமர செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது, இதில் குளித்தலை வட்டாட்சியர் மகுடேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் துணை வட்டாட்சியர் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா , கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மல்லல் கிராமத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழித்தடத்தில் போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்து அரசு நிதியை கையாடல் செய்ததாக சமூக வலைதளங்களில் விஷமிகளால் பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு சட்டப்படி தக்க பதிலடி கொடுப்போம் என்று தி.மு.க திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் க.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பு ல்லாணி ஒன்றியம் மல்லல் கிராமத்தி லிருந்து ஆலங்கு ளம் செல்லும் வழித் தடத்தில் 2022-23-ம் நிதி யாண்டில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பா ட்டு நிதியி லிருந்து ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் செலவில் சாலை அமைப்பதற்காக திட்ட மிடப்பட்டது.

    பல்வேறு அலுவல் காரணமாக அந்த பணியானது தொடர்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த சூழலில் பணிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பணி செயல் கல்வெட்டினை அந்தப் பகுதியில் அமைத்து மறைத்து வைத்திருந்த நிலையில் மறைப்பை நீக்கிவிட்டு விஷமிகள் சிலர் அதனை படம் எடுத்து போடாத சாலைக்கு போட்டதாக போர்டு வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பணிக்கான அடிப்படை ஒப்பந்தம் மட்டுமே பெறப்பட்டுள்ளதோடு பணிக்கான செலவினத் தொகை ஏதும் எடுக்கவோ, விடுவிக்கப்படவோ இல்லாத நிலையில் அலுவல் பிரச்சினை காரணமாகவே இந்த சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது குறித்து தவறான தகவல் களை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தன்னுடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாலை பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக தெற்கு மல்லல் கிராமத் தலைவர் பொ.செல்லக் கருங்கு கூறிய தாவது:-

    சம்பந்தப் பட்ட வழித் தடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்பது தங்களு டைய நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் எடுத்து ரைத்ததோடு,அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த இருந்தார். இந்த சூழலில் அவருடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்ததாகவும்,சாலை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் நாங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அளந்து கொடுக்கிறோம் பிறகு சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலேயே தற்காலிகமாக அந்த சாலை பணியானது நிறுத்தப்பட்டது.

    அதற்கிடையில் தி.மு.க அரசுக்கும், எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராம லிங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கில் சிலர் தவறாக சித்தரித்து சமூக வலை தளங்களில் பரப்பி யுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உதயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடி வருகிறார். விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×