search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடகை"

    • வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து உள்ள நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகையா என விமர்சித்து வருகின்றனர்.

    உலகம் முழுவதும் பெரிய நகரங்களில் குடியிருப்புகளின் வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஸ்டூடியோ அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.2 லட்சம் மாத வாடகை என பரவும் வீடியோ இணைய பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    அந்த வீடியோவில் ஒரு கழிவறை இருக்கை வசதியற்ற முறையில் கை கழுவுதற்கு இல்லாமல் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மிக சிறிய அடுக்குமாடி குடியிருப்பு என இன்ஸ்டாகிராமில் ரியல் எஸ்டேட் வியாபாரியான டேவிட் ஒகோச்சா என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து உள்ள நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகையா என விமர்சித்து வருகின்றனர். ஒரு பயனர், நீங்கள் இதுவரை பார்த்திராத மிக மோசமான இடவடிவமைப்பு இதுதானா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், ஒரு நில உரிமையாளராக இது சட்டவிரோதமானது. இந்த நில உரிமையாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பதிவிட்டார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
    • 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்

    அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.

    இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது‌.

    கடலூர்:

    இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் இயங்கி வருகின்றது.பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 139 கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடம், 26 மனை குடியிருப்புகள் உள்ளது. இதில் கட்டிடத்தில் ரூ.2 கோடி 11 லட்சத்து 47 ஆயிரமும், மனையில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 60 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.இதேபோல ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமாக கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடமாக 45 மற்றும் 6 மனை குடியிருப்பு உள்ளது. இதில் கட்டிட வணிகத்தில் ரூ.35 லட்சத்தில் 34 ஆயிரத்து 846, மனையில் ரூ.90 லட்சத்து 5 ஆயிரமும், மனை குடியிருப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 968 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் வாடகைதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.அப்போது பாடலீஸ்வரர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டிட வணிகம், மனை வணிகம் மற்றும் மனை குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது.ஆகையால் வருகிற ஒரு மாதத்திற்குள் வணிக பயன்பாட்டில் உள்ள வாடகைதாரர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ராஜகோபாலசாமி கோவில் சரவண ரூபன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்கள் பற்றிய முழு விபரம் அறிந்து, அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும்.

    முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். போலீசார் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.

    மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • வாடகை செலுத்தாத 3 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை களில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மூன்று கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் உடன் இருந்தனர்.

    • பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
    • கடைகளை கண்டறிந்து அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி க்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்த மான 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் அமைந்துள்ளது.

    இதன் வணிக வளாக கடை குத்தகைதாரர்களுக்கு பலமுறை அறிவிப்பு வழங்கியும், பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் குமரன் உத்தரவின் பெயரில், பட்டுக்கோட்டை நகராட்சியின் மேலாளர் விஜயாஸ்ரீ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் குழுவாக சென்று வடகை பாக்கி அதிகம் உள்ள கடைகளை கண்டறிந்து அதிரடியாக கடைகளை சூட்டி சீல் வைத்தனர். மேலும் வாடகை முறையாக செலுத்தாத கடைகள் மீது இந்த நடவடிக்கைகள் தொடரும் அன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தொகையினை முழுவதுமாக முறைப்படி செலுத்தினால் மட்டுமே கடைகளின் சீல் அகற்றப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தர்ஷியை சேர்ந்தவர் வரப்பிரசாத் (வயது 45). கோட்டா மிஷின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு சொந்தமான கடையை சீனிவாசலு என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்குவிட்டார். சீனிவாசலு சாமியானா பந்தல் போடும் கடை நடத்தி வந்தார்.

    சரிவர ஷாமியானா பந்தல் வாடகைக்கு செல்லாததால் சீனிவாசலுக்கு போதிய அளவு வருமானம் வரவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கடை உரிமையாளருக்கு சீனிவாசலு வாடகை பாக்கி தரவில்லை.

    வாடகை பாக்கி வராததால் வரப்பிரசாத்திற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் கடையை தீவைத்து எரிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை சாமியான பந்தல் கடைக்கு வந்த வரப்பிரசாத் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்றார்.

    பின்னர் கடையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தான் எடுத்துச் சென்று பெட்ரோலை ஷாமியானா பந்தல் மீது ஊற்றினார். அப்போது பெட்ரோல் சிதறி வர பிரசாத் மீது தெரித்தது.

    இதை எடுத்து வரப்பிரசாத் தீக்குச்சியை கொளுத்தி ஷாமியானா பந்தல் மீது வீசினார். சாமியான பந்தல் குபீரென தீ பற்றி எரிந்தது.

    அப்போது வரப்பிரசாத் மீது பெட்ரோல் பட்டதால் அவரது உடலிலும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.

    ஓங்கோல் ரீம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    • கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடைக்காரா்கள் தெரிவித்தனர்.
    • மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்

    பல்லடம்

    கொரேனா கால கட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடைகளை மூடிய 204 கடைக்காரா்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.

    இது குறித்து அவா் கூறியதாவது:-

    பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான அறிஞா் அண்ணா பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றில் மாத வாடகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வந்த 204 கடைக்காரா்கள் கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தங்களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

    இது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் எடுத்து கூறினாா்.இதையடுத்து 2020 ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் 2021 ம் ஆண்டு மே, ஜூன் என மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

    இதன் மூலம் பல்லடம் நகராட்சியில் 204 கடைக்காரா்கள் தற்போது பயன் அடைகின்றனா். அவா்களுக்கு ரூ.1கோடியே 45 லட்சத்து 42ஆயிரத்து 260 வாடகை தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இத்தொகையை பல்லடம் நகராட்சி நிா்வாகமே ஏற்றுக்கொள்கிறது என்றாா்.

    • 3 ஆண்டுகளுக்கு என்ற முறையில் அக்கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
    • புதிய ஒப்பந்தத்திற்கான நடவடிக்கையினை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ளது.

    நாகர்கோவில், ஜூன்.13-

    முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் பல பகுதிகளில் கடைகள் கட்டப் பட்டு, வியாபாரிகளின் வசதிக்காக ஏலம் மூலம் வாடகை நிர்ணயிக்கப்பட்டும், அதற்கான வைப்புத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தோவாளையில் 2016-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 11 புதிய கடைகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு என்ற முறையில் அக்கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடையின் வாடகையினை மாதந்தோறும் கட்டி வந்தனர். மேலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டுகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகையில் 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, தொடர்ந்து அந்தந்த மாதங்கள் தங்களுக்கான வாடகையினை கட்டி வந்தனர்.

    கடந்த 2 முறையும் இதே நடைமுறையில் இக்கடைகள் ஏலத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிலையில் வருகிற 30-ந்தேதியுடன் இக்கடைகளின் ஒப்பந்தம் முடிவடைவதனை முன்னிட்டு வருகிற ஜூலை 1-ந்தேதியிலிருந்து புதிய ஒப்பந்தத்திற்கான நடவடிக்கையினை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ளது.

    புதிய ஒப்பந்தத்திற்கு சென்ற வியாபாரிகளிடம் இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற ஒப்பந்தத்தை 5 ஆண்டாக மாற்றி உள்ளதாகவும், ஒதுக்கப்படு கின்ற கடைகளுக்கு வைப்புத்தொ கையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்ட வேண்டும் எனவும், வாடகை ஏலத்தின் தொடக்க தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கப் பட்டு அதிக ஏலம் கேட்பவர்க ளுக்கு அக்கடை வழங்கப்படும் என்றும், பின்னர் ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்ற வாடகையினை கடை ஒதுக்கப்படுகின்ற வியாபாரிகள் தங்களது வாடகையினை மாதம், மாதம் கட்டாமல் 5 வருடத்திற்கான மொத்த மாத வாடகையினை கட்டுவதுடன், மேலும் ஆண்டுதோறும் வாடகையில் 5 சதவீதம் கூடுதல் வாடகை கட்டணத்தையும் இதோடு சேர்த்து கட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு தோவாளையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏலம் விடப்படும் 11 கடைகளுக்கு வாடகையை மொத்தமாக கட்ட வலியுறுத்துவதை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
    • பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.

    ஈரோடு :

    ஈரோடு சம்பத் நகரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடம் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.

    பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளிக்கூட நிர்வாகம் அதன் பின்னர் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பலமுறை வாடகை கேட்டும் பள்ளிக்கூட நிர்வாகம் செலுத்தவில்லை.

    இதற்கிடையில் வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிர்ணயித்திருப்பதாக கூறி பள்ளிக்கூட நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதில் அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.

    எனினும் பள்ளிக்கூட நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சென்றனர். பின்னர் பள்ளியின் முன்பக்க கதவை பூட்டி 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் காரணமாக இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    • திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் கன்னியாகுமரி பகுதியில் வீட்டில் வைத்து விபசாரம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சுசீந்திரத்தில் ஒரு வீட்டில் இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

    இதற்கிடையில் மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் ஈடன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்தப்படு வதாக புகார் வந்தது. மார்த்தாண்டம் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, குழித்துறை பெரியவிளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 45) என்பவர் வெளிமாநில அழகிகளை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் ஆரல்வாய்மொழியில் திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்கி ருந்த பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

    • வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும்.
    • மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    கோவில் நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், கோவில் உரிமை கோரும் கிராம நத்தம், இனாம் நத்தம், இனாம் நிலம், குடிக்காணி, பட்டின மனை போன்ற இடங்களின் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் குடிக்காணி குத்தகை சாகுபடிதாரா்கள் சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், குடிக்காணி சங்க தலைவா் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

    மேலும், ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், கோவில் செயல் அதிகாரி அறிவழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் தனியரசு நன்றி கூறினார்.

    ×