என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jose Charles Martin"

    • விஜய் பாணியில் அரசியல் பிரவேசம்.
    • காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் சார்லஸ் மார்ட்டின்.

    ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மல்லை சத்யா நேற்று திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், டிசம்பரில் தானும் ஒரு கட்சியைத் தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வருபவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வருபவர். இதனால் சார்லஸ் பாஜகவின் 'பி டீம்' எனவும் புதுச்சேரி காங்கிரஸ் பல விமர்சனங்களை முன்வைத்தது.  

    இந்நிலையில் டிசம்பரில் தான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். 2026-ல் பாஜக சார்பில் போட்டியிடுவார் என பலரும் நினைத்திருந்த நிலையில், திடீரென புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஜார்லஸ், "டிசம்பர் மாதத்தில் கட்சி அறிவிக்கப்படும். தொடர்ந்து பாதயாத்திரை உள்ளிட்ட விஷயங்களை திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.

    அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 30 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஜே.சி.எம் மக்கள் மன்றம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது.

    புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் சார்லஸ் மார்ட்டின் கலந்துகொண்டு, வணிகர்கள் நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், அங்காளன், ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் 50 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் 30 சதவீதம் பேர் வெளியூர் சென்று வேலை பார்ப்பதாகவும் கூறினார். மேலும் வணிகர்கள் சுலபமாக வணிகம் செய்ய ஒற்றை சாளர முறையை (Single Window System) உருவாக்க வேண்டும் எனவும், இங்கு ரவுடீசம் அதிகமாக உள்ளது என தொழில் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே பல தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வருவதில்லை. இனி வரும் காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

    மேலும் புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது அவற்றை பண்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். மக்களும் அதைதான் விரும்புகிறார்கள், அது நிச்சயம் நடக்கும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நம்பிக்கை தெரிவித்தார்.

    ×