search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவம் ஒரு நாடகம் சந்திரபாபு நாயுடு பதிலடி
    X

    ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவம் ஒரு நாடகம் சந்திரபாபு நாயுடு பதிலடி

    • சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
    • கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று முன்தினம் பஸ் யாத்திரை பிரசாரம் செய்தார். அப்போது அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் வாகனங்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

    அடுத்தடுத்த கல் வீச்சு சம்பவங்களால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சந்திரபாபு நாயுடு பிரசாரக் கூட்டத்தில் விளக்கமளித்து பேசினார்.

    ஜெகன்மோகன் ரெட்டி கல் வீச்சில் காயம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் மீது கல்வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் ஒரு நாடகம் போல் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் பவன் கல்யாண் மீது கற்களை வீசப்பட்டது. இந்த சம்பவத்தை ஜெகன்மோகன் ரெட்டி கண்டிக்கவில்லை. பொது மக்கள் வாக்களிக்கும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×