search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சி"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரசாரம் வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பிரசாரத்துக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    இப்படி தேர்தல் பிரசாரம் 'களை' கட்டி உள்ள நிலையில் பிரதமர் மோடி சென்னையில் நேற்று ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்துக்கு 7-வது முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள பிரதமர்மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தியும் காங்கிரசிற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இப்படி தேசிய தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

    தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் சோதனைகளும் தீவிரமாகி உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகளும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் நேற்று பவுர்ணமி நாளில் எல்லா அரசியல் கட்சி வேட்பாளர்களும் வரிசையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களுடன் முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றைய தினத்தை மிகவும் நல்ல நாளாக கருதியதால் 75 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சிகளில்தான் இன்னும் சிலர் மனுதாக்கல் செய்வதற்கு நாளைய தினத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரின் சொத்து விவரங்கள், மனைவியின் சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டி உள்ளதால் ஒரு முறைக்கு இருமுறை அவற்றை சரி பாார்த்து வழக்கறிஞருடன் ஆலோசித்த பிறகே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கட்சியினர் அவரவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் வேட்பு மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர்.

    வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் என்பதால் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் நாளை மனுதாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

    கடலூர்:

    பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

    இதையொட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நீண்ட நேரமாக வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே காத்திருந்தனர்.

    இது மட்டுமின்றி தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குபதிவு எந்திரத்தில் பல்வேறு சங்தேகங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்ட அறையின் பூட்ட திறக்கபட முடியாமல் இருந்து வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

    • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
    • அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரிக்கலாம்.

    அரசியல் கட்சிகளிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள், நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

    ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு  அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது. 

    • எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.
    • விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களின்போது குழந்தைகளை பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் பிரசார மேடைகளில் குழந்தைகளை பேசவைப்பது, முழக்கமிட வைப்பது, துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது.

    எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது, எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

    கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் தேர்தலின் போது குழந்தைகளை எந்த விதத்திலும் பயன்படுத்துவதில் பூஜ்ஜிய தன்மையை உறுதிபடுத்த வேண்டும்.

    குழந்தைகளை தங்கள் கைகளில் வைத்திருப்பது, சுமப்பது உட்பட எந்த வகையிலும் ஈடுபடுத்தக்கூடாது. வாகனத்தில் அல்லது பேரணியில், கவிதை, பாடல், பேச்சுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.

    வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துதல், அரசியல் பிரசாரத்தின் சாயலை உருவாக்க குழந்தைகளை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தேர்தல் வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இதை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம்.

    மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்வு ஜூன் 21ம் தேதி அன்று சிவசேனா இரண்டாக பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது.

    ஷிண்டே முகாம் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார்.

    ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. மேலும், 53 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவும் முடியாது.

    ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம் எனவும் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    • சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
    • துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    சுகதேவ் தனது வீட்டில் இன்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டது.

    இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பார்வையாளர் சரவணவேல்ராஜ் பங்கேற்பு
    • “18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

    நாகர்கோவில், நவ.26-

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவண வேல்ராஜ் பங்கேற்று அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 883 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும், 143 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். 1698 வாக்குச்சா வடிகள் உள்ளன" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் கூறியதாவது:-தேர்தலுக்கு முந்தைய நாள் வரை 18 வயது நிரம்பிய தகுதியா னவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யும்போது அந்த வாக்காளர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்த பிறகு நீக்கம் செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாறி உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் சில வாக்காளர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டி யுள்ளது. எனவே அந்த வாக்காளர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கா ளர் பட்டியலில் பெயர் நீக்கம் தற்போது அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. வீடுகள் மாறி இருந்தால் கூட அதிகாரிகள் அந்த வாக்காளர்களின் பெயர் களை நீக்கி விடுகிறார்கள்.

    எனவே முறையாக ஆய்வு செய்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஆண்கள், பெண்கள் மற்றும் பொது என பிரிக்கப்பட்டு எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது? என்று தெரிவிக்கப்படும். ஆனால் தற்போது வரை அந்த தகவல் தெரிவிக்கவில்லை. அதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முக வேல்ராஜ் பேசியபோது, "18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். யாரும் விடுபட்டு விடக்கூடாது. இதற்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யும்போது அதற்கான படிவங்கள் முறையாக வழங்கப்பட்டால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வாக்குச்சாவடியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை. 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆண், பெண் மற்றும் பொது என வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டும்" என்றார்.

    முன்னதாக டதி பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகவேல்ராஜ் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கூட்டத்தில் வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணி யம், சப்-கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தி.மு.க. சார்பில் வர்கீஸ், பா.ஜனதா சார்பில் ஜெகதீசன், அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கிமுத்து, தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள்
    • பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று நாகர்கோ வில் வேப்ப மூட்டில் உள்ள மார்சல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வா கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். நிகழ்ச்சி யில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், தாசில்தார் ராஜா சிங், ஒன்றிய செயலாளர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்போலோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள நேசமணி சிலைக்கு அரசி யல் கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்துரு, ராணி துணை செயலாளர் சுகுமா ரன், இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், இளைஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வெங்கடேஷ் ஜெயகோபால், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்சயாகண்ணன், பகுதி செயலாளர் முருகேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜா பிள்ளை, வக்கீல் சுந்தரம் மற்றும் ரபீக் உள்ளிட்ட நிர்வாகி கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநக ராட்சி மண்டல தலைவர் செல்வகுமார்,இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • 88-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    • காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் சிவபிரபு, டைசன், சீனிவாசன் ஆதிலிங்கபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் அகஸ்தீசன், சரவணன் பீனிக்ஸ் கண்ணன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். இதில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், சந்திரசேகரன், ஆர்.எம்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், சேகர், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, ஜெயகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் தங்கவேல், மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனீஸ், துணைத் தலைவர் யூஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் தியாக ராஜன், பிரதீஸ், மார்த்தாண்டன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
    • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

    தாராபுரம் :

    வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

    'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

    2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.எம். சண்முகம் தலைமையில்,பல்லடம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் செல்வராஜ், வீரபாண்டி பகுதி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஓ.பி.எஸ்.சிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இதே போல பா.ஜ.க.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இரும்பு உருக்காலை அனுமதியின்றி இயங்கிய விவகாரத்தில் துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.

    ×