search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை
    X

    சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை

    • சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மல்லல் கிராமத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழித்தடத்தில் போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்து அரசு நிதியை கையாடல் செய்ததாக சமூக வலைதளங்களில் விஷமிகளால் பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு சட்டப்படி தக்க பதிலடி கொடுப்போம் என்று தி.மு.க திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் க.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பு ல்லாணி ஒன்றியம் மல்லல் கிராமத்தி லிருந்து ஆலங்கு ளம் செல்லும் வழித் தடத்தில் 2022-23-ம் நிதி யாண்டில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பா ட்டு நிதியி லிருந்து ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் செலவில் சாலை அமைப்பதற்காக திட்ட மிடப்பட்டது.

    பல்வேறு அலுவல் காரணமாக அந்த பணியானது தொடர்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த சூழலில் பணிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பணி செயல் கல்வெட்டினை அந்தப் பகுதியில் அமைத்து மறைத்து வைத்திருந்த நிலையில் மறைப்பை நீக்கிவிட்டு விஷமிகள் சிலர் அதனை படம் எடுத்து போடாத சாலைக்கு போட்டதாக போர்டு வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பணிக்கான அடிப்படை ஒப்பந்தம் மட்டுமே பெறப்பட்டுள்ளதோடு பணிக்கான செலவினத் தொகை ஏதும் எடுக்கவோ, விடுவிக்கப்படவோ இல்லாத நிலையில் அலுவல் பிரச்சினை காரணமாகவே இந்த சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது குறித்து தவறான தகவல் களை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தன்னுடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாலை பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக தெற்கு மல்லல் கிராமத் தலைவர் பொ.செல்லக் கருங்கு கூறிய தாவது:-

    சம்பந்தப் பட்ட வழித் தடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்பது தங்களு டைய நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் எடுத்து ரைத்ததோடு,அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த இருந்தார். இந்த சூழலில் அவருடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்ததாகவும்,சாலை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் நாங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அளந்து கொடுக்கிறோம் பிறகு சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலேயே தற்காலிகமாக அந்த சாலை பணியானது நிறுத்தப்பட்டது.

    அதற்கிடையில் தி.மு.க அரசுக்கும், எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராம லிங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கில் சிலர் தவறாக சித்தரித்து சமூக வலை தளங்களில் பரப்பி யுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உதயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடி வருகிறார். விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×