search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம்
    X

    வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம்

    • குளித்தலை அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது குளித்தலை ஆர்.டி.ஓ. ரவி தலைமையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் குடும்பத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வோட் 18 + என்ற அமைப்பில் மாணவர்களை அமர செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது, இதில் குளித்தலை வட்டாட்சியர் மகுடேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் துணை வட்டாட்சியர் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா , கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×